உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருப்பதை ஒரே நாளில் அறிந்து கொள்ள உருளியில் பூவை இப்படி செய்து பாருங்கள்!

uruli3
- Advertisement -

நம்மை சுற்றி இருக்கும் அனைத்துமே நமக்கு நன்மையை செய்யக்கூடியது மட்டுமே அல்ல! நன்மையும், தீமையும் ஒன்றர கலந்து இருப்பது தான் பிரபஞ்சம். நேர்மறை ஆற்றல்கள், எதிர்மறை ஆற்றல்கள் என்று அறிவியல் ரீதியாக கூறப்படுவது உண்டு. இதை ஆன்மீக ரீதியாக நல்ல சக்திகள், தீய சக்திகள் என்று கூறுகின்றோம் அவ்வளவுதான் வித்தியாசம். தீய சக்திகள் என்கிற எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் இருப்பதை எளிதாக தெரிந்து கொள்ள இந்த ஒரு விஷயத்தை செய்யலாம்! அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம் மனதை எடுத்துக் கொண்டோமேயானால் ஒருபுறம் உங்கள் மனம் நீங்கள் விரும்பியதை செய்ய சொல்லும். இன்னொருபுறம் உங்களுக்கு விருப்பமானதாக இருந்தாலும் அதில் இருக்கும் நன்மை, தீமைகளை பிரித்து உங்களுக்கு எடுத்துரைக்கும். அதில் நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து தான் உங்களுடைய வாழ்க்கை அமைகிறது.

- Advertisement -

விரும்பியதை செய்ய சொல்லும் மனமா? அல்லது உங்களுக்கு எது நல்லது? என்று எடுத்துக் கூறுகிறதே அந்த மனம் சொல்வதைக் கேட்பீர்களா? நாம் விரும்பியதை செய்ய சொல்லும் மனதை விட நமக்கு எது நல்லது சொல்கிறதோ அந்த மனதை நாம் பின்பற்றி நடந்தால் சிரமமான விஷயமாக இருந்தாலும் அதை கடந்து போன பின்பு உங்களுக்குள் ஒரு கர்வம் உண்டாகும். எப்படியோ ஒரு தவறான விஷயத்திலிருந்து நாம் தப்பித்து விட்டோம் என்கிற இறுமாப்பு தொற்றிக் கொள்ளும்.

இப்படி சரியான முடிவு எடுப்பதற்கு உங்களுடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் குறைந்து, நேர்மறை ஆற்றல் பெருகி இருக்க வேண்டும். உங்களை தவறான திசையில் திருப்பி கொண்டு செல்லும் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்துள்ள இல்லத்தில் அடிக்கடி துர் சம்பவங்கள் நிகழலாம். இயற்கை மரணமாக இல்லாமல் துர் மரணங்கள் நிகழ்வது, உயிரினங்களின் பலி, கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது போன்றவை செய்யும் இல்லத்தில் எதிர்மறை ஆற்றல்கள் பெருகுகின்றது. இதனை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

- Advertisement -

பூக்களைக் கொண்டு தீய சக்திகள் நம் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை எளிதாக கண்டறியலாம். ஒரு பெரிய அளவிலான மண்பாண்டம் அல்லது பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன உருளி ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருளியில் எப்பொழுதும் பூக்களை மிதக்க விட்டால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் ஒழிந்து நிம்மதியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதுவே தொழில் ரீதியான உருளி வைத்தால் திருஷ்டி கழிந்து அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள்.

ஆனால் இப்படி நாம் புதிதாக தயாரித்து வைக்கும் பொழுது அந்த பூக்கள் குறைந்தது மூன்று, நான்கு நாட்களாவது அப்படியே பிரஷ்ஷாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில இல்லங்களில் பூக்களை வைத்து மறுநாள் அது அழுகி போய் விடும். தண்ணீரில் மிதக்க விடும் பூவானது ஒரே நாளில் அழுக நேர்ந்தால், அங்கு எதிர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். ஒரே நாளில் பூக்கள் தண்ணீரில் அழுகினால் அங்கே தீய சக்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதனை தவிர்க்க வீட்டில் வெண்கடுகு தூபம் போடுவது, பஞ்சகவ்ய விளக்கு கொண்டு தீபம் ஏற்றுவது, கோவிலுக்கு சென்று எண்ணெய் தானம் செய்வது போன்றவற்றை செய்யலாம். ரொம்பவே எளிதாக செய்யக்கூடிய இந்த வழிமுறையை நீங்களும் இதே மாதிரி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -