பீரோவில் பணம் சேர்க்கும் பரிகாரம்

perumal
- Advertisement -

கட்டு கட்டாக சலவை நோட்டுகளை அடுக்கி வைத்தால் தான் பீரோவிற்கு ஒரு அழகு. பீரோவில் எதுவுமே வைக்காமல், வெற்றிடமாக வைத்திருந்தால் பீரோவுக்கும் மகிழ்ச்சி இருக்காது. நம்முடைய மனதிற்கும் மகிழ்ச்சி இருக்காது. தேவைகள் நிறைய இருக்கிறது, தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றால், பீரோவை திறந்தால் அதில் பணம் காசு இருக்க வேண்டும்.

இதற்கு நாம் என்ன செய்வது. முதலில் பணத்தை சம்பாதிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்‌. வெறும் பரிகாரங்கள் மட்டும் பணத்தை கொடுக்காது. பரிகாரங்களோடு சேர்ந்த முயற்சிகள், உங்களுடைய முயற்சிகளில் சீக்கிரத்தை வெற்றியை பெற்று தரும்.

- Advertisement -

பீரோவில் பணம் சேர்க்கும் பரிகாரம்

முயற்சிகளோடு சேர்த்து இன்று இந்த பரிகாரத்தையும் கொஞ்சம் செய்து பாருங்கள். அப்படி என்ன இன்று அற்புதம் வாய்ந்த நாள். புது வருடம் பிறந்திருக்கிறது. எல்லோரும் 2024 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த வருடத்தில் முதல் புதன்கிழமை இது. பெருமாளை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இன்று மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக வெந்தயம், பச்சை பயிறு, பச்சை கற்பூரத்தை போட்டு கலந்து பூஜையறையில் வைத்து விடுங்கள். மனதார பிராத்தனை செய்து கொள்ளுங்கள். இந்த வருடம் முழுவதும் எனக்கு பணவரவு பெருக வேண்டும். பீரோவில் தேவைக்கு ஏற்ப பணம் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை ஆழ் மனதில் வைத்து, பூஜையை முடித்துவிட்டு, இந்த 3 பொருட்களையும் எடுத்து அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் தூவி விடுங்கள்.

- Advertisement -

இன்று சரியாக இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த மூன்று பொருளையும் எடுத்து பீரோவில் வைக்கவும். இந்த நேரத்தில் புதன் ஹோரை இருப்பதால், இது பரிகாரத்திற்கு சிறப்பான நேரமாக சொல்லப்பட்டுள்ளது. கிண்ணத்தில் தான் இந்த 3 பொருட்களை வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் பரவலாக இதை தூவி விட்டால், உங்கள் பீரோ முழுவதும் பரவலாக அடுக்கி வைக்கும் அளவுக்கு பணம் சேரும். இது ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரம் தான். பெருமாளை நினைத்து இன்று வீட்டில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு பல வழிகளில் பணம் வீடு தேடி வர தொடங்கி விடும்.

- Advertisement -

தாந்திரீக பரிகாரங்களில் வெந்தயத்திற்கும் பச்சை கற்பூரத்திற்கும் பணத்தை ஈர்த்து தரக்கூடிய சக்தி உள்ளது. பெருமாளுக்கு உகந்த பச்சை கற்பூரத்தை வெந்தயத்தோடும், பச்சைப்பயிரோடும் சேர்த்து வைக்கும் போது, இதில் இரண்டு மடங்கு பலனை நம்மால் பெற முடியும். அடுத்த 3 புதன்கிழமை வரை இந்த 3 பொருட்களும் பீரோவில் இருக்கட்டும். 3 வாரம் கழித்து இந்த பொருட்களை எல்லாம் எடுத்து மண்பாங்கான இடத்தில் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இடைப்பட்ட இந்த 3 வாரத்தில் உங்கள் பண கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைத்திருக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது மனநிறைவு இருக்கிறது எனும் பட்சத்தில் அடுத்த புதன்கிழமையும் இதே போல பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

வாரம் தோறும் புதன்கிழமை என்றால் ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை நீங்கள் தானம் கொடுக்க வேண்டும். எப்படி என்றால் செவ்வாய்க்கிழமை இரவே பச்சைப்பயிறை தண்ணீரில் ஊற வைத்து, அதை கொண்டு போய் பசு மாட்டுக்கு தானம் செய்யலாம். அப்படி இல்லை என்றால். அந்த பச்சை பயிரை காக்கை குருவிகளுக்கு உங்கள் கையால் இறையாக போடலாம்.

இதையும் படிக்கலாமே: வெற்றிக்கு மேல் வெற்றி கொடுக்கும் மந்திரம்

இந்த தானம் உங்கள் கர்ம வினைகளை குறைக்கும். புதன் என்றால் புத்தி திறமை செல்வாக்கு. புதனுக்குரிய பச்சைப்பறையில் இந்த தானம் செய்யும் போது, உங்களுடைய திறமைகள் வளரும். அதனால் நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகள் வருமானத்தை பெருக்கிக் கொடுக்கும். அவ்வளவுதான். எளிமையான பரிகாரங்கள் தான். ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரங்களை பின்பற்றும்போது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -