இனிக்க இனிக்க இனிப்பான வாழ்க்கை அமைய, மனதிற்கு பிடித்தவர்களை கரம் பிடிக்க இந்த 3 செடிகளை ஒரே சட்டியில் வைத்து வளர்க்க வேண்டுமாமே உங்களுக்கு தெரியுமா?

couple-chedi
- Advertisement -

வீட்டில் செடிகள் வைத்து வளர்ப்பது நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டுமல்லாமல் வாஸ்து ரீதியாகவும் பல்வேறு நலன்களை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் துளசி செடியை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் வறுமை ஏற்படாது என்று கூறப்படுகிறது. அது போல ஒவ்வொரு செடிக்கும், ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி உண்டு. அந்த வகையில் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொண்டு இனிக்க இனிக்க திருமண வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல திருமணமாகாதவர்கள் செய்யக்கூடிய எளிய பரிகாரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் அல்லது ஆண்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொண்டு நிம்மதியான திருமண பந்தத்தை தொடர்வதற்கு நிறையவே போராட வேண்டியிருக்கிறது. இடையில் எவ்வளவோ இடையூறுகளைத் தாண்டி திருமணம் என்னும் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்க தயாராக இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நல்ல பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

ஒரு சில செடிகளை தனியாக வைத்து வளர்ப்பதை காட்டிலும், வேறு ஒரு செடியுடன் சேர்த்து வைத்து வளர்க்கும் போது அதற்கு பலன்களும் இரட்டிப்பானதாக இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக வெற்றிலை செடியை எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை செடியை தனியாக வைத்து வளர்த்தால் வீட்டில் குழந்தை பாக்யம் தடைபடும் என்கிற கருத்து உண்டு. வெற்றிலை கொடியுடன் வேறு சில செடிகளையும் சேர்த்து வைத்து வளர்த்தால் வம்சம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

அது போல திருமண வாழ்க்கையில் இணைய இருப்பவர்கள் இனிக்க இனிக்க பிரச்சனைகள் அற்ற வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு ஒரு மண் தொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய தோட்டத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரே இடத்தில் இந்த மூன்று செடிகளையும் சேர்த்து நட்டு வையுங்கள்.

- Advertisement -

கரும்புச் செடி, மஞ்சள் செடி மற்றும் மருதாணி செடி இந்த மூன்று செடிகளையும் ஒரு சட்டியில் வைத்து வளர்த்தால் பட்ட கஷ்டங்கள் யாவும் தீர்ந்து இனி வர இருக்கும் காலங்களில் இனிப்பான வாழ்க்கை அமையும் என்பது நியதி. இதை திருமணமாகாதவர்கள் செய்யும் பொழுது ஜாதக ரீதியாக உங்களுக்கு இருக்கும் தோஷங்களும் நிவர்த்தியாகி விடுகின்றன. இதனால் திருமண வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே தீர்த்து வைக்கும் நல்லதொரு பரிகாரமாக இது அமைகிறது.

மஞ்சள் செடியில் இருக்கும் மருத்துவ குணங்களும், ஆன்மீக குண நலன்களும் அனைவரும் அறிந்ததே! கசப்பான பாவங்களையும், கசப்பான தோஷங்களையும் நீக்கக் கூடிய சக்தி கரும்பிற்கு உண்டு. கரும்பை வீட்டில் வைத்து வளர்கலாமா? என்கிற சந்தேகமும் பலருக்கு இருக்கும். நிச்சயம் கரும்பு செடியை வீட்டில் வைத்து வளர்த்தால், வீட்டில் இனிப்பான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். கரும்பு செடியை வீட்டிற்கு முன்புறம் வைத்து வளர்ப்பதை விட, பின்புறம் வைத்து வளர்ப்பது விசேஷமானது. அது போல மகாலட்சுமியின் பரிபூரண அருள் பெறுவதற்கு மருதாணி செடியையும் கட்டாயம் வீட்டில் வைத்து வளர்க்கலாம், எனவே இம்மூன்று செடிகளையும் ஒரே தொட்டியில் வைத்து வளர்ப்பது தோஷங்களை நீக்கி திருமண வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறது, நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க.

- Advertisement -