தேம்பாமை, சினத்தின் கேடு – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai
- Advertisement -

பாரதியார் கவிதைகள் பலவற்றை நாம் படித்திருப்போம். அதில் தேம்பாமை என்ற தலைப்பில் அவர் எழுதிய அற்புதமான கவிதை இதோ.

தேம்பாமை

“வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான்பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பி தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!

- Advertisement -
Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

சினத்தின் கேடு

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்

சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்

- Advertisement -
Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;
வையகத்தில் எதற்கும்இனிக் கவலை வேண்டா;
சாகாம லிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்;
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியிலேதுவந்தால் எமக்கென் னென்றே.

இதையும் படிக்கலாமே:
உபதேசம் – பாரதியார் கவிதை

பாரதியார் கவிதைகள், திருக்குறள் மற்றும் தமிழ் சார்ந்த பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have two Bharathiayr kavithai one is Thembaamai and another one is Sinathin Kedu in Tamil. This is also called as Bharathiyar padal in Tamil.

- Advertisement -