இந்த வார ராசிபலன் 24/04/2023 முதல் 30/04/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் அதில் சில சிரமங்கள் இருக்கும். போராடி தான் வெற்றி அடைய முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வார்த்தையில் கவனம் தேவை. சண்டை சச்சரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். மற்றபடி வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பொறுமை மட்டும் இருந்தால் இந்த வாரத்தை சமாளித்துக் கொள்ளலாம். கணவன் மனைவி சண்டை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். தினமும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சங்கடங்கள் இருக்கும். அமைதியாக செல்லக்கூடிய சில பேர் வாழ்க்கையில் புயல் வீசுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. எதையும் துணிந்து எதிர்பாருங்கள். வரக்கூடிய பிரச்சினைகளை கண்டு பயப்படாதீங்க. அந்த கடவுளின் ஆசிர்வாதமும் உங்களிடம் உண்டு. தினமும் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று மனதை அமைதிப்படுத்தி ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள்.

பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தெம்பு உங்களுக்கு கிடைத்துவிடும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். குடும்பத் தலைவிகளுக்கும் கூடுதல் வேலை இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை சுப செலவை உண்டாக்கும். ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகமாக இருக்கும். தேவைகளுக்கு அதிகமாகவே பாக்கெட்டில் பணம் தங்கும். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை இரட்டிப்பாக்குங்கள். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும். தொழிலை விரிவு படுத்தலாம் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

உறவினர்களிடையே கொஞ்சம் ஜாக்கிரதையாக பழக வேண்டும். உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் சில விஷயங்களை இலை மறைமுறையாக தான் பேச வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் குடும்பத்தில் மீண்டும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினமும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் பொறுப்பு இருக்கும். வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய வீடு மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொறுப்புகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு வேலை பளுவும் அதிகமாக தான் இருக்கும். கண் விழித்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை கூட சில பேருக்கு ஏற்படும்.

சுப செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சேமிப்பு கரையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிம்மதியை தரும். தீராத பிரச்சனை எல்லாம் தீருவதற்கு இனி நல்ல காலம் பிறந்து விட்டது. தினமும் வீட்டில் துர்க்கை அம்மனை நினைத்து விளக்கு ஏற்றுங்கள். நல்லது நடக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்க போராட வேண்டி இருக்கும். உங்களுடைய வேலையை யாரை நம்பியும் ஒப்படைக்காதீங்க. உங்களுடைய உடமைகளை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

நல்லது நடக்க எப்போதும் குறுக்கு வழியை மட்டும் தேர்ந்தெடுக்காதிங்க. புதிய மனிதர்களின் சாவகாசம் தேவையில்லை. வெற்றி கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. வெற்றிக்காக குறுக்கு வழியில் போகாதீங்க. தோல்வியும் உங்களுக்கு நன்மையை தான் கொடுக்கும். தினமும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக் கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. எல்லா வேலையிலும் உங்களின் ஈடுபாட அதிகமாக இருக்கும். ஆர்வத்தோடு வேலை செய்து வெற்றி பெற்று அதற்கான பாராட்டும் பெறுவீர்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும்.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு தனி கௌரவ பட்டம் கிடைக்கும். உங்களுடைய உழைப்பு வீண் போகாது. சொந்த தொழிலை விரிவு படுத்த வங்கி கடன் கிடைக்கும். வேலை தேடி கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. எந்த முடிவாக இருந்தாலும் நின்று நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை காக்க வேண்டும். நீங்கள் எவ்வளவுதான் வேலை செய்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் செய்யும் வேலைக்கு நல்ல பெயரை அடுத்தவன் தட்டிச் செல்வான்.

உங்கள் பேச்சுக்கு மரியாதையும் இருக்காது. சில இடங்களில் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். சொந்த தொழிலில் அதிக கவனம் தேவை. கூட இருப்பவர்களே உங்களை ஏமாற்றி விடுவார்கள். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க. யாரிடமிருந்தும் கைநீட்டி பணம் வாங்காதீங்க. இந்த வாரம் 23, 24 தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. சந்தோஷமும் துக்கமும் சரிசமமாக உங்களுக்கு ஆண்டவன் கொடுப்பான். சந்தோஷத்தை நினைத்து தலைகனம் கொள்ள வேண்டாம். துக்கத்தை நினைத்து ரொம்பவும் கஷ்டப்படவும் வேண்டாம்.

உங்கள் வேலையை நீங்கள் செய்து கொண்டே இருங்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்காதீர்கள். மூன்றாவது நபர்களிடம் நெருக்கமாக பழகாதீங்க. கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுப காரிய நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். தினமும் மனதிற்குள் ஸ்ரீராமஜெயம் மந்திரம் சொல்லுங்கள். இந்த வாரம் 25, 26 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஓட்டம் அதிகமாக இருக்கும். நிம்மதியாக தூங்க கூட நேரம் இருக்காது. சில பேருக்கு நிம்மதியாக மூச்சு விடுவதற்கு கூட நேரம் இருக்காது. இரவு பகலாக உழைத்தாலும் கையில் வருமானம் தாங்காது.

வீண் விரைய செலவுகள் ஏற்படும். இருப்பினும் ஏதோ ஒரு சந்தோஷம், மனநிறைவு குடும்பத்தில் இருக்கும். பிள்ளைகளால் மன நிறைவு ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும்.

புதியதாக சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.  எதிர்ப்புகள் வந்தாலும் அதை தாண்டி வெற்றி அடைய கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பான். இந்த வாரம் 27ஆம் தேதி சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் குலதெய்வ வழிபாடு செய்து வாருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நீண்ட நாட்களாக கிடைக்காத சில நல்ல விஷயங்கள் உங்கள் வீடு தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொழிலை விரிவுபடுத்தலாம். கடன் வாங்கி முதலீடு செய்யலாம். நல்ல லாபமும் யோகமும் நிறைந்த வாரம் இது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கமிஷன் பிசினஸ் ஓஹோ என நடக்கும். தொழிலில் இடமாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். எதிரிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பயணங்களின் போது ஹெல்மெட் அணிந்து கொள்ளவும். ஆரோக்கியமான உணவை சாப்பிடவும். தினமும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் சூழ்ந்த வாரமாகத்தான் இருக்கப்போகின்றது. வீதியில் செல்லும் வம்பு சண்டை கூட நம் வீடு தேடி வரும். நாம் உண்டு, நம் வேலை உண்டு என்றாலும் வரக்கூடிய சண்டை சச்சரவு நம் நிம்மதியை கெடுத்து விடும். நிதானம் அவசியம் தேவை. எல்லா விஷயத்திலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். புதிய மனிதர்களின் நட்பு கூடவே கூடாது.

எதிர் பாலின நட்பு பிரச்சனைகளை தான் கொண்டு வந்து சேர்க்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். நீங்கள் நல்லதை செய்தாலும் அது உங்களுக்கு வினையாகத்தான் திரும்பும். அலைச்சல் அதிகமாக இருக்கும். உஷராக இருந்தால் பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். தினமும் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்க.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எந்த வேலையை எப்போது செய்வது என்ற மன குழப்பம் பெரியதாக இருக்கும். உங்களுடைய வேலைகளை, பட்டியல் போட்டு செய்தாலும் தீரவே தீராது. அலைச்சல் நிறைந்த வாரம் தான் இது. மூன்றாவது நபர்களின் பேச்சை கேட்காதீங்க. குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வாழ்க்கைத் துணையை சந்தேகப்படாதீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாகத்தான் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அடுத்தவர்களை நம்பி ஏமாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு அனுசரித்து செல்லுங்கள். ஆமாம் சாமி போட்டால் பிரச்சனை இல்லை. எதிர்த்து பேசினால் வேலை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தினமும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -