திருமணம் விரைவில் நடைபெற எளிய பரிகாரம்

thirumana pariharam
- Advertisement -

பெண், ஆண் என்ற இருபாலருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. பெண்ணிற்கும், ஆணிற்கும் ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்களை பெற்ற பெற்றோர்கள் பல வகைகளில் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளில் பலரும் வெற்றியடைந்தாலும் ஒரு சிலருக்கு வெற்றிகள் கிடைக்காமல் திருமணம் தாமதம் ஆகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் திருமணம் விரைவில் நடைபெறுவதற்கு செய்யக்கூடிய எளிய பரிகாரங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அன்றைய காலத்தில் குழந்தை திருமணம் என்பது நடைபெற்றது. இன்றைய காலத்தில் 40 வயதை கடந்தாலும் பலருக்கும் திருமணம் என்பது எட்டா கனியாகவே திகழ்கிறது. சரியான வயதில் திருமணம் நடைபெற்றால்தான் திருமணம் நடைபெற்றால் தான் அந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதால் தான் ஒரு குறிப்பிட்ட வயதை தேர்வு செய்து இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி திருமணத்திற்காக முயற்சி செய்யும் பொழுது ஒரு சில பரிகாரங்களை நாம் செய்வதன் மூலம் அந்த திருமணம் விரைவிலேயே கைகூடும்.

- Advertisement -

திருமணத்திற்காக முயற்சி செய்யும் ஆணாக இருந்தால் ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் 11 பிரிஞ்சி இலைகளை வைத்து நன்றாக பொட்டணம் மடிப்பது போல் மடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மடிக்கும் பொழுது பிரியாணி இலைகள் உடையாமல் இருக்க வேண்டும். மேலும் நாம் உள்ளே வைக்கும் பிரியாணி இலைகளிலும் எந்தவித ஓட்டையோ, கிளிசலோ, உடைச்சலோ இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி பேப்பரில் மடித்து பிரியாணி இலையை தினமும் தாங்கள் தூங்கும் பொழுது தங்களின் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் வெள்ளை நிற காகிதத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய காகிதத்தை பயன்படுத்த வேண்டும். இப்படி தினமும் வைத்து படுப்பதன் மூலம் அதில் உள்ள கதிர்வலைகளின் உதவியால் விரைவிலேயே திருமணம் நடைபெறும். பிரியாணி இலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் இப்படி பிரியாணி இலையை வைத்து உறங்குவதன் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

திருமணம் நடைபெறுவதற்கு சில கிரகங்களின் அனுகிரகம் இருக்க வேண்டும். அப்படி கிரகங்களின் அனுக்கிரகத்தை பெறுவதற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் குளிப்பதற்கு முன்பாக ஒரு சிட்டிகை குங்கும பூவை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வரவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வியாழக்கிழமை தோறும் குளிப்பதன் மூலம் திருமண யோகத்தை தரக்கூடிய கிரகங்களின் அருள் பார்வை கிடைக்கும். அதனால் விரைவிலேயே திருமணம் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ மண் எடுக்கும் முறை

திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது மேல் சொன்ன இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்து வந்தால் விரைவிலேயே அவர்களுடைய திருமண முயற்சிகள் வெற்றி அடையும்.

- Advertisement -