செல்வம் பெருக திருப்பதி ஏழுமலையான் வழிபாடு

perumal panam
- Advertisement -

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத பிறப்பில் முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடுகள் என சில நம்முடைய வழக்கத்தில் உள்ளது. அதே போல தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை அன்று சில வழிபாடுகள் செய்வதன் மூலம் நம்முடைய செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு

செல்வத்திற்கு அதிபதியான தெய்வம் எனில் மகாலட்சுமி தாயார் ஞாபகத்திற்கு வருவார்கள். அதற்கு அடுத்தபடியாக நாம் யோசிப்பது திருப்பதி ஏழுமலையான் தான் ஆகையால் தான் திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் வரும் என்று சொல்லாடால் நம்முடைய வழக்கத்தில் உள்ளது. அந்த திருப்பதி ஏழுமலையானை அனைவராலும் நினைத்த நேரத்தில் சென்று தரிசனம் செய்ய முடியாது.

- Advertisement -

இந்த முறையில் திருப்பதி ஏழுமலையானை நினைத்து நாம் வழிபாடு செய்தால் அவரை விரைவில் காணும் யோகம் கிடைப்பதோடு நம்முடைய செல்வம் பழம் பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு என்று இப்போது பார்க்கலாம். இன்று தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமை இன்றைய தினத்தில் பெருமாள் வழிபாடு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. ஆகையால் முதலில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு செல்லுங்கள்.

அங்கு கருடாழ்வார் பெருமாள் அனைவரை வழிபாடு செய்த பிறகு கொடிமரத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓம் நமோ நாராயணா என்ற இந்த ஒரு மந்திரத்தை மனதார 106 முறை சொல்லுங்கள். இதை சொல்லும் போது நீங்கள் இருப்பது ஏழுமலையான் சன்னிதானத்தில் இருப்பதாக நினைத்து சொல்லுங்கள். அதன் பிறகு ஓம் ஸ்ரீ லலித்தம் லம்போ தரம் என்னும் இந்த மந்திரத்தை 16 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கொஞ்சம் துளசியை பிரசாதமாக சாப்பிட்ட பிறகு கொடி மரத்தை மீண்டும் ஒரு முறை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குங்கள். அப்போது ஒவ்வொரு திங்கட்கிழமையும் நான் இது போல வந்து உங்களை வணங்குகிறேன் திருப்பதி வந்து காணும் வழியையும் செல்வம் பெருக்கக் கூடிய வழியையும் எனக்குத் தாருங்கள் என வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்து ஒரு மஞ்சள் நிற துணியில் 11 ரூபாய் நாணயத்தை முடிந்து வையுங்கள் திருப்பதி ஏழுமலையானை மனதில் நினைத்துக் கொண்டு நான் விரைவில் உன்னை வந்து காணுவேன் என்னுடைய பணப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வை என வேண்டிக் கொண்டு இந்த முடிச்சை கட்டி வையுங்கள். தினமும் இந்த முடிச்சிக்கு தீபாராதனை காட்டி மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

திருப்பதி செல்லக் கூடிய யோகம் விரைவில் வருவதுடன் இந்த வழிபாடு உங்களுடைய செல்வ வளத்தை பல மடங்கு உயர்த்தி விடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை மதியத்திற்குள்ளாக செய்வது நல்லது. இதை மாதந்தோறும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சனி தோஷம் விலக பரிகாரம்

திருப்பதி ஏழுமலையான் அருள் ஆசியுடன் செல்வ செழிப்புடன் வாழக் கூடிய யோகத்தை தரும் இந்த வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனடையலாம். என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -