இந்த வார ராசிபலன் – 22/11/2021 முதல் 28/11/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றியை அடையும் சூழ்நிலை நிலவும். வெற்றி சுலபமாக உங்கள் கைக்கு வராது. ஆனால் உங்களுடைய குறிக்கோளை நோக்கி விடாமுயற்சியோடு சென்று கொண்டே இருங்கள். வெற்றி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் அவசரப்படவேண்டாம். நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். வேலை செய்யுமிடத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சொந்த தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தினம்தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இந்த வார இறுதியில் ஏற்படும். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியமும் பாராட்டும் கிடைக்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் போராட்டங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. சில விஷயங்களை நீண்ட தூரம் போராடி வெற்றி அடைய முடியாமல் விட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கைவிட்ட ஒரு விஷயம் மீண்டும், உங்கள் கையை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் நன்மை ஒன்று உங்களுக்கு காத்திருக்கின்றது. அலுவலகப் பணியில் திட்டமிட்டு வேலைகளை முன் கூட்டியே முடித்து வைப்பது நல்லது. சொந்த தொழிலில் அதிகப்படியாக கடனை வாங்கி முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பாக அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. எல்லா விஷயத்திலும் உங்களுக்கு சாதகமாகவே சில விஷயங்கள் நடந்தாலும், பொறுப்புணர்ச்சியில் அதிக கவனம் தேவைப்படுகின்றது. உங்களுடைய வேலையில் கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் அது உங்களுக்கு பிரச்சினையை கொடுத்து விடும். கவனமாக இருங்கள். அடுத்தவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி எத பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்னு சொல்வாங்க இல்லையா, அதுபோல உங்களுக்குன்னு ஒரு டைம் டேபிள் போட்டு வச்சிக்கோங்க. அதிக கவனத்துடன் இருந்தால் இந்த வாரத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாத்துக்கலாம். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த நிறைய நல்ல காரியங்கள் உங்கள் குடும்பத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடக்க தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் எப்போதும்போல செல்லும். ஏற்ற இறக்கங்கள் பெரியதாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கதவை தட்டப் போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இப்படி உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் அது சீக்கிரத்திலேயே பூர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். சொந்த தொழிலில் லாபம் சீராக வரும். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் இழுபறி இருக்கும். வேலையை செய்யவும் முடியாமல் முடிக்கவும் முடியாமல் திணறுவீர்கள். இருப்பினும் இந்த வார இறுதியில் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பழைய கடன் பாக்கிகளை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவீர்கள். முடிந்தவரை உறவினர்களிடத்தில் நண்பர்களிடத்தில் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தினம்தோறும் ஸ்ரீராமஜெயம் சொல்லவேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்டமும் நஷ்டமும், நன்மையும் தீமையும் கலந்து இருக்கப்போகின்றது. வாழ்க்கை என்றாலே இன்பமும் துன்பமும் சேர்ந்தது தானே. அதை நினைத்து கவலைப்படாதீர்கள். தினம்தோறும் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு வேலையை தொடங்குங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் உண்டு. எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்கவேண்டும். அவசரப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தினம்தோறும் காலையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்ய வேண்டும். நல்லது மட்டுமே நடக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதி அற்புதமான நாளாக இருக்கப் போகின்றது. பிரச்சனைகள் எவ்வளவு இருந்தாலும் அந்த பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் ஆக மாறிவிடும். மன அழுத்தம் நீங்கும். சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க தொடங்கும். நான்கு பக்கத்தில் இருந்து வரக்கூடிய நல்லதை சுமக்க முடியாமல் கஷ்டப்பட போகிறீர்கள். அவ்வளவு சந்தோஷம் இருக்கும். யார் கண்ணும் உங்கள் மேல் படாமல் இருக்க வேண்டும். குல தெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களின் திறமை இந்த வாரம் வெளிப்படும். உங்களுடைய தெளிவான பேச்சால் தெளிவான சிந்தனையால் உங்களை சுற்றி இருப்பவர்கள் மூக்கின் மேல் கையை வைக்கும் அளவிற்கு உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உறுதியோடு அடுத்தவர்கள் செய்ய பயப்படும் சில விஷயங்களை நீங்கள் செய்வீர்கள். தினம்தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரமோஷன் சம்பள உயர்வு இவைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த பந்தங்கள் இடையே கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம் தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல நன்மைகள் நடக்கப்போகின்றது. பல குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கப் போகின்றது. கவலையோடு ஆரம்பித்த சில விஷயங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும். சந்தோஷத்தோடு ஆரம்பித்த சில விஷயங்கள் சில சங்கடங்களை கொடுக்கும். இது இயல்புதான். அதை நினைத்து கவலைப் படவேண்டாம். விடாமுயற்சியோடு இருக்க வேண்டும். அதே சமயம் சோம்பேறித்தனத்தை தள்ளிவைக்க வேண்டும். நாளை செய்யக்கூடிய வேலையை இன்றே முடித்துவிட வேண்டும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -