சனி தோஷம் விலக பரிகாரம்

sanibagavan
- Advertisement -

வாழ்க்கையே வெறுத்து போகும் அளவுக்கு கஷ்டங்கள் வரக்கூடிய காலம் இந்த ஏழரை சனிக்காலம். நாம் செய்த கர்ம வினை பலன்களை எல்லாம் இந்த ஏழரை வருடத்தில் மொத்தமாக அனுபவித்து நொந்து போய் விடுவோம். உங்களுக்கும் உங்களுடைய வாழ்வில், சனிபகவானால் நிறைய சஞ்சலங்கள் வந்து கொண்டே இருக்கிறதா.

சனி பகவானிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள, சனி பகவானின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

சனி பகவானால் வரும் சங்கடங்கள் தீர

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் முதலில் ஒரு கோவிலில் இருக்கும் அரச மரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அரச மரத்துக்கு அடியில் பிள்ளையார் இருப்பார். நாகங்கள் இருக்கும். சில இடங்களில் அம்மன் சிலை கூட இருக்கும். எந்த கோவிலாக இருந்தாலும் சரி, ஒரு கோவிலில் இருக்கக்கூடிய அரச மரம் நமக்கு பரிகாரத்திற்கு தேவை. அந்த மரத்தை முதலில் தேடி கண்டுபிடித்து விடுங்கள்.

ஒரு சனிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிலேயே சுத்தமாக பச்சரிசியில் எள் சாதம் தயார் செய்து கொள்ளவும். அதை எடுத்துக் கொண்டு இந்த அரச மரத்தடி கோவிலுக்கு செல்லவும். ஒரு தாம்பூல தட்டில் இந்த எள் சாதத்தை கொட்டி அரச மரத்துக்கு அடியில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அரச மரத்துக்கு 2 மண் அகல் விளக்குகளை ஏற்றி வைக்கவும். உங்களுடைய கையில் ஒரு கைப்பிடி அளவு எள்ளு எடுத்துக்கோங்க. கருப்பு எள்ளு. சனிபகவானை நினைத்துக் கொண்டு, கஷ்டங்கள் தீரவேண்டும் என்று விநாயகர் ஹனுமன் குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த மரத்தை 18 முறை வலம் வர வேண்டும்.

ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் அந்த மரத்திற்கு முன்பு கொஞ்சமாக எள் போட வேண்டும். அதாவது எள்ளை கொஞ்சமாக சமர்ப்பணம் செய்துவிட்டு, அடுத்த சுற்றை தொடங்க வேண்டும். இப்படியாக 18 சுற்று இந்த எள்ளை அரச மரத்திற்கு சமர்ப்பணம் செய்து, சனி தோஷம் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் எவ்வளவு பெரிய கஷ்டகாலமாக உங்களுக்கு இருந்தாலும் சரி, அந்தக் கஷ்டத்திலிருந்து உங்களை விடுவிக்கும் வேலையை அந்த சனி பகவானே பார்த்துக் கொள்வார்.

- Advertisement -

18 முறை வலம் வந்த பிறகு, 18 முறை அந்த அரச மரத்தை நமஸ்காரம் செய்யணும். போராட்ட காலத்தில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய பிரச்சனையில் பாதி குறையும். ஒரே ஒருமுறை சனிக்கிழமை நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். 18 முறை வலம் வந்த பிறகு அந்த தட்டில் இருக்கும் எள்ளு சாதத்தை சின்ன சின்ன தொன்னையில் வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் வழிபாடு

நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றினால் சனி பகவானால் எந்த தீங்கும் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படாது. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வாழ்வில் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -