உங்களை முன்னேறவே விடாமல் தடுக்கும் எந்த சக்தியையும் விரட்டி அடிக்க ஞாயிற்றுக்கிழமையில் ஒரு முட்டையை வைத்து இதை செய்தால் போதும். இனி உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது.

sad man muttai
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் அவனை பின்னோக்கி தள்ளி விட பல அடிகள் முன்னெடுத்து பலர் வந்து நிற்பார்கள். இது ஒவ்வொரு மனிதரும் சந்திக்க கூடிய பிரச்சனை தான். இன்று ஒருவர் நன்றாக வாழ்வதை பார்த்து யாரும் சந்தோஷப்படும் மனநிலையில் கிடையாது. நமக்கு கிடைக்கவில்லையே என்றும் அது அவர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் தான் பெரும்பாலானோர் மனதில் இருக்கிறது.

இந்த கெட்ட எண்ணத்தின் காரணமாகவே அவர்களுடைய வளர்ச்சியை தடுத்து எல்லா விதமான தீய செயல்களையும் செய்ய தயாராகி விடுகிறார்கள். அது அவர்களுடைய எண்ணத்தினாலாகவும் இருக்கலாம் அல்லது வேறு சில கெட்ட சக்திகளாலும் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடிக்க கூடிய ஒரு அருமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கண் திருஷ்டி கெட்ட சக்தி அனைத்தையும் விரட்டி அடிக்க
இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் செய்யும் பொழுது இதற்கான பலன் கூடுதலாக கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் கையில் ஒரே ஒரு முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் வீட்டுக்குள் இருந்தும் செய்யலாம் ஆனால் பூஜை அறையில் செய்ய வேண்டாம்.

இந்த முட்டையை உங்களுடைய வலது கையில் வைத்து முதலில் உங்கள் இரு புருவங்களுக்கு இடையே இந்த முட்டை உங்க உடலில் படும்படி வைத்து எனக்குள் இருக்கும் கெட்ட சக்திகள் எதிர்மறை எண்ணங்கள் என்னை சூழ்ந்திருக்கும் தீயவை அனைத்தும் என்னை விட்டு செல்கிறது என்று மனதில் ஆழமாக பதிய விட்டு வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்து இதே போல் முட்டையை உங்களுடைய தொண்டையில் வைத்து இதே போன்ற வார்த்தைகளை மறுபடியும் சொல்லுங்கள்.

- Advertisement -

மூன்றாவதாக இந்த முட்டை உங்களுடைய மார்பில் வைத்து இரண்டு கைகளையும் பிடித்தவாறு எனக்குள் இருக்கும் கெட்ட சக்திகள் தீய எண்ணங்கள் அனைத்தும் வெகு விரைவில் வெளியேற வேண்டும் என்று மிக ஆழமாக இப்போது நீங்கள் வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த முட்டையை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மரத்தின் மீது எறிந்து உடைத்து விட வேண்டும்.

இதில் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது வேப்பமரம், அசோக மரம், வில்வ மரம், போன்ற தெய்வீக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் மரங்களின் மேல் இதை போடக் கூடாது. பல இடங்களில் கருவேல மரம் போன்ற காட்டுச் செடிகள் மரங்கள் உள்ளது அதன் மீது இந்த முட்டையை தூக்கி எறிந்து விடுங்கள்.

இதையும் படிக்காலமே: பூஜை செய்ய இயலவில்லையா? இந்த ஒரு சிவ மந்திரத்தை முறையாக இப்படி உச்சரித்தாலே போதும். நம்முடைய ஞாயமான ஆசைகள் எதுவாயினும் நிறைவேறும்.

இந்த பரிகாரத்தை செய்த ஒரு வாரத்திற்குள்ளாகவே உங்களுக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்வதை உணர்வீர்கள். உங்களுடைய செயல்கள் எல்லாம் புதிய உத்வேகத்துடன், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியையும் தந்து, முன்னேற்ற பாதையில் விரைவாக செல்வதற்கான வாய்ப்புகள் பெருகும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற கருத்துதோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -