பொருளாதாரம் உயர இந்த ஒரு மரத்தை வீடு, கடை, அலுவலகங்களில் இப்படி கட்டலாமே! நிமிடத்திற்கு நிமிடம் துளிர்க்கும் அற்புத கண் திருஷ்டி மரமா இது? இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

thirusti-ganapathi
- Advertisement -

நம்முடைய பாரம்பரியத்தில் பெருமளவு புகழ்ந்து கூறப்பட்டுள்ள இந்த ஒரு மரம் எல்லோருடைய வீட்டிலும் இருப்பது சாதாரண விஷயம் தான் ஆனால் இதில் இருக்கும் பல ரகசிய உண்மைகள் எவருக்கும் தெரிவது கிடையாது. நம் வீட்டில் எளிமையாக வளரக் கூடிய இந்த ஒரு மரம் கண் திருஷ்டிகளை அண்ட விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இது நிமிடத்திற்கு நிமிடம் வளரக்கூடிய அமைப்பு என்பதால் இதில் இருக்கும் சக்திகள் ஏராளம். உச்சி முதல் வேர் வரை எல்லா பாகங்களும் பயன் தரக்கூடிய இந்த ஒரு மரம் என்ன மரம்? இதில் அடங்கி இருக்கும் ரகசியங்கள் இன்னும் எத்தனை? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லோருடைய வீட்டிலும் சர்வ சாதாரணமாக வளரக்கூடிய இந்த மரம் வாழைமரம் ஆகும். வாழை மரம் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சிறிதளவு இடம் இருந்தாலும் அதில் கண்டிப்பாக வாழைக் கன்று ஒன்றை நட்டு வைத்து விடுங்கள். அந்த அளவிற்கு உங்களுடைய வீட்டையும், உங்களையும் கண் திருஷ்டியில் இருந்து முற்றிலுமாக பாதுகாக்கும் வல்லமை இதற்கு உண்டு.

- Advertisement -

வாழை மரம் நிமிடத்திற்கு நிமிடம் வளரும் தன்மை கொண்டுள்ளது. இது வளரும் பொழுதே உங்கள் மீது, மரம் இருக்கும் வீட்டின் மீதும் விழக்கூடிய திருஷ்டிகளை அது கிரகித்துக் கொள்ளும். அதனால் தான் வாழைமரம் இருக்கும் இல்லங்களில் திருஷ்டிகள் அவ்வளவாக நெருங்குவது கிடையாது. சற்று கூர்ந்து கவனித்தால் நன்கு புரியும், கண் திருஷ்டி சார்ந்த பிரச்சனைகள் அவர்களுக்கு அவ்வளவாக வருவதும் கிடையாது.

விசேஷம், விழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் வாழை மரத்தை தண்டுடன் சேர்த்து வெட்டி வாசலில் வாழ்த்து போர்டுக்கு ரெண்டு புறங்களில் கட்டி தொங்க விடுவதை நாம் பார்த்து இருக்கக்கூடும். வாழை மரத்தை வெட்டினாலும் அதற்கு உயிர் உண்டு. அது வாடும் வரை நம்முடைய திருஷ்டிகளை கிரகித்துக் கொள்ளும் என்பதால் விசேஷங்களில் இது போல் கட்டி தொங்க விடுகின்றனர்.

- Advertisement -

பல பேர் கூடும் இடத்தில் முதல் பார்வை அதன் மீது விழுகிறது. அதனால் திருஷ்டிகளை அது கிரகித்துக் கொண்டு விடும். இதனால் மணமக்களுக்கு திருஷ்டி கழியும், சந்ததியும் வாழையாடி வாழையாய் பெருகும் என்பதால் இவ்வாறு தொங்க விடப்படுகிறது. அது போல நீங்கள் உங்கள் வீட்டிலும் கடை, அலுவலகம் போன்ற இடங்களிலும் ஒரு வாழை மரத்தை கட்டி தொங்க விட்டால் திருஷ்டிகள் முற்றிலும் ஒழியும். மீண்டும் திருஷ்டிகள் வராமலும் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு எனவே அடிக்கடி முடியாவிட்டாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் பூஜை போடும் பொழுது வாழை மரத்தை கட்டி தொங்கவிட்டு அதன் பிறகு பூஜை போட்டு பாருங்கள், ஆச்சரியப்படும் மாற்றம் நிகழும்.

கடை, அலுவலகம் போன்ற இடங்களில் இவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதாரம் ஆனது பன்மடங்கு உயரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. வாழை மரத்தில் வாழையடி வாழையாய் செல்வம் பெருகக்கூடிய அமைப்பு உண்டு என்பதால் வாழைமரம் வைத்திருப்பவர்கள் இல்லத்தில் மட்டும் அல்லாமல் கடை, அலுவலகம் போன்ற இடங்களிலும் இவை இருந்தால் பொருளாதாரம் உயரும். வருமானம் பெருகும். லட்ச லட்சமாய் சம்பாதிப்பவர்கள், கோடி கோடியாய் சம்பாதிப்பார்கள். அந்த அளவிற்கு ரொம்பவே பாசிட்டிவான எனர்ஜியை கொடுக்கக்கூடிய இந்த ஒரு மரத்தினை அனைவரும் வளர்ப்போம் பயன் பெறுவோம்.

- Advertisement -