திருமணம் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு

amman3
- Advertisement -

பெரிய பெரிய அளவில் ஜாதக தோஷம் இருப்பவர்கள் அதற்கு உண்டான பரிகாரத்தை செய்திருப்பார்கள். அப்படி பிரத்தியேகமாக பரிகாரம் செய்தும் திருமணம் நடக்காமல் நிறைய பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சில பேருக்கு ஜாதகத்தில் தோஷமும் இருக்காது. திருமண தடையும் இருக்காது. ஆனாலும் நல்ல வரன் அமையாது.

திருமண வயதை கடந்தும் நல்ல மணமகள் கிடைக்காமல், நல்ல மணமகன் கிடைக்காமல், கல்யாணம் தள்ளிப் போகும். இப்படி நீங்கள் எந்த பிரச்சினையில் சிக்கி இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் 21 நாட்களில் கெட்டிமேல சத்தம் கேட்பது உறுதி. அது என்ன பரிகாரம். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

திருமணம் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு

இந்த பரிகாரத்தை இந்த மார்கழி மாதத்தில் தொடங்குவது ரொம்ப ரொம்ப சிறப்பு. மார்கழி முடிந்து, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல மார்கழி மாதம் முடிந்து தை மாதமும் இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்யவும். 21 வாரம் கணக்கு பார்த்தால் நீங்கள் இந்த மார்கழி மாதத்தில் செய்ய தொடங்கிய பரிகாரம் தை மாசி பங்குனி வரை அப்படியே தொடரும்.

இந்த மாதங்களை கடப்பதற்குள் கட்டாயம் திருமணம் நிச்சயமாகும். சரி பரிகாரம் என்ன. 21 வெற்றிலை, 21 விரலி மஞ்சள் வாங்கிக் கொள்ளவும். மஞ்சள் நூலில் இதை மாலையாக கட்டப் போகின்றோம். ஒரு வெற்றிலைக்கு நடுவே விரலி மஞ்சள் வைத்து சுருட்டி கொள்ளுங்கள். இதை மஞ்சள் நூலில் வைத்து பூ கட்டுவது போல கட்டி மாலையாக தயார் செய்து கொள்ளவும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு ராகு கால நேரத்தில் சென்று, குங்கும அர்ச்சனை செய்து இந்த மாலையை துர்க்கை அம்பாளுக்கு இந்த மாலையை போட வேண்டும். இதே போல மாலையை 21 வாரங்கள் உங்கள் கையால் கட்டி போடவும்.

சில கோவில்களில் இந்த மாலையை போட அனுமதி கொடுப்பார்கள். சில கோவில்களில் இந்த மாலை போட அனுமதி கொடுக்க மாட்டாங்க. அப்படி இருந்தால் இந்த மாலையை துர்க்கை அம்மனின் பாதங்களில் வைத்துவிட்டு வாங்க. துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக நின்று மண்டியிட்டு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

திருமணமாகாத ஆண், பெண் இந்த பரிகாரத்தை செய்யலாம். அவர்களால் செய்ய முடியாது எனும் பட்சத்தில் பெற்றவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் நிச்சயம் பலன் கிடுக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல மார்கழி மாதத்தில் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில் பெருமாள் கோவில்களில் அதிகாலை வேளையில் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களைப் படித்து சிறப்பாக பூஜை செய்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

இதையும் படிக்கலாமே: அடமானம் வைத்த நகைகளை மீட்டெடுக்க பரிகாரம்

அந்த பூஜையில் திருமணம் ஆகாத ஆண் பெண்ணை கலந்து கொள்ள செய்யுங்கள். முடிந்தால் உங்கள் வாயால் திருப்பாவை திருவெண்பாவையை பாடி வழிபாடு செய்யும்போது உங்கள் மனதிற்கு பிடித்த வரன் சீக்கிரமே கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேல் சொன்னா ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -