இந்த வார ராசிபலன் 16-08-2021 முதல் 22-08-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் திறமையோடு வேலை செய்து, சொன்ன வேலையை முன்கூட்டியே முடித்து, பாராட்டையும் புகழையும் பெற போகிறீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களிடம் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து சென்றால் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். இந்த வாரம் முருகப் பெருமானை வழிபட நல்ல பலன்கள் உண்டு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அலைச்சல் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். அதிகப்படியான கடனையும் வாங்க வேண்டாம். நீங்கள் செய்கின்ற வேலையை அப்படியே தொடர்ந்து செய்து வந்தால், பிரச்சனை இல்லை. புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். இந்த வாரம் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையோடு செயல்பட வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வேண்டாம். அவசரமான முடிவு ஆபத்தை உண்டாக்கக் கூடியதாக மாறிவிடும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை காப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய வேலையை விட்டு விடாதீர்கள். புதிய வேலை கிடைப்பது கொஞ்சம் கடினமான விஷயம். தூரத்து பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சொந்த தொழில் எப்போதும்போல செல்லும். கணவன் மனைவி அனுசரித்து சென்றால் வீட்டில் பிரச்சினைகள் இருக்காது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் யாராலுமே செய்துமுடிக்க முடியாத வேலையை, சொடக்கு போடும் நேரத்தில் நீங்கள் முடித்து விடுவீர்கள். உங்களுடைய அறிவு திறமை வெளிப்படும். புத்திக்கூர்மை அதிகமாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இந்த வாரம் பிரச்சினைக்கு இடம் இல்லை. குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக அமையப்போகின்றது. புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். புதிய வியாபாரம் தொடங்கலாம். புதிய வேலையைத் தேடலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வந்து, பரம்பரை சொத்துக்கள் உங்கள் கை வந்து சேரும். சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்பட போகிறீர்கள். சாதுரியமாக சில விஷயங்களை உங்களுக்கு சாதகமாக முடித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் வரக்கூடிய குழப்பங்களுக்கு தந்திரமாக பதிலடி கொடுப்பீர்கள். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணம் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உஷார். உங்களுடைய பொருட்களை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் திட்டமிட்டபடி இந்த வாரம் எதுவுமே நடக்காது. ஆனால் திட்டமிடாமல் எதிர்பாராமல் நடக்கக்கூடிய நல்ல விஷயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களுக்கு நல்ல செய்தி தொலைபேசி வாயிலாகவோ நண்பர்களின் மூலமாகவோ வந்து சேர்ந்துவிடும். எதிர்பாராத சந்தோஷம் உங்களை மனநிறைவு அடையச் செய்யும். அந்த நிம்மதியை உங்களை ஊக்குவிக்கும்.  குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்கும் உண்டான திட்டங்களை இந்த வாரம் தீட்டுவீர்கள். எதிர்காலத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, எதிர்காலத்திற்கு என்ன சேமிப்பு திட்டம் வேண்டும், என்பதை பற்றி அலசி ஆராய்ந்து, சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில முடிவுகளை எடுப்பது உங்களுக்கு சாதகமாக அமையும். யாரையும் நம்பி பணம் காசு கொடுக்க வேண்டாம். யாரிடமிருந்தும் கடனை பெற வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த வாரம் சற்று கவனமாக இருங்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று குழப்பமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த முடிவுகளை எடுப்பது, எந்த முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற குழப்பம் வரும். பிரச்சினை இல்லை. அமைதியான முறையில் சிந்தித்து நிதானமாக ஒரு முடிவை எடுங்கள். அவசரப்பட்டால் பிரச்சனைதான். நிதானத்தை எந்த சூழ்நிலையிலும் இழக்க வேண்டாம். முன் கோபப்பட வேண்டாம். மற்றபடி செய்யும் வேலை சொந்த தொழில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக தான் இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கொஞ்சம் உஷாராக பழகிக் கொண்டால் போதும். வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்பு வெற்றியைத் தரும். கொஞ்சம் சோம்பேறித் தனத்துடன்  இருந்துவிட்டால், வேலைகள் பின்தங்கி விடும். பிறகு வார இறுதியில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அன்றாட வேலைகளை அன்றாடம் முடித்து விடுங்கள். வார இறுதியில் சந்தோஷமாக இருக்கலாம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், விட்டுக்கொடுத்து சென்று விட்டால் இல்லறம் இனிமையாக மாறும். சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. தினம் தோறும் சனிபகவான் வழிபாடு சண்டை சச்சரவுகளை குறைக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுவுகாலம் பிறக்கும். எப்படா இந்த கடனை அடைக்கப் போகிறோம் என்று நினைத்திருப்பீர்கள். அந்தக் கடன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். இப்படியாக நீண்டநாள் தொல்லைகள் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். மனநிறைவோடு இந்த வார்த்தை கடந்து செல்கிறீர்கள். சொல்வதற்கு பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை. அவ்வப்போது உடல்நிலையில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் சரிதான். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் அம்மன் வழிபாடு மனதிற்கு தைரியத்தை கொடுக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் கதவை தட்ட போகின்றது. அதை பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் பொய் சொல்லி எதையும் சமாளிப்பீர்கள். பிரச்சனை வந்தாலும் சரி, உண்மையை சொல்லி விடுங்கள். அதுதான் உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. குடும்பத்தில் அமைதி தேவை என்றால், சண்டை சச்சரவுகள் வந்தாலும் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி யாராவது ஒருத்தர் அமைதியாக செல்வதுதான் நல்லது. தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -