திருமண தடை விலக பரிகாரம்

amman maruthani
- Advertisement -

திருமணம் நடைபெறாமல் தடைப்பட்டு கொண்டிருக்கும் பலரும் பல பரிகாரங்களை செய்திருப்பார்கள். பல ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். என்ன செய்தாலும் திருமணம் தடை விலகவில்லை என்று வருத்தப்படுபவர்கள் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய மருதாணி இலையை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது விரைவிலேயே அவர்களுடைய திருமணத்தடை நீங்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு விட்டு செய்யக்கூடிய அனைத்து செயல்களும் வெற்றிகரமாகவே நடைபெறும் என்றாலும், ஒரு சிலருக்கு திருமண தடை என்பது விலகாமல் இருக்கும். இதற்கு காரணம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களாகவும் இருக்கலாம் அல்லது கால நேரமாகவும் இருக்கலாம்.

- Advertisement -

இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் எதனால் திருமணம் தடைப்பட்டு இருந்தாலும் அதை அனைத்தையும் நீக்கி அருள் புரிவதற்கு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். எந்த அம்மனாக இருந்தாலும் தாய்மை உள்ளம் கொண்டவள் தானே. ஆதலால் எந்த அம்மன் கோவில் ஆக இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் விரிவிலேயே திருமண தடை நீங்கும். இந்த திருமண தடையை நீக்குவதற்கு மருதாணி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

புதன்கிழமை அன்று மருதாணி இலையை பறிக்க வேண்டும். வேறு எந்த கிழமையும் பறிக்க கூடாது. அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான ஆளிழை பன்னீர் என்று விற்கப்படும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக வீட்டில் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பிறகு பறித்து வைத்திருக்கும் மருதாணி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளுங்கள். நைசாக அரைக்கக்கூடாது.

- Advertisement -

சாறு வரும் அளவிற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதில் பன்னீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு செம்பு அல்லது பித்தளை உலோகத்தால் ஆன சொம்பு நிறைய எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது இந்த மருதாணி இலை சாறை கொடுத்து அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். இப்படி கொடுக்கக்கூடிய நபர் திருமண தடை ஏற்பட்ட நபராக தான் இருக்க வேண்டும். அவருக்கு பதிலாக அவருடைய தாயோ, தந்தையோ இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.

கொடுத்துவிட்டு அபிஷேகத்தை பார்த்து மனதார அம்மனிடம் திருமண தடை விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்ய வேண்டும். ஆறாவது வாரம் வெற்றிலை, பாக்கு, மல்லிகைப்பூ, மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு, சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஜாக்கெட் பிட் இவை அனைத்தையும் சேர்த்து 9 சுமங்கலி பெண்களுக்கு தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி ஞாயிறு திருஷ்டி கழிக்க பரிகாரம்

இந்த எளிமையான பரிகாரத்தை முழு மனதுடனும் நம்பிக்கையுடனும் செய்து வந்தால் விரைவிலேயே திருமணம் கைகூடும்.

- Advertisement -