திருமணமாகாத பெண்ணுக்கு சீக்கிரம் மணக்கோலத்தை கொடுக்கும் மருதாணி. இதை மட்டும் செஞ்சு பாருங்க 5 வாரத்தில் உங்கள் வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்பது உறுதி.

maruthani
- Advertisement -

நிறைய பெண்களுக்கு ஜாதகத்தில் தோஷம் காரணமாக திருமணம் நடக்காமல் இருக்கும். சில பெண்களுக்கு காரணமே தெரியாமல் திருமணம் நடக்காமல் இருக்கும். ஒரு சில பெண்களுக்கு பணம் இல்லாத காரணத்தினால் கூட திருமணம் நடக்காமல் இருக்கும். சில பெண்களுக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த காரணத்தினால் திருமணம் நடக்காமல் இருந்தாலும் சரி, கண்ணை மூடிக்கொண்டு அம்பாளின் மேல் பாரத்தை போட்டு விட்டு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் திருமணமாகாத ஆண்கள் இருந்தால் கூட அவர்களுக்கு ஒரு பரிகாரம் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் படித்து பலன் பெறுங்கள்.

முதலில் திருமணம் ஆகாத பெண்களுக்கு, திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்த்து விடுவோம். வியாழக்கிழமை அன்று மருதாணியை செடியில் இருந்து பறித்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் செடியில் இருந்து மருதாணியை எடுத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது வெளியில் இருந்து மருதாணியை கொண்டு வந்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு சுத்தமான சொம்பில் நல்ல தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மருதாணி இலைகளை உருவி அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். வியாழக்கிழமை இரவு இந்த சொம்பு தண்ணீரை தயார் செய்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த சொம்பு தண்ணீரை தயார் செய்யக்கூடிய வேலையை திருமணம் ஆகாத பெண்ணின் தாய் கூட செய்யலாம். தவறு கிடையாது.

- Advertisement -

மறுநாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். திருமணம் ஆகாத பெண்ணை கூட கட்டாயம் அழைத்துச் செல்லுங்கள். மறக்காமல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மருதாணி இலை தண்ணீரையும் எடுத்துச் செல்லுங்கள். எல்லா கோவிலிலும் அம்மனுக்கு காலையில் அபிஷேகம் நடக்கும் அல்லவா.

அப்போது அந்த குருக்களிடம் சொல்லி திருமணம் ஆகாத பெண்ணின் கையால் இந்த சொம்பு தண்ணீரை அம்பாளுக்கு கொடுக்க சொல்லுங்கள். குருக்கள் பெற்றுக் கொண்டு அந்த தண்ணீரை கொண்டு போய் அபிஷேகத்தின் போது அம்மனுக்கு ஊற்றி விடுவார். வாரம் தோறும் ஐந்து வெள்ளிக்கிழமை இந்த மருதாணி கலந்த தண்ணீரில் திருமணமாகாத பெண்ணின் கையால் அம்மனுக்கு கொடுத்து அபிஷேகம் செய்யும்போது, திருமணம் ஆகாத பெண்ணுக்கு ஐந்தே வாரத்தில் திருமணம் பேசி முடிவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் ஊர் கோவிலில் இப்படி நீங்கள் கொடுக்கும் தண்ணீரில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? வெள்ளிக்கிழமை இரண்டு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அகல்விளக்கிலும் இரண்டு மருதாணி இலைகளை போட்டு, திரி போட்டு தீபம் ஏற்றி அம்பாளுக்கு முன்பு வைத்துவிட்டு மனதார திருமண நடக்க வேண்டும் என்று திருமணம் ஆகாத பெண் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபத்தை திருமணம் ஆகாத அந்த குறிப்பிட்ட பெண்ணின் கையால்தான் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் திருமணமாகாத ஆண்கள் என்றால் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். இரண்டு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அந்த இரண்டு விளக்குகளும் இரண்டு மருதாணி இலைகளை போட்டு, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். ஐந்து வாரங்கள் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி வர திருமணமாகாத ஆண்களுக்கு கூடிய சீக்கிரத்தில் திருமண யோகம் கூடி வரும். ஆண்கள் இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அல்லது புதன்கிழமைகளில் செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -