இந்தக் குச்சிகள் இருந்தால் போதும் தடைபட்ட உங்கள் திருமண காரியங்கள் 90 நாட்களில் கைகூடிவரும். அதற்கு ஏன் இவ்வளவு சக்தி?

- Advertisement -

முந்தைய காலங்களில் எல்லாம் சிவ பார்வதியை வணங்கி வந்தால் திருமண வைபோகம் கைகூடும் என்று கூறுவார்கள். எம்பெருமான் ஈசன் தண்ணில் பாதியை உமையவளுக்கு கொடுத்ததால் தம்பதியர் ஒற்றுமைக்கு சிவ பார்வதியை வழிபட சொல்வார்கள். ஊரில் திருமணத்தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியத்தில் தடை இருப்பவர்கள் அரசையும், வேம்பையும் சேர்த்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த குச்சிகள் இருந்தால் எத்தகைய திருமண தடையும் நீங்கி விரைவாக நல்ல விஷயங்கள் கைகூடிவரும் என்று நம்பப்பட்டு வருகிறது. அதைப் பற்றிய தகவல்களை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

arasu-vembu-kalyanam

அரச மரத்தை சிவபெருமான் ஆகவும், வேம்பு மரத்தை உமையவளாகவும் பாவித்து அவர்களுக்கு பட்டு உடை உடுத்தி திருமண வைபவங்கள் எல்லாம் சிறப்பாக நடத்தி வைப்பார்கள். இப்படி செய்வதால் ஊரில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உண்டு. அரசும், வேம்பும் இணைந்த மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கினால் கேட்ட வரம் கேட்ட படியே கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அரச மரம் மற்றும் வேம்பு மரத்தை கோவில்களுக்கு தானம் செய்வதும் உண்டு.

- Advertisement -

அரசு மற்றும் வேம்பு மரத்தை வேரோடு கொண்டு சென்று சிவன் கோவில்களில் நட்டு வைத்து அதற்கு அபிஷேகங்கள் செய்து மனதார வழிபட்டால் எத்தகைய தோஷங்களும் நீங்கி தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பால், பன்னீர் மற்றும் மஞ்சளால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் கண்களில் அரசு மற்றும் வேம்பு இணைந்த மரங்களை கண்டால் அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு ஒன்பது முறை வலம் வாருங்கள் அதிர்ஷ்டம் உண்டாகும்.

siva-parvathi

மேலும் ஆண்களுக்கு ஏற்பட்ட திருமண தடை நீங்க சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரஹ சந்நிதிக்கு சென்று அங்குள்ள செவ்வாய் பகவானை 9 வாரங்கள் வழிபட்டு வர வேண்டும். 9-வது வாரத்தில் நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானை மனமுருகி வேண்டி வணங்கினால் மனதிற்குப் பிடித்த நல்ல மனைவி உங்களுக்கு துணையாக வாய்க்கும். அதே போல பெண்களுக்கு ஏற்பட்ட திருமண தடை நீங்க சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சன்னிதியில் வீற்றிருக்கும் சுக்கிர பகவானை வழிபட வேண்டும். 9 வாரங்கள் சுக்கிரனை வேண்டி தவமிருந்து வழிபட்டு, ஒன்பதாவது வார இறுதியில் சுக்ரனுக்கு நெய் தீபம் ஏற்றி சிவனையும், சுக்ரனையும் வழிபட திருமணத் தடை நீங்கி விரைவில் மனதிற்கு பிடித்தமான மணவாளனை மணமுடியும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு சிறுசிறு பரிகாரங்கள் கூட உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பெரும் குறையை நீக்கும். அந்த வகையில் அரசு மற்றும் வேம்பு குச்சிகளை கொஞ்சமாக ஒடித்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி காப்பு போல கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் வரை அதாவது ஒரு மண்டலம் வரை இதனை அவிழ்க்காமல் மனதில் ஈசனின் நாமத்தை உச்சரித்தபடி அசைவ உணவு எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் 90 நாட்களில் உங்களுடைய குறைகள் யாவும் நீங்கி மனதிற்கு பிடித்தபடி நல்ல வரன் அமையும்.

சுபகாரியத் தடைகள் நீங்க வேம்பு மற்றும் அரச மர குச்சிகளுக்கு அவ்வளவு சக்தி உண்டு. மாதவிலக்கு சமயங்களில் மட்டும் பெண்கள் இதனை அவிழ்த்து பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது. அதன் பிறகு மீண்டும் எடுத்து கட்டிக் கொள்ளலாம். நாற்பத்தி எட்டு நாட்கள் முடிவடைந்த பின்பு கையில் கட்டியிருக்கும் காப்பை ஓடும் தண்ணீரில் விட்டு விடுங்கள். இவ்வாறு செய்ய அனைத்து திருமண தடைகளும், தோஷங்களும் நீங்கி நல்லபடியாக திருமணம் நடக்கும்.

- Advertisement -