இந்த வார ராசிபலன் 27/03/2023 முதல் 01/04/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan10
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதில் நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமாக பண வரவு இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். வாங்கிய கடன்களை எல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் காலம் வந்துவிட்டது.

இனி கடன் சுமையால் கலங்கி நிற்க வேண்டாம். தொழிலில் அமோக லாபம் உண்டு. நீண்ட தூரம் பயணம் நன்மையை தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். உங்களுடைய உடைமைகளை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். சில பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. தினமும் ஸ்ரீ ராம ஜெயம் சொல்வது நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அந்த பிரச்சனைகளை சரி செய்ய நாலு பேர் உதவுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பொறுமை தேவை. எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. எதிர்பாராத செலவு கழுத்தை நெரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தினமும் ஓம் நமசிவாய மந்திரம் சொல்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

நீங்கள் நிறைய நல்லது செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யக்கூடிய ஒரு தவறு அந்த நிறைய நல்லதை அழித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள். மற்றபடி வியாபாரம் அமோகமாக நடக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. ஆன்லைன் பிசினஸ் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

- Advertisement -

இருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இப்போது அதற்கான சூழ்நிலை சரியில்லை. கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவு வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். தினமும் துர்கை அம்மனை மனதில் நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடுமையான உழைப்பு பெரிய வெற்றியை தேடி தரப் போகிறது. நீங்கள் செய்யும் வேலையை பார்த்து உங்கள் எதிரிகள் அப்படியே அதிர்ந்து போவார்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்கு இனி வெற்றி தான்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக உறவினர்கள் நண்பர்கள் என்று நம்பி பணத்தை கொடுத்தால் திரும்பி வருவது கஷ்டம் தான். நினைத்ததை நடத்தி முடித்து வெற்றி வாகையை சூடி சந்தோஷத்தில் இருக்கும் சமயத்தில் தலைகனம் அதிகரிக்கக் கூடாது. முடிந்தால் குடும்பத்தோடு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நன்மை தரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. கடந்த சில நாட்களாக இருந்து வந்த தொல்லைகள் அனைத்தும் இந்த வாரம் சரியாகிவிடும். மனநிலை சரியாகும். உடல்நிலை சரியாகும். நிதி நிலைமையும் சரியாகும். ஆனால் இந்த வாரம் புதிய முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை விடாதீர்கள்.

தெரியாத விஷயமாக இருந்தால் நாலு முறை விசாரித்த பின்பு அதை செய்வது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர் பாலின நட்போடு மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வீண் செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நன்மை உண்டு.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். எல்லா விஷயத்திலும் தான். மனைவி ஒரு பக்கம் பிரச்சனை. பிள்ளை ஒரு பக்கம் பிரச்சினை. செய்யும் தொழிலில் ஒரு பக்கம் பிரச்சினை. போகும் வேலையில் ஒரு பிரச்சனை. மேனேஜர் ஒரு பிரச்சனை.

தொழில் செய்ய முடியாமல் ஒரு பிரச்சனை. இப்படி பிரச்சனைகள் உங்களை வட்டம் போடக்கூடிய வாரம் தான் இது. ஆனால் பயந்து விடாதீர்கள். பெரியதாக எந்த அளவிலும் பாதிப்பு ஏற்படாது. கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து, கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட்டால் நிச்சயமாக நன்மை நடக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். இரவு நேர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். வெளியிடங்களில் அதிகமாக சாப்பிடாதீங்க.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபரிடம் நெருங்கி பழகாதீங்க. குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று உஷாராக இருந்தால் இந்த வாரம் தப்பிப்பீர்கள். தினமும் காலை எழுந்தவுடன் பிள்ளையாருக்கு மூணு தோப்புக்கரணம் போட்டு இன்னைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கலான பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு கிடைக்கக்கூடிய வாரம். சொத்து பிரச்சனை தீரும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். புதியதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வங்கியின் மூலம் கடன் கிடைக்கும்.

சொந்த வீடு கட்ட ஆசைப்பட்டவர்களுக்கு பேங்கில் லோன் கிடைக்கும். எல்லாம் நல்லது நடக்கக்கூடிய வாரம் தான். இந்த வாரம் நிறைய நல்லது நடந்தாலும், சின்ன சின்ன பிரச்சனைகள் உங்களுக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுக்கும். அனுபவங்கள் நிறைய கிடைக்கும்.

வெற்றியோடு சேர்ந்த சில தோல்விகள் வரலாம். அந்த தோல்விகளின் மூலம் பாதிப்பு இருக்காது. நல்ல பாடம்தான் கற்றுக் கொள்வீர்கள். இந்த வாரம் 26, 27ஆம் தேதி சந்திராஷ்டமம் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினமும் காலை முருகனுக்கு இரண்டு சிவப்பு மலர்களை போட்டுவிட்டு வேலைகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் முயற்சிகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டிய வாரமாக இருக்கும். எதிரிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். உங்களை எந்த வேலையும் சரியாக செய்ய விட மாட்டார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

இந்த நண்பனா இப்படி செய்தது என்று கஷ்டப் வரும் அளவுக்கு எல்லாம் பிரச்சனைகள் நடக்கும். மனம் தளர விடாதீர்கள். வீண் செலவு அதிகரிக்கும். செய்யாத தப்புக்கு தண்டனை கிடைக்கும். கெட்ட பெயர் வாங்கி அவமானப்படக்கூடிய சூழ்நிலை கூட உண்டாகும். ஆனால் உண்மை வெளி வரும்போது உங்களை எல்லோரும் புரிந்துகொள்வார்கள். நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பேருக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் 28, 29ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம். ஜாக்கிரதை தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டு.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கல் நிறைந்த வாரமாக தான் இருக்கும். பிரச்சனைகள் வீட்டு வாசல் தேடி வந்து கதவை தட்டும். நான் தலையிட மாட்டேன் என்று சொன்னாலும் உங்களை இழுத்துக் கொண்டு போய் வீதியில் நிற்க வைக்கும். அனாவசியமாக நாலு பேரிடம் திட்டு வாங்குவீங்க. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பொறுமையா இருங்க.

மேலதிகாரிகளை எதிர்த்துப் பேசாதீங்க. எக்காரணத்தைக் கொண்டும் இருக்கும் வேலையை விட்டு விடாதீர்கள். தொழிலை கெடுப்பதற்காகவே நாலு பேர் வருவாங்க. நல்லா போயிருக்க தொழிலுக்கு ஒரு ஐடியா கொடுத்து, அதை நீங்க செஞ்சு, அதன் மூலம் பல பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வரக்கூடிய பிரச்சனைகளை கொஞ்சம் சாமர்த்தியமாக சமாளித்து தான் ஆக வேண்டும். மன நிம்மதி கெட்டுப் போகும்.

கஷ்ட நஷ்டங்களை கடப்பது தான் வாழ்க்கை. ஆகவே பயப்படாதீங்க இந்த வாரம் 30 ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம். தினமும் அரச மரத்தடி விநாயகரை சுற்றி வந்தால் அதிர்ஷ்டம் உண்டு.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் கவனம் தேவை. காய்கறி வெட்டினால் கூட பெண்கள் கையை வெட்டிக் கொள்வீர்கள். இரத்த காயம் ஏற்படும். பெரிய பெரிய தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடியவர்கள் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

நெருப்பில் வேலை செய்பவர்கள், ஃபேக்டரியில் வேலை செய்பவர்கள் மின்சாரத் துறையில் வேலை செய்பவர்கள் என்று ரிஸ்கான வேலையில் இருப்பவர்கள் எல்லாம் வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் போட்டுக்கோங்க. நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டுமா பணம் காசு கொடுக்க வேண்டுமா அல்லது வரி செலுத்த வேண்டுமா சரியான நேரத்தில் செலுத்தி விடுங்கள். அடுத்தவர்களுடைய பணத்தை உங்கள் கையில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு தொழிலை நடத்த முடியாமல் முதலீட்டுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நல்லது என்று செய்தால் கெட்டது நடக்கும். மனசே இல்லாமல் ஒரு காரியத்தை செய்வீர்கள் அது உங்களுக்கு வெற்றியை கொடுத்து விடும். இப்படி தலைகீழ் பாடங்களை நிறைய கற்றுக் கொள்வீர்கள். தினமும் சிவன் கோவிலுக்கு சென்று ஐந்து நிமிடம் தியானம் செய்தால் நன்மை உண்டு.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மௌன விரதம் இருக்க வேண்டும். பேசாமல் இருக்க முடியாது. அனாவசியமாக நீங்கள் பேசக்கூடாது. யாரிடமும் போய் வாக்குவாதம் செய்யாதீங்க. அவங்க சரின்னு சொன்னா சரின்னு தலையாட்டிக்கோங்க. அவங்க தவறுன்னு சொன்னா நீங்களும் தவறு என்று தலையாட்டி கோங்க. அதுதான் உங்களுக்கு நல்லது.

உங்களுடைய வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மூன்றாவது நபரின் பிரச்சினையில் தலையிடாதீர்கள். எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் அடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தோடு வெளியே சென்று நேரத்தை சந்தோஷமாக கழிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். மற்றபடி பண சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் உஷாராக இருங்கள். யாரையும் நம்பாதீர்கள். தினமும் மகாலட்சுமி நினைத்து வீட்டில் மகாலட்சுமிக்கு மல்லி பூ போட்டு விளக்கு ஏற்றினால் ரொம்ப ரொம்ப நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருக்கும். ‌ நீண்ட தூர பயணம் இருக்கும். அந்த பயணத்தின் மூலம் ஆதாயமும் கிட்டும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். சொத்து வாங்கக் கூடிய நேரம் காலம் இருக்கிறது. சொந்த நிலம் வீடு வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். நன்மை நடக்கும். திருமணம் கைகூடிவரும்.

சொந்த பந்தங்களை அனுசரித்து செல்லுங்கள். உடன் பிறந்தவர்களிடம் சண்டை சச்சரவு வர வாய்ப்புகள் உள்ளது. கடன் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை கவனம் அதிகம் தேவை. உங்கள் பணத்தை அடுத்தவர்கள் ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக எதை நினைத்தும் பயப்படாதீர்கள். தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இனி வரக்கூடிய காலம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.

- Advertisement -