எதிரிகளை வெல்ல வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் முறை

dhupam
- Advertisement -

எதிரிகளை வெல்லவும் எதிரியால் ஏவி விடப்படும் ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், கண் திருஷ்டியால் நமக்கு தோல்விகள் ஏற்படாமல் இருக்கவும், செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் ஒன்றைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சாதாரண சாம்பிராணி தூபம் போடும் புகைதான். இந்த புகையை வீட்டில் போட்டால் உங்கள் வீட்டில் துஷ்ட சக்திகள் நெருங்காது. எதிரிகளால் உங்களை அவ்வளவு சீக்கிரத்தில் வீழ்த்த முடியாது. அந்த சாம்பிராணி தூபப் புகை போடும் போடியை எப்படி தயார் செய்வது அதில் என்னென்ன பொருட்களை எல்லாம் சேர்ப்பது என்ற தகவலை தொடர்ந்து பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

எதிரிகளை சமாளிக்க சாம்பிராணி தூபம் போடும் முறை

மருதாணி இலை, மருதாணி பூ, மருதாணி விதை, பேய் விரட்டி இலை, வெள்ளை குங்கல்யம், சிவப்பு சந்தனம், வெண்கடுகு இந்த பொருட்களை எல்லாம் வாங்கி நிழலிலேயே காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் இந்த பொருட்கள் எல்லாம் காய்ந்ததாகவே கடைகளில் கிடைக்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு உரலில் போட்டு இடித்தாலும் சரி, அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டிக் கொண்டாலும் சரி, அது உங்களுடைய சவுகரியம். இந்த பொருட்கள் எல்லாம் சேர்ந்து கொரகொரப்பாக பொடி போல நமக்கு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

இதைக் காற்று போகாத டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்யவும். வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை சாம்பிராணி தூபம் போடும்போது அந்த நெருப்பில் இந்த பொடியை சேர்த்து வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தூபம் போட்டால், வீட்டை பிடித்த துஷ்ட சக்தியானது விலகி ஓடோடி விடும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் நெருங்காது.

இந்த பரிகாரத்தை செய்தால் எதிரிகளால் வரக்கூடிய சூழ்ச்சிகளை கூட நம்மால் முறியடிக்க முடியும். இந்த புகையிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் எதிரிகளுடைய சூழ்ச்சியை நம் பக்கம் நெருங்க விடாது என்று சொல்லப்பட்டுள்ளது. சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள அருமையான பரிகாரம் இது. இதை தொழில் செய்யும் இடத்திலும் போடலாம்.

- Advertisement -

கண் திருஷ்டி படாது, போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் இருந்து தப்பிக்க இது ஒரு எளிமையான சூட்சம முறை. நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம். ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நேரடியாக போட்டி போட்டு சண்டை போடும் எதிரியை கூட சமாளித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பிறந்த நட்சத்திரத்தை வைத்து முன்னோர்கள் சாபம் நம் குடும்பத்திற்கு இருக்குதா என்பதை கண்டுபிடிக்க எளிமையான வழிகள்

ஆனால் நம் பின்னால் நின்று நமக்கு துரோகம் செய்து முதுகில் குத்தும் எதிரியை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த சின்ன எளிய பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்யும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்தான் பரிகாரம். இதில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கையே இல்லை என்பவர்கள் பரிகாரத்தை முயற்சி செய்தாலும் நிச்சயம் பலன் தராது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -