வீட்டின் தென்மேற்கு மூலையில் இந்த 3 பொருட்களை வைத்தால், 3 தலைமுறைக்கும் பணக்கஷ்டம் வராது. மன கஷ்டம் வராது. வீடு சந்தோஷத்தில் நிறைந்து இருக்கும்.

room-home-cash
- Advertisement -

நம்முடைய குடும்பம் வறுமையில் வாடாமல் இருக்க பல தலைமுறைகளுக்கு சந்தோஷமாக செல்வ செழிப்போடு வாழ்வாங்கு வாழ இந்த சின்ன பரிகாரம் உதவியாக இருக்கும். நாமும் நம் குடும்பமும் நமக்கு வரக்கூடிய அடுத்த தலைமுறைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் பின்பற்ற வேண்டிய விஷயம் இதுதான். எந்த சூழ்நிலையிலும் பிறருக்கு கெடுதல் நினைக்கக் கூடாது. அடுத்தவர்களுக்கு நாம் எதை நினைக்கின்றோமோ அதுதான் நம்மையும் நம் குடும்பத்தையும் வந்து சேரும்.

அடுத்தவர்களுக்கு நல்லதே நடக்கட்டும் என்று நினைத்தால், நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது அது பாட்டுக்கு நடக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை. இதற்காக பெரிய அளவில் நீங்கள் எந்த சிரமமும் பட வேண்டாம். நமக்கு தீங்கு நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கூட கெடுதல் நடக்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய மனப்பக்கத்தை கொண்டு வந்து விடுங்கள்.  உங்களுக்கும் உங்கள் அடுத்த தலைமுறைக்கும் எந்த பாதிப்பும் வராமல் அந்த இறைவனே பார்த்துக் கொள்வான். இதுதான் முதல் வழி. இதைப் புரிந்து கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் துன்பமே வராது.

- Advertisement -

இது தவிர நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு, தன தானியத்திற்கு எந்த குறைவும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், குலதெய்வ ஆசிர்வாதத்தோடு குடும்பம் தழைத்தோங்க வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய இந்த சுலபமான பரிகாரத்தை பின்பற்றலாம். மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றும்போது பரிகாரம் உங்களுக்கு பல மடங்கு பலனை கொடுக்கும். அதாவது யாருக்கும் கெடுதல் நினைக்காமல் வாழ்பவர்களுக்கு பரிகாரமும் சீக்கிரம் முழு பலனை கொடுக்கும்.

ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குலதெய்வத்தை வேண்டி ஒரு கைப்பிடி கல் உப்பு, இரண்டு விரலி மஞ்சள், 2 கொட்டை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் 1, இந்த பொருட்களை எல்லாம் வைத்து சிறிய முடிச்சாக கட்டி அப்படியே தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். தென்மேற்கு மூலையில் சிறிய ஆணி அடித்து அதில் மாட்டி வைத்தால் கூட போதும். இந்த மூட்டைக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமை ஊதுபத்தி காண்பித்து வணங்கிக் கொள்ளும் போது இறை சக்தி அதில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும்.

- Advertisement -

இந்த முடிச்சு உங்கள் வீட்டில் இருக்கும் போது குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் முழுமையாக கிடைக்கும். அந்த மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் முழுமையாக கிடைக்கும். குடும்பம் சுபிட்சம் பெறும். குடும்பத்தில் வறுமை இருக்காது. பணக்கஷ்டம் வராது.

இந்த முடிச்சை நீங்கள் தயார் செய்யக்கூடிய நேரம் என்பது வியாழக்கிழமை குரு ஓரையாக இருப்பது மிக மிக சிறப்பு. அந்த நேரத்தையே தேர்ந்தெடுத்து இந்த முடிச்சை தயார் செய்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கக்கூடிய பழைய பொருட்களை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய பொருட்களை மாற்றி வைத்தால் கூட போதும்.

இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம்தான் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். குடும்பத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து உங்கள் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து செல்வ செழிப்போடு வாழ்வாங்கு வாழும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -