தினமும் பெண்கள் இந்த மந்திரத்தை சொன்னால் குடும்பத்தில் பணக்கஷ்டம் இருக்காது. குடும்பம் செல்வ செழிப்போடு ஓஹோ என வாழ்வாங்கு வாழும்.

- Advertisement -

ஒரு குடும்பம் முன்னேறுவதற்கும், ஒரு குடும்பம் சீரழிவதற்கும் காரணம் அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தான். இதை எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் ஆணித்தனமாக அடித்து சொல்லலாம். ஒரு வீட்டுப் பெண் திறமையாக செயல்பட்டு குடும்பத்தை நடத்தவில்லை என்றால், நிச்சயம் அந்த குடும்பத்தில் பிரச்சனைகள் வரும். குடும்பத்தில் இருக்கும் ஒற்றுமை சீர்குலையும். குடும்பம் பிரிந்து தான் போகும். ஆகவே, குடும்பப் பெண்களுடைய பேச்சு செயல் நடவடிக்கை எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் தேவை.

குடும்பம் சுபிட்சம் பெற பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு:
பெண்கள் நிச்சயமாக அதிகாலை வேலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். குடும்ப தலைவிக்கு இந்த பொறுப்பு நிச்சயம் உண்டு. உங்களுடைய பெண் குழந்தை சின்ன பிள்ளையாக இருக்கிறது பள்ளிக்கூடம் செல்கிறது எனும் போது அந்த பெண் பிள்ளை தூங்கட்டும் தவறு கிடையாது.

- Advertisement -

ஆனால் எதிர்காலத்தில் அந்த பெண் பிள்ளை செல்லக்கூடிய வீட்டில் எப்படி நடக்க வேண்டும் என்பதை நீங்கள் மறக்காமல் சொல்லிக் கொடுத்து விடுங்கள். குடும்ப தலைவியாக இருக்கக்கூடிய நீங்கள் பொறுப்போடு காலையில் எழுந்து வாசல் கூட்டி கோலம் போட்டு வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு தான் அன்றைய நாளை துவங்க வேண்டும்.

சில நாட்கள் இந்த பழக்கத்தை கொண்டு வந்து விட்டால் பிறகு நீங்களே நினைத்தாலும் இதை மாற்றிக் கொள்ள முடியாது. உங்களுடைய நாளை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து துவங்கி பாருங்கள். அந்த நாள் முழுவதும் மனசு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். சரி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

கௌரி மந்திரம்:
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!!

நிறைய பேருக்கு இந்த மந்திரம் தெரிந்திருக்கும். தெரியாதவர்களாக இருந்தால் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இது கௌரி மந்திரம். காலையில் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை இருக்கும் போது கூட பெண்கள் இந்த மந்திரத்தை மனதில் ஒரு முறை சொல்லிவிட்டு வேலையை தொடங்கலாம். அடிக்கடி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொன்னாலும் தவறு கிடையாது. இந்த மந்திரத்தை வீட்டில் இருக்கும் பெண்களின் வாயால் உச்சரிக்க உச்சரிக்க வீட்டின் வறுமை நீங்கும். நாள் பட உங்களுடைய வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

இதையும் படிக்கலாமே: பௌர்ணமி நிலவு போல் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்க பௌர்ணமி அன்று இந்த தீபத்தை மறக்காமல் ஏற்றுங்கள். கடன் இல்லாமல் செல்வ செழிப்போடு எளிய வாழ தீப வழிபாடு.

குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் தினமும் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக செவ்வாய்க்கிழமை இந்த மந்திரத்தை சொல்லி மங்கள சண்டிகையை வழிபாடு செய்தால் உங்கள் மனம் போல் வாழ்க்கை அமையும். திருமண வாழ்க்கை பிரச்சினை ஆகாது. அதேபோல குடும்ப தலைவிகள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பெண் பிள்ளைகளுக்கு கூட இந்த மந்திரத்தை, சொல்லிக் கொடுத்து அடிக்கடி சொல்ல சொல்லுங்கள். தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -