தினமும் இதை மட்டும் பார்த்தால் போதும். அடுத்தவர்கள் கண் திருஷ்டியால் உங்கள் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராது.

amman-vilakku
- Advertisement -

அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியில் இருந்து நாம் தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழி என்ன தெரியுமா. நம்மை பற்றி எந்த விஷயத்தையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. நிறைய பேர் இதை ஒற்றுக்கொள்வார்கள். நிறைய பேர் இதை ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும், உங்கள் குடும்ப விஷயங்களை ரொம்ப ரொம்ப நெருங்கிய சொந்த பந்தம் நண்பர்களிடத்தில் கூட உண்மையாக பகிர்ந்து கொண்டால், அது உங்களுக்கு கண் திருஷ்டியை கொடுத்து விடும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சந்தோஷத்தையும் குறைத்து விடும். அதற்காக வெறும் கஷ்டத்தை மட்டுமே வெளியில் சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது. யார் எதை கேட்டாலும் அதற்கு நாசுக்காக ஒரு பதிலை சொல்லத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்கள் குடும்பத்தை ஆராய்ச்சி செய்வது தான் அவர்களுக்கு வேலையாக இருக்கும். அடுத்தவர்களுடைய வீட்டில் எவ்வளவு வருமானம் வருகிறது. பக்கத்து வீட்டில் தினமும் என்ன சமைக்கிறார்கள். எதிர் வீட்டில் தினமும் என்னவெல்லாம் நடக்கிறது. என்று நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு நீங்கள் ஒரு சில விஷயங்களில் பொய் சொல்லி தான் ஆக வேண்டும். அது தவறு கிடையாது. அதனால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்து விடாது.

- Advertisement -

உதாரணத்திற்கு உங்கள் கணவருக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டால் தேவைக்கு ஏற்ப வருகிறது என்று சொல்லுங்கள்.  எக்காரணத்தைக் கொண்டும் வருமானத்தை வெளியில் சொல்ல வேண்டாம். குழந்தைகள் நன்றாக படிக்கிறார்களா என்று கேட்டால், உங்கள் பிள்ளை வகுப்பில் முதன்மை இடத்தில் இருந்தால் கூட அதை வெளியே சொல்லாதீங்க. நல்லா தான் படிப்பான் அப்படின்ற ஒரு வார்த்தையோட நிறுத்திக் கொள்ளுங்கள். இப்படி தோண்டி துருபவர்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்து கொள்ளுங்கள். சரி இப்படிப்பட்ட கண் திருஷ்டியில் இருந்து நாம் தினம் தினம் தப்பிக்க ஏதாவது ஒரு வழி இருக்கா. அதுக்கும் ஆன்மீகத்தில் ஒரு வழி சொல்லப்பட்டுள்ளது.

தினம் தினம் கண் திருஷ்டி படாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
கெட்டதை அழிக்கக்கூடிய சக்தி அக்கினி பகவானுக்கு தாங்க உண்டு. நெருப்பு, நம்முடைய வீட்டில் தினமும் காலையில் எழுந்து பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த தீபச்சுடரை பார்த்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அவர்களை எந்த கண் திருஷ்டியும் அண்டாது. எல்லா நேரத்திலும் வீட்டில் காலையில் விளக்கு ஏற்றக்கூடிய சூழ்நிலை அமையாது.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டிற்கு விளக்காகி இருந்தால் என்ன செய்வது. வீட்டில் இருக்கும் மற்றவர்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம். ஒரு சில பேர் அதை செய்ய மாட்டாங்க. பூஜை அறையை திறக்கவே மாட்டாங்க. ஒரு சின்ன அகல் விளக்கில் ஒரு கற்பூரம் வைத்து வரவேற்பு அறையில் கூட அதை ஏற்றி வைத்து விடலாம். அந்த சுடரில் குலதெய்வத்தை நினைத்தும் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது உங்களுக்கு கண் திருஷ்டி அண்டாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வாராகி அம்மனை நினைத்து இந்த பொருளை நிலை வாசலில் கட்டி விட்டால் போதும். உங்களைஅழிக்க நினைக்கும் எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்க கிட்ட கூட நெருங்க முடியாது.

அந்த நெருப்பை நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்றால் உங்களுக்குள் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வந்துவிடும். அந்த பாசிட்டிவ் எனர்ஜி அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி பொறாமை குணம் இப்படி எதையும் உங்களை நெருங்க விடாது. நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக வேலை செய்வீர்கள். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்கள் என்று எல்லோரும் இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -