வீட்டின் தென்மேற்கு மூலையில் இந்த முடிச்சு இருந்தாலே போதும். வராத பணம் கூட உங்கள் வீடு தேடி வர தொடங்கும்.

vasthu
- Advertisement -

பணம் என்றாலே அது ஒரு வகையான பிரச்சனை தான். பணம் இருப்பவர்களுக்கும் பிரச்சனை. பணம் இல்லாதவர்களுக்கும் பிரச்சனை. பணம் இருப்பவர்களுக்கு அதை எப்படி பாதுகாப்பது என்பதில் பிரச்சனை. பணம் இல்லாதவர்களுக்கு அதை எப்படி சம்பாதிப்பது என்பதில் ஒரு பிரச்சனை. ஆக பணம் நிறைய இருந்தாலும் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. பணம் கையில் இல்லை என்றாலும் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. கோடி கோடியாக சொத்து சேர்த்து நாம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, நம்முடைய தேவைக்கு ஏற்ப பணம் சம்பாதித்து, தேவைக்கு ஏற்ப மட்டும் சேமிப்பை வைத்துக் கொள்வது நம்முடைய வாழ்க்கைக்கு நல்லது.

சரி, பதிவிற்குள் செல்வோம். நீங்கள் கொடுத்த கடனை உங்களால் திரும்பவும் வசூல் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தாலும், கடனாக கொடுத்த நகையை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்படக் கூடிய சூழ்நிலை இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் வாங்கிய கடனை அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியாமல் உங்களுக்கு வருமானத்தில் பிரச்சனை இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -

வீட்டின் கன்னிமூலை என்று சொல்லப்படும் தென்மேற்கு மூலை நம்முடைய வீட்டில் சுத்தமாக இருக்க வேண்டும். நேர்மறை ஆற்றல் நிறைந்த இடமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் குப்பை கூளங்களை சேர்க்க வேண்டாம். ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கல் உப்பு 1 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், கருப்பு எள்ளு 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் வைத்து ஒரு சிறிய முடிச்சாக கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள்.

இதை அப்படியே எங்காவது ஆணியில் மாட்டி வைத்தாலும் சரி தான். அப்படி இல்லை என்றால் சிறிய கிண்ணத்திலோ, ஒரு டம்ளரிலோ இந்த முடிச்சை போட்டு திறந்தபடி வைத்தாலும் சரிதான். ஆனால், டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இதனுடைய ஆற்றல் வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பொருட்களும் தென்மேற்கு மூலையில் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் வீட்டில் பணம் வருவதற்கான நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

- Advertisement -

வாராக் கடன் வசூலாகும். வராத பணம் உங்கள் வீடு தேடி வரும். ஒருவேளை நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுக்க வேண்டியதாக இருந்தால், உங்களுக்கு வருமானத்தில் சிக்கல் இருந்தால், அதில் இருக்கக்கூடிய தடைகளும் சரியாவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயமாக கைகொடுக்கும். இந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கக்கூடிய பொருட்களை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றினாலே போதும். வெள்ளைத்துணியில் கட்டாயமாக இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கட்டி வையுங்கள். வெள்ளை காட்டன் துணையாக இருக்கட்டும்.

அடுத்தபடியாக இந்த பரிகாரத்தை செய்தாலும், தினம்தோறும் இறை வழிபாடு செய்வதில் எந்த குறையும் வைக்கக் கூடாது. பணம் சம்பந்தப்பட்ட, கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கக்கூடிய தெய்வம் பைரவர். இந்த பைரவரை தினம்தோறும் வழிபாடு செய்ய வேண்டும். அது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் சரி, வீட்டிலிருந்தபடி தீபம் ஏற்றி வைத்து விட்டு பைரவர் நாமத்தை உச்சரித்து வழிபாடு செய்தாலும் சரி, பைரவர் வழிபாடு உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வை கொடுக்கும், என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. பிரச்சினைகள் இருந்தாலும் பிரச்சனைகள் இல்லை என்றாலும் பைரவரின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நாம் அவருடைய காவலில் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்லலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -