நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் அமையவில்லையா? சிவபெருமானுக்கு இந்த 1 பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை உங்களை தேடி வருவாங்க.

sivan-abishegam
- Advertisement -

நல்ல அழகு இருக்கும். நல்ல வேலை இருக்கும். நல்ல சம்பாத்தியம் இருக்கும். சொந்த வீடு இருக்கும். எல்லா சுகங்களும் நிறைவாக இருக்கும். ஆனால் ஒரு பையனுக்கு நல்ல பெண், வாழ்க்கை துணையாக கிடைக்காமல் இருக்கும். இதே போல்தான் ஒரு பெண்ணுக்கு நகை நட்டு சேர்த்து வைத்திருப்பார்கள். அந்த பெண் நன்றாக படித்து, பார்ப்பதற்கு மகாலட்சுமி போல இருக்கும். ஜாதகத்தில் கூட எந்த குறையும் இருக்காது. ராசியான பெண்ணாகத் தான் இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணுக்கு நல்ல மணமகன் கிடைக்காமல் இருக்கும். நீண்ட நாட்களாக அலசி ஆராய்ந்து பார்த்து இருப்பார்கள் நல்ல வரன் அமைவது போல இருக்கும், கடைசியில் செட் ஆகாமல் போய்விடும்.

இப்படி காத்திருந்து காத்திருந்து ஒருவருக்கு வயது தான் கூடியிருக்கும். வரன் அமைந்து இருக்காது. சீக்கிரம் திருமணம் நடக்க எத்தனையோ பரிகாரத்தை கூட செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் பலன் இருந்திருக்காது. ஒரே ஒருமுறை சிவபெருமானை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய குழந்தைக்கு நல்ல வரன் தேடி வரும்.

- Advertisement -

சிவபெருமானுக்கு பசும்பாலில் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு வாரம்தோறும் வரக்கூடிய திங்கள்கிழமைகளில் அல்லது பிரதோஷ தினத்தில் சுத்தமான பசும் பாலை வாங்கி அதில் 2 சிட்டிகை குங்குமப் பூவைப் போட்டு அதை அப்படியே கோவிலில் சிவபெருமான் அபிஷேகத்திற்கு கொடுத்துவிடுங்கள். ஒருசில கோவிலில் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட அந்த நபரே பால் அபிஷேகம் செய்யலாம் என்று சொல்லுவார்கள்.

இப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்தால் யாருக்கு திருமணம் நடக்கவில்லையோ அவர்களுடைய கையால் பசும் பாலில் குங்குமப் பூவை கலந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். கூடிய சீக்கிரத்தில் நல்ல பலன் கைமேல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி கோவிலுக்கு சென்று இதை செய்ய முடியாதவர்கள் அவர்களுடைய வீட்டில் இருக்கக் கூடிய சிவலிங்கத்திற்கு இந்த பால் அபிஷேகத்தை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரே ஒரு வாரம், ஒரு முறை செய்து  விட்டு விடாதீர்கள். உங்களுக்கு நல்ல வரன் அமையும் வரை தொடர்ந்து இந்த அபிஷேகத்தை சிவபெருமானுக்கு செய்து வாருங்கள். சுத்தமான குங்குமப்பூ ஒரு டப்பாவை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை அபிஷேகத்திற்கும் பாலில் 2 சிட்டிகை குங்குமப்பூ போட்டால் கூட போதும்.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணி பெற்றவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் எம்பெருமானின் பாதங்களில் பாரத்தை இறக்கி வைத்து இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -