ஜனவரி 2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

bairavar
- Advertisement -

சில குடும்பங்களில் காலகாலமாக, பல தலைமுறைக்கு கஷ்டங்கள் தொடரும். பல தலைமுறைகள் அந்த குடும்பம் கஷ்டத்திலேயே தான் வாழ்ந்து வந்திருக்கும். இப்படி விடாமல் துரத்தும் உங்கள் குடும்ப கஷ்டங்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்க வேண்டும் என்றால், கஷ்டங்கள் எல்லாம் தேய்பிறை நிலவு போல தேய்ந்து கொண்டே போக வேண்டும் என்றால், நாளைய தினம் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு ஏற்ற வேண்டிய 5 சிறப்பான விளக்குகளை பற்றிய தகவலைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் எப்பாடு பட்டுவாவது இந்த வழிபாட்டை செய்து விடுங்கள். உங்கள் குடும்ப கஷ்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு

நாளை வியாழக்கிழமை 4-1-2024 இரவு 10 மணி வரை, தேய்பிறை அஷ்டமி திதியானது இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி திதியில் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி, கால பைரவரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாளைய தினம் வியாழக்கிழமை மதியம் 1:30 மணியிலிருந்து 3.00 மணி வரை ராகு கால நேரம் இருக்கிறது.

- Advertisement -

சிவன் கோவில்கள் இந்த நேரத்தில் திறந்து இருந்தால் அந்த சமயம் காலபைரவருக்கு பின் சொல்லக்கூடிய ஐந்து விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். ஆனால் சில கோவில்கள் இந்த நேரத்தில் திறந்து இருக்காது. பரவாயில்லை, கோவில் இந்த ராகு கால நேரத்தில் திறக்கவில்லை என்றால், நாளைய தினம் மாலை 6.00 மணிக்கு மேல் தேய்பிறை அஷ்டமிக்கு காலபைரவருக்கு சிவன் கோவில்களில் சிறப்பான அபிஷேகங்கள் நடக்கும். அந்த  சமயத்தில் கோவிலுக்கு செல்லுங்கள்.

இன்றே, ஐந்து மண் அகல் விளக்குகளை புதுசாக வாங்கி தண்ணீரில் போட்டு ஊறவைத்து, இன்றே காய வைத்துக் கொள்ளுங்கள். நாளை அந்த புது மண் அகல் விளக்குகளை கோவிலுக்கு எடுத்து செல்லுங்கள். நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், 5 எண்ணெய்களை வாங்கிக் கொள்ளவும்.

- Advertisement -

தனித்தனியாக ஒவ்வொரு அகல் விளக்கில், ஒவ்வொரு எண்ணங்களை ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்றி காலபைரவரை மனம் உருகி வேண்டிக் கொண்டால், பல தலைமுறைகளாக தொடரும் உங்க  கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதில் கடன் சுமையும் அடங்கும். வீட்டில் இருந்து வந்த பண பிரச்சனையும் அடங்கும். பணப்பிரச்சனை அல்லாது மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் அதை சரி செய்யவும் இந்த பரிகாரம் பலனளிக்கும்.

ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக சேர்க்காதீர்கள். ஐந்து எண்ணெகளையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு போய், நீங்கள் வாங்கிய ஐந்து புது மண் அகல்விளக்குகளில் தனித்தனியாக ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி பைரவரை வணங்கினால் நிச்சயம் கஷ்டம் தீரும். உங்களால் முடிந்தால், அபிஷேக பொருட்களை பைரவருக்கு வாங்கிக் கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பீரோவில் பணம் சேர்க்கும் பரிகாரம்

சிவப்பு நிற பூக்களை வாங்கிக் கொண்டு போய் பைரவருக்கு சாத்துங்கள். முடிந்தால் புனுகு வாங்கி பைரவருக்கு தானம் கொடுக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய சவுகரியத்தை பொறுப்பித்தது. பல தலைமுறைகளாக தொடரும் உங்கள் குடும்ப பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த வழிபாடு நிச்சயம் கைமேல் பலனை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -