மார்கழி ஞாயிறு திருஷ்டி கழிக்க பரிகாரம்

kadugu
- Advertisement -

நாளைய தினம் மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கின்றது. பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை என்றால், அந்த நாளில் கண் திருஷ்டி கழிப்பது சிறப்பு. அதிலும் இந்த மார்கழி மாதத்தோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில், வாரம் தோறும் வீட்டில் இருப்பவர்களுக்கும், வீட்டிற்கும், கண் திருஷ்டியை கழித்து விட்டால், நம் குடும்பத்திற்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

கண் திருஷ்டியால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த ஞாயிற்றுக்கிழமை என்று மட்டுமல்ல, அடுத்தடுத்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். மார்கழி மாதம் முடிந்தும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படி திருஷ்டி கழித்தாலும் அது நன்மையை தரக்கூடியதாக அமையும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை திருஷ்டி கழிக்கும் முறை

சரி, இப்போது பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமை திருஷ்டி கழிக்க பரிகாரம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு கல் உப்பு, கடுகு, இந்த 2 பொருட்கள் தேவை. ஒரு அகல் விளக்கு, அப்படி இல்லை என்றால் பீங்கான் கிண்ணம், கண்ணாடி கிண்ணம் எதையாவது எடுத்துக்கோங்க. சில்வர் கிண்ணம் தேவை கிடையாது.

பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். இந்த கிண்ணத்தில் முதலில் ஒரு கைப்பிடி கல் உப்பு போடவும், 1 ஸ்பூன் கடுகை கையில் எடுத்து அதன் மேலே நன்றாக தூவி விடுங்கள். வெள்ளை நிற கல்லுப்புக்கு மேலே கடுகு ஆங்காங்கே நன்றாக தெரிய வேண்டும். அந்த அளவுக்கு கடுகை தூவி, இந்த கிண்ணத்தை உங்கள் வீட்டு வரவேற்பறையில் நடுவில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யப் போவதாக இருந்தாலும், சனிக்கிழமை இரவே இந்த கிண்ணத்தை தயார் செய்து உங்க வீட்டு வரவேற்பதில் வைத்து விட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் இந்த கிண்ணத்தில் இருக்கும் பொருட்களை அப்படியே வீட்டிற்கு வெளியே கொண்டு போய், திருஷ்டி சுத்துவது போல உங்கள் வீட்டை மூன்று முறை சுற்றி, இந்த கிண்ணத்திற்கு நடுவே ஒரு கற்பூரம் வைத்து, அப்படியே கொளுத்து விடுங்கள்.

அதன் உள்ளே இருக்கும் கடுகு உப்பு எல்லாம் அந்த நெருப்பிலேயே எரிந்து படபடவென பொரிந்து உங்கள் வீட்டை பிடித்த திருஷ்டி எல்லாம் வெடித்து சிதறி போகும். கல் உப்பை நெருப்பில் போடலாமா என்ற சந்தேகம் சில பேருக்கு வரும். அந்த காலத்தில் பாட்டி, கல் உப்பைக் கொண்டு திருஷ்டி சுற்றினால் அதைக் கொண்டு போய் அப்படியே அடுப்பு நெருப்பில் போடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி வீட்டிற்குள் சனிக்கிழமை இரவே இந்த இரண்டு பொருட்களை நீங்கள் வைப்பதன் மூலம், உங்கள் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எல்லாம் இந்த பொருள் தன்னகத்தை உறிஞ்சிக் கொள்ளும். அதை கொண்டு போய் வீட்டிற்கு வெளியில் எரித்து விட்டால் எல்லா கெடுதலும் பொசுங்கிப் போய்விடும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற கிருஷ்ணர் வழிபாடு

இதே போல உங்கள் கைகளில் இந்த இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களை எல்லாம் அமர வைத்து, அவர்களை சுற்றி இதை நெருப்பில் போட்டாலும் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டி நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -