இந்த 2 பொருளை பேப்பரில் வைத்து எரித்து விட்டால் போதுமே! உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் தலைதெறிக்க ஓடி விடுவார்கள்.

- Advertisement -

சாதாரண மனிதர்கள் முதல் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நபர்கள் வரை அனைவருக்குமே எதிரிகள், பகைவர்கள், துரோகிகள் என்று நிச்சயமாக இருப்பார்கள். கூடவே இருந்து குழி பறிப்பவர்கள், நம் முன்னேற்றத்தை கண்டு பொறாமை படுபவர்கள், நமக்கு தீங்கு இழைப்பவர்கள் என்று அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைக்கு உரியவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் நம்முடன் இருக்கும் பொழுது அது நம் மேல் திருஷ்டி ஆக மாறுகிறது. இப்படியான திருஷ்டிகள் நீங்க மிக எளிதாக என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

enemy1

கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், பொறாமை என்று நமக்கு தெரிந்தும் தெரியாமலும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நம்முடைய முன்னேற்றத்தை தொடர்ந்து தடை செய்து கொண்டே இருக்கும். நாம் என்ன தொழில் செய்தாலும்! என்ன வியாபாரம் செய்தாலும்! அதில் முன்னேற்றம் என்பதே இருக்காது.

- Advertisement -

புதிய புதிய வாய்ப்புகள் அனைத்தும் கை நழுவிப் போகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று புலம்ப வேண்டியது தான். நமக்கு தெரிந்த எதிரிகளை விட நம் கண்களுக்கு தெரியாத எதிரிகள் தான் மிக மோசமானவர்களாக இருப்பார்கள். கூடவே இருந்து கொண்டு நமக்கு குழியை தோண்டிக் கொண்டே இருப்பார்கள். எப்போது அந்த குழியின் அருகில் நாம் வருவோம்! விழுவோம்! என்று காத்துக் கொண்டிருப்பார்கள்.

sad-crying4

இது பணக்காரன், ஏழை என்று இல்லை! எல்லோருக்குமே இருக்கும் ஒரு பிரச்சனை தான். நம் வாழ்க்கையில் விஸ்வரூப வெற்றியை அடைய கூடிய தருணங்களில் பல கிளைகள் தேவையே இல்லாமல் நமக்கு அடியில் முளைத்துக் கொண்டே இருக்கும். அந்த கிளைகளை வெட்டி விடும் பொழுது தான் நம்மால் பிரம்மாண்ட விருட்சமாக செழித்து வளர முடியும்.

- Advertisement -

குட்ட குட்ட குனிந்தவர்கள், என்னடா இது திடீரென கம்பீரமாக எழுந்து நிற்கிறார்கள்? என்கிற பொறாமை பார்வைகள் திருஷ்டியாக பெரும்பாலும் மாறிவிடுகிறது. இதனால் தான் நம் முன்னோர்கள், ‘கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’ என்று கூறி வைத்தார்கள். திருஷ்டிகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க நாம் அவ்வப்பொழுது சுற்றிப் போடுவது, சாம்பிராணி புகை போடுவது என்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருப்போம்.

thirusti

எனினும் பகைவர்கள், எதிரிகள் என்று பிரச்சனைகளை அதிகமாக சந்திப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். உங்களுடைய எதிரிகளும், தீங்கு கொடுப்பவர்களும் உங்கள் பக்கமே வர முடியாத அளவிற்கு இந்த பரிகாரம் அவர்களை திசை திருப்பி விடும். வீட்டில் திருஷ்டி நீங்குவதற்கு வெண்கடுகு சிறந்த பொருளாக இருக்கிறது. வெண்கடுகு வெடித்து சிதறும் போது நம் மேல் விழுந்த அத்தனை திருஷ்டிகளையும், பொறாமை கண்களையும் தவிடு பொடியாக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகளுடைய பெயரை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி வைக்க வேண்டும். சிறிய கற்பூரத்தை நொறுக்கித் தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கற்பூர தூளை விரலால் தொட்டு உங்களுடைய பகைவர்கள் அல்லது எதிரிகள் அல்லது துரோகிகள் யாருடைய பெயரை வேண்டுமானாலும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம். பின்னர் அதனுடன் சிறிதளவு வெண்கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் போதும்.

paper

இந்த பேப்பரில் நான்காக மடித்து வீட்டின் வாசலுக்கு வந்து நடு பகுதியில் நெருப்பிட்டு கொளுத்தி விடுங்கள். இதனை பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் செய்வது கூடுதல் பலன்களை கொடுக்கும். கற்பூரமும், வெண்கடுகும் சேர்த்து அந்தப் பெயருடன் எரியும் பொழுது பெயருக்கு உரிய நபர்கள் உங்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். கண் திருஷ்டியை நீக்க வலிமை வாய்ந்த இந்த பரிகாரம் அனைவரும் செய்து பயன் அடையலாம்.

- Advertisement -