வெகுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருக்கும் தடைகள் விலகி, விரைவில் உங்கள் வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்க இந்த ஒரு தீபத்தை விநாயகர் கோவிலில் ஏற்றி வையுங்கள்

thengai-deepam
- Advertisement -

இன்றைய சமூகம் பல விதமான பிரச்சனைகளை பார்த்து வருகிறது. ஆனால் ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப்படும் திருமண வைபவத்தில் பலவிதமான சிக்கல்கள் உண்டாகின்றன. இன்றைய காலத்தில் பெண்கள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கின்றனர். எப்பொழுதும் ஆண்களை விட பெண்களே சற்று புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும் இருக்கிறார்கள். ஆனால் சிறுவயதில் தனது வருங்கால வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளாமல் இருக்கும் ஆண்கள் திருமணமாகாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு விதமான நபர்களுக்கும் ஒவ்வொரு வகையிலான திருமண பிரச்சனைகள் உண்டாகின்றன. இந்த திருமண தடைகள் அனைத்தும் விலகி விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இந்த தேங்காய் தீபத்தை விநாயகர் கோவிலில் ஏற்றி வர வேண்டும். வாருங்கள் இதனை எவ்வாறு முறையாக செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.கோவில் கோவிலாக சென்று வந்தாலும், பரிகாரங்கள் பல செய்தாலும் இன்னும் என் மகனுக்கு கல்யாண யோகம் வரவில்லை. திருமணத்திற்கு பெண் பார்க்கிறோம் அனைத்தும் சரியான வழியில் தான் செல்கிறது, ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நடைபெறாமல் நின்று விடுகிறது. இப்படி பல பெற்றோர்கள் மற்றவர்களிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் மன உளைச்சலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இப்படி பெற்றோர்கள் அவர்களது மனக்கவலையை பலரிடம் புலம்பிக் அவர்களின் பாரத்தை கொஞ்சம் இறக்கி வைக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு தயாராக நிற்கும் அந்த நபரின் மன உளைச்சல் மற்றவருக்கு புரிவதில்லை. அவர்கள் படும் பாட்டை எவரும் உணர்வதில்லை. இப்படி அவர்கள் மற்றொருவய் கேட்கின்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் தனக்கு தானாகவே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

எந்த கவலையை, துன்பத்தை வேண்டுமானாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் எனக்கு இன்னும் ஏன் கல்யாணம் ஆகவில்லை என்பதை பற்றி பிறரிடம் பேச முடியாது. எனவே உனக்கு எப்போது கல்யாணம் என்று கேட்பவர்களிடம் இவர்கள் பதில் சொல்வதையும், பேசுவதையுமே நிறுத்தி விடுகிறார்கள். அப்படி திருமணத்திற்கான பல தடைகள் வந்து கொண்டிருப்பதால் அவற்றை நிவர்த்தி செய்ய இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள்.

இதனை நிச்சயம் திருமணம் ஆக வேண்டிய நபர் மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கப் பெறும். இதற்கு விநாயகரின் பிரசித்திபெற்ற கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு முழு தேங்காயை வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை சுத்தமாக கழுவிக் கொண்டு, இரண்டு பாதியாக உடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய் எண்ணெயை நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு மஞ்சள் வஸ்திரங்களை எடுத்து, அதனுள் சிறிதளவு கோதுமையை வைத்து மூட்டையாக கட்டி, தேங்காய் எண்ணெயில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர விரைவில் திருமண தடைகள் விலகி நல்ல வரன் கிடைக்கும்.

- Advertisement -