இந்த வார ராசிபலன் – 20/12/2021 முதல் 26/12/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் அடுத்தவர்களிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். வார்த்தைகளை அனாவசியமாக விட்டுவிடக்கூடாது. வாக்குவாதம் செய்யக் கூடாது. யோசிக்காமல் பேசுவதன் மூலம் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை நிரூபித்து பாராட்டை பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் பங்குதாரர்களிடம் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கணக்கு வழக்குகளை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் காலை நேரத்தில் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்வது நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கும். உறவினர்களின் வருகை இருக்கும். சுபச் செலவுகளும் இருக்கும். இதுநாள் வரை இருந்த உடல் உபாதைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். நன்மைகள் நடக்கக்கூடிய இந்த வாரம் முழுவதும் தினம்தோறும் காலையில் விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவும் சந்தோஷமும் இருந்தாலும் உங்களுக்கு வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கப்போகின்றது. தேவையற்ற பொறுப்புகளும் சுமைகளும் உங்கள் தலை மேல் வந்து விழும். எந்த வேலையை முதலில் செய்வது எந்த வேலையை பிறகு செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் திணறுவீர்கள். இருப்பினும் எல்லா வேலையையும் வெற்றியாக முடித்துக் காட்டுவீர்கள். இந்த வார இறுதியில் எதையோ சாதித்தது போல மனதில் ஒரு தெளிவு இருக்கும். சந்தோஷம் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் படிப்படியாக விலகும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் இறைவழிபாட்டில் உங்களுடைய மனதை ஈடுபடுத்த போகிறீர்கள். நீங்கள் எதிர்பாராத இறை வழிபாட்டின் மூலம் உங்களுடைய மனம் அப்படியே சிலிர்த்துப் போகப் போகிறது. இறைவனே நேரில் வந்து வரத்தை தந்தது போல நிறைய சம்பவங்கள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அடிக்கடி உங்களுடைய மனது எதையோ இழந்தது போல இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை‌. மனதை தெளிவாக வைத்துக் கொள்ள உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருந்து சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் கொஞ்சம்கூட அதிகமாக இருக்கும். முக்கியமான வேலைகள் உங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். இப்படி பல வேளைகளில் நீங்கள் சிக்கி இருக்கும்போது, குழப்பத்தில் அவசரமாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அலசி ஆராய்ந்து எது நல்லது என்பதை தீர்மானித்து முடிவு எடுப்பது மிக மிக அவசியம். தேவையற்ற மனக் குழப்பங்கள் அகலும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி கொஞ்சம் தூரத்தில் இருக்க போகின்றது. அதாவது நீங்கள் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை. கொஞ்சம் கூடுதலாக உழைத்து, கொஞ்சம் கூடுதலாக முயற்சி எடுத்து, சோம்பேறித்தனத்தை தூக்கி போட்டு விட வேண்டும். அப்போது தான் வெற்றியை நீங்கள் அடைய முடியும். வேலை செய்யும் இடத்தில் நிறைய போட்டிகள் இருக்கும். முட்டி மோதி மேலே வரவேண்டிய சூழ்நிலை. குலதெய்வத்தை தினம்தோறும் நினைத்து வழிபாடு செய்துவிட்டு வேலையை தொடங்குங்கள். வெற்றி உங்கள் பக்கம்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. பிரச்சினைகள் எதுவும் பெரிதாக வராது. உடல் சோர்வு இருக்கும். இன்னைக்கு செய்ய வேண்டிய வேலையை கூட நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போட்டு விடுவீர்கள். மந்தமான போக்கு காணப்படும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் திட்டுவாங்க வேண்டியதாக இருக்கும். அனுசரித்துச் செல்லுங்கள். இதற்காக வேலையை விட வேண்டும் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். புதிய வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் வந்து சந்தோஷத்தை கொடுக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டு கிடைக்கும். உயர்பதவிகள் கிடைக்கும். சந்தர்ப்பங்களை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. சொந்தத் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல காலம் என்று கூட சொல்லலாம். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாக நிறைய வாய்ப்புகள் உள்ளது‌. உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை காட்டுங்கள். அனாவசியம் வேண்டாம். பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் அக்கறையோடு செயல்படப் போகிறீர்கள். உங்களுடைய வேலையை முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். நாளை செய்யக்கூடிய வேலையை இன்றே செய்து பாராட்டையும் பெறுவீர்கள். கூடுதல் சுறுசுறுப்பு இருக்கும். சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் அதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்களின் உதவி கிடைக்கும். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம். பொறுமையாக இருங்க. நல்ல விஷயங்களை சிந்தியுங்கள். நல்ல விஷயத்தை பேசுங்கள். நல்லதே நடக்கும். கோபத்தில் கூட அனாவசியமாக அடுத்தவர்களை நோகும்படி பேச வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். உங்களுடைய குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எப்போதும்போல வருமானம் கிடைக்கும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன கஷ்டங்கள் அவ்வப்போது வந்து போகப் போகின்றது. வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். சொந்த தொழிலில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பாதிப்பு பெரியதாக இருக்காது. பிரச்சனைகள் கூடுமானவரை இந்த வார இறுதிக்குள் சரிசெய்து விடுவீர்கள். ஆனால் கவனத்தோடு செயல்பட்டால் வரக்கூடிய பிரச்சினைகள் பெரியதாகமல் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அக்கறையோடு பொறுப்போடு செயல்பட வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு கைகொடுக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக சில வேலைகளை செய்து முடிக்கப் போகிறீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை மறந்து விட்டு, இனி வரப்போகும் காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான சில முயற்சிகளை எடுக்க போகிறீர்கள். அந்த முயற்சிகள் உங்களுக்கு வெற்றியையும் கொடுக்கும். பின்னடைவு வேண்டாம். மன பயத்தை எடுத்து ஒதுக்கி வைத்து விடுங்கள். தைரியமாக வாழ்க்கையின் முன்னேற்றத்தில் காலடி எடுத்து வைக்கலாம். நிச்சயம் நல்லதே நடக்கும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -