திடீர் பணவரவை ஏற்படுத்தும் கொத்துமல்லி பரிகாரம்

cash coriyander
- Advertisement -

பணம் வேண்டாம் என்று சொல்லும் நபர் ஒருவரும் கிடையாது. எனக்கு ஆடம்பர வாழ்க்கையில் ஆசை இல்லை என்று சொல்பவர்கள் கூட பணத்தை ஓடி ஓடி சம்பாதித்து சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனெனில் பணம் இல்லாமல் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாள் வாழ்வது கூட இயலாத ஒன்று.அத்தகைய பணம் நாம் சம்பாதிக்க சம்பாதிக்க தான் பெருகிக் கொண்டே இருக்கும். இதுவும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்படி சம்பாத்து வாழ்ந்து வந்தாலும் இதையும் மீறி திடீரென பணத் தேவை அதிகமாக இருக்கும். அது போன்ற சமயங்களில் பணம் நம் கைக்கு வர வேண்டும் என நினைத்தவுடன் பணம் வரவும் சில தாந்திரீக முறைகள் உள்ளது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் அப்படி நினைத்த மாத்திரத்தில் நம் தேவைக்கு பணம் கிடைக்க செய்ய கூடிய எளிய பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

திடீர் பணம் பரவை ஏற்படுத்தும் கொத்தமல்லி பரிகாரம்

பணவரவை அதிகரிக்க பல தாந்த்ரீக முறைகள் இருந்தாலும், அதில் இது மிகவும் எளிமையான முறை தான். அதே நேரத்தில் நம் வீட்டில் இருக்கக் கூடிய ஒரு பொருளைக் கொண்டே செய்யக் கூடியது. அது வேறொன்றும் இல்லை கொத்தமல்லி இலைகள் தான். நாம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.

அந்த வகையில் இந்த கொத்தமல்லி இலைக்கும் பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி அதிகமாக உள்ளது. அந்த கொத்தமல்லியை நம் வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு பவுலில் வைத்து வர வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கட்டாயமாக மாற்றி விடுங்கள் . இப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வீட்டில் பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இது திடீர் பணவரவை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

அடுத்த பரிகாரமும் மிகவும் எளிமையான ஒன்று தான். அதுவும் நம் வீட்டில் அன்றாட பயன்படுத்தக் கூடிய பொருளான அரிசியை வைத்து தான் செய்யப் போகிறோம். இதற்கு ஒரு கண்ணாடி பௌலில் அரிசியை எடுத்து கொள்ளுங்கள். இந்த அரிசியை சமையல் அறையில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் வருமானத்தை ஈட்டி வரக்கூடிய குடும்ப தலைவன் அல்லது குடும்பத் தலைவி இவர்கள் கையால் அந்த அரிசியில் ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டும். ஒரு வீட்டில் இருவருமே வருமானத்தை ஈட்டுபவர்களாக இருந்தால் இருவரும் இதை செய்யலாம்.

- Advertisement -

இதில் குறிப்பிட்ட அளவிற்கு நாணயங்கள் சேர்ந்த பிறகு அதை எடுத்து ஏதாவது நல்ல காரியத்திற்கு செலவழித்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் அரிசியை காகம் அல்லது பறவைகளுக்கு இரையாக வைத்து விடுங்கள். இதையும் தினந்தோறும் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளை வெல்ல வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் முறை

இந்த பரிகாரத்தையும் செய்யும் போதும் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். நமக்கு வர வேண்டிய இடத்தில் இருந்து தேவைக்கு பணம் கிடைக்கும். இப்படி பணம் தொடர்பான அனைத்து விசயத்திற்கும் இந்த பரிகாரம் தீர்வு என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு பரிகார முறையிலும் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -