ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் தங்க வேண்டுமென்றால் அந்த வீட்டில் தென்மேற்கு மூலையில் இந்த பொருட்கள் தான் இருக்க வேண்டும்.

vasthu
- Advertisement -

ஒரு வீடு செல்வ செழிப்போடு சந்தோஷமாக இருப்பதற்கும் வறுமையில் வாடி வதங்குவதற்கும் காரணம், அந்த வீட்டின் வாஸ்து சாஸ்திரம் தான். ஒருவருக்கு வீடு வாஸ்து சாஸ்திரப்படி லட்சணமாக அமைந்துவிட்டால் வரக்கூடிய கஷ்டங்கள் கூட சுலபமாக கடந்து போகும். அதுவே வீட்டில் வாஸ்து சாஸ்திரம் சரியில்லை, எனும்போது வராத பிரச்சனைகள் கூட வீடு தேடி வரத் தொடங்கும். வீட்டில் இருக்கக்கூடிய நிம்மதி கெட்டுப் போகும். அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டிடங்களும் வானளர்ந்து உயர்ந்து நிற்கின்றது. இடப்பற்றாக்குறை காரணமாக தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தால் போதும் என்று நாமும் ஏதோ ஒரு வீட்டை லோன் வாங்கி நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம். இல்லையென்றால் ஒரு வாடகை வீட்டுக்கு குடி போகின்றோம். ஆனால் அந்த வீடு நமக்கு ராசியாக இருக்குமா நம்முடைய ஜாதகத்திற்கு அந்த வீட்டின் வாஸ்து சாஸ்திரம் செட் ஆகுமா என்றெல்லாம் பார்க்கும் அளவுக்கு இன்றைய சூழ்நிலை கிடையாது.

இருப்பினும் நம் வீட்டில் இருக்கும் கஷ்டங்களை சரி செய்ய, வீட்டில் இருக்கும் வறுமையை போக்க வீட்டில் மகாலட்சுமி நிலையாக குடியிருக்க ஒரு சில வாஸ்து சாஸ்திரங்களை கவனித்து தான் ஆக வேண்டும். அதன் அடிப்படையில் இன்று நம் வீட்டு தென்மேற்கு மூலை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய வாஸ்து சாஸ்திர குறிப்பை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

தென்மேற்கு மூலை வாஸ்து:
பொதுவாகவே இந்த தென்மேற்கு திசை என்பது நேர்மறை ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கக் கூடிய திசையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இதை குபேர மூலை என்றும் சொல்லுவார்கள். ஒரு வீட்டில் குபேர மூலையானது எப்போதும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் துர்நாற்றம் வீசக்கூடாது. தென்மேற்கு மூலையில் கதவு ஜன்னலோ இருக்கும் பட்சத்தில் அந்த கதவில், அந்த ஜன்னலில் விநாயகர், ஹனுமன், ஓம், சுவஸ்திக், இப்படிப்பட்ட ஏதாவது ஒரு படத்தை மாட்டி வைப்பது நன்மையை தரக்கூடிய விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

தென்மேற்கு மூலையில் எப்பவும் நறுமணம் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம். ஒரு உறுளியில் தண்ணீர் ஊற்றி அது நிரம்ப பன்னீர் ரோஜாவை போட்டு வைக்கலாம். அப்படி இது எதுவுமே கிடைக்கவில்லை என்றால் பத்து ரூபாய்க்கு மல்லி பூவை வாங்கி வைக்கலாம். இப்படி தென்மேற்கு மூலை எந்த அளவுக்கு நறுமணத்தோடு இருக்கின்றதோ அந்த அளவுக்கு உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தாலும் அது நல்லது தான். எதுவுமே இல்லையா இரண்டு ஏலக்காய் கிராம்பை எடுத்து அந்த தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து விடுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் வாசம் நீங்க நீங்க புதுசாக மாற்றி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். சமையல் அறையில் தென்மேற்கு மூலையில் பச்சரிசி, ஊறுகாய், இப்படி மகாலட்சுமி அம்சம் நிறைந்த பொருட்களை வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தீராத கடனிலும் வறுமையிலும் துன்பப்படுபவர்கள் ஆடி செவ்வாய்யில் அம்பிகையை ஒரு முறையாவது இப்படி வழிபாடு செய்தால் இவையெல்லாம் நீங்கி செல்வ செழிப்புடன் இன்பமாக வாழலாம்.

இதையும் தாண்டி வீட்டில் இருக்கும் கடன் சுமை குறைய பணக்கஷ்டம் தீர இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு சின்ன சிவப்பு துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று ஆழ்மனதில் நம்பிக்கையோடு சொல்லி இந்த முடிச்சை தென்மேற்கு மூலையில் வைத்து விடவும். தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த முடிச்சுக்கு ஊதுவத்தி காண்பித்து வர கடன் சுமை படிப்படியாக குறைவதையும். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிப்பதையும் கண்கூடாக பார்க்கலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -