இந்த வார ராசிபலன் 04/04/2022 முதல் 10/04/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

varapalan1
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து எதிர்பாராத பணவரவு வந்து உங்களை சந்தோஷப்படுத்தும். வாராக் கடன் வசூலாகும். இழுபறியாக இருந்த எல்லா வேலையும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். ஆனால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்று வந்தால் முன் கோபப்படக்கூடாது. அனுசரித்து செல்ல வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால் அவ்வபோது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் நிம்மதி கெட்டுப் போகும் அளவிற்கு பிரச்சனைகள் வராது. சந்தோஷமாக குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். முடிந்தால் குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வதற்கு கூட இந்த வாரம் வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் போன வாரத்தை விட இந்த வாரம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி உங்கள் பக்கம் நிற்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பாராத நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. முடியுமோ முடியாதோ ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன். நிச்சயம் நல்லதே நடக்கும். அவசரப்படாதீங்க, கொஞ்சம் பொறுமையாய் இருந்தால், எதையும் சாதிக்கலாம். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இந்த வார இறுதியில் உடல் சோர்வு காணப்படும். உடல் சரி இல்லாத நிலை ஏற்படும். வருமானம் நிறைய இருந்தாலும் செலவை கட்டுப்படுத்தவே முடியாது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்து அக்கறையோடு வேலை செய்ய வேண்டும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். இருக்கின்ற வேலையை அப்படியே பார்த்தால் நல்லது. தினம்தோறும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்துவிட்டு உங்களுடைய நாளை தொடங்குங்கள். எல்லாம் நன்மையே நடக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கவனம் தேவை. எல்லா விஷயத்திலும் உஷாராக இருந்து கொள்ளுங்கள். யாராவது உங்களை சுலபமாக ஏமாற்றி விடுவார்கள். குறிப்பாக பண விஷயத்தில் யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கிக் கொடுக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் பிரச்சனை எதுவும் வந்து நிற்காது. சுமுகமாக செல்லும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகின்றது. அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். செலவுகள் படிப்படியாகக் குறையும். சேமிப்பு படிப்படியாக உயரும். உங்களுடைய வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து கொள்ளவேண்டியது அவசியம். உங்களுடைய பொருட்களையோ பொறுப்புகளையும் அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகமாக இருக்கப் போகின்றது. எல்லாவற்றையும் கட்டாயமாக குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற சிக்கலில் சிக்கி இருப்பீர்கள். உடல் அசதியும் கொஞ்சம் இருக்கும். மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தாலும், சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும். உங்களுக்கு இந்த வாரம் அதாவது ஏப்ரல் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசாக மனக்கவலை இருப்பதுபோலவே ஒரு சிந்தனை இருக்கும். எதையெடுத்தாலும் இதை செய்யலாமா, வேண்டாமா? என்ற தடுமாற்றமும் இருக்கும். எதையும் நினைத்து மனதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். உங்கள் மனம் தெளிவு பெறும். எடுக்கும் காரியம் நிச்சயம் வெற்றி அடையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக யோசித்து செயல்படுங்கள். தினம்தோறும் சிவன் ஆலயத்திற்கு சென்று ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்து வழிபாடு செய்வது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவு இரட்டிப்பாக இருக்கப்போகிறது. மகிழ்ச்சியில் தலை கால் புரியாது போங்க. இருப்பினும் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்புதான் எதிர்காலத்தில் நமக்கு கைகொடுக்கும். உறவுகளுக்கிடையே சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது பணத்தினால் கூட பிரச்சனைகள் வரலாம். அதை சமாளிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சந்தோஷமா இருக்க போறீங்க. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். சொந்த தொழிலில் பங்குதாரரிடமோ அல்லது வாடிக்கையாளரிடமோ வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயரும் புகழும் உச்சத்திற்கு செல்லப் போகின்றது. நீங்கள் சாதாரணமாக செய்யக்கூடிய வேலை கூட உங்களுக்கு இரண்டு மடங்கு பாராட்டை பெற்று தரும். சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. ஆனால் தலைகனம் ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வரக்கூடிய வருமானத்தில் உங்களால் முயன்ற அளவு இயலாதவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மேலும் பல நன்மைகள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் கூடுதல் முயற்சி எடுத்தால் மட்டுமே நல்ல லாபத்தை பெறலாம். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான பலன்களை கொடுக்க போகின்றது. உங்களை தவறாக நினைத்து உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் எல்லாம் உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். தேவையற்ற மனஸ்தாபங்கள் குறையும். மனதில் நிம்மதி பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகள் உங்களுக்கு நடக்கப்போகின்றது. சோம்பேறித்தனத்தை மட்டும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, முழுமூச்சோடு ஒரு வேலையில் இறங்கினால், உங்களுக்கு தான் வெற்றி. தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -