இந்த வார ராசிபலன் 28/11/2022 முதல் 04/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan2
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவை கொடுக்க கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்க தொடங்கி விடும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும் எதிர்த்து பேசக்கூடாது. சில விஷயங்கள் உங்கள் மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் தலையை ஆட்டிக் கொள்ள வேண்டும். இல்லை நான் சொல்லுவது மட்டும் தான் சரி, என் மனதிற்கு பிடித்ததை தான் செய்வேன் என்று தாறுமாறாக நடந்து கொண்டால், பிரச்சனை உங்களுக்குத்தான். நெருங்கிய நண்பர்களுடன் விரோதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது பார்த்து பழகுங்கள். செய்யும் தொழிலில் லாபம் குறைவாகத்தான் காணப்படும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பாரம் ஓரளவுக்கு சுமாரான வாரம் ஆகத்தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் தலையை தூக்கும். என்னதான் பேசி புரிய வைத்தாலும் வாழ்க்கை துணைக்கு மண்டையில் சில விஷயங்களை ஏற்றவே முடியாது. மற்றபடி செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். நீண்ட தூர பயணம் உடல் அசதியை கொடுக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வாரம் இது. இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குழந்தை வரம் தள்ளிப் போனவர்களுக்கு, நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. தினமும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கக் கூடாது. பெரியவர்களின் ஆலோசனை இல்லாமல் புதிய முயற்சியில் ஈடுபடாதீங்க. செய்யக்கூடிய தொழிலில் எதிர்பாராத லாபம் வரும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு போனஸ் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை வேலை செய்யும் இடத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அநீதிக்கு துணை போகாதீங்க. சம்பளம் தவிர வேறு யாரு, எந்த பணத்தை கொடுத்தாலும் கை நீட்டி வாங்காதீங்க. சிக்கலை உண்டு பண்ணிவிடும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் 28ஆம் தேதி சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்டங்கள் நீங்க கூடிய வாரம். பல நாட்களாக உங்களை தொடர்ந்து வரும் கஷ்டங்கள் எல்லாம் இனி படிப்படியாக குறைந்து வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் தரக்கூடிய வாரம் இது. தொழிலை விரிவுபடுத்தலாம். அதற்கு தேவையான வங்கி கடன் சீக்கிரம் கிடைக்கும். கூடுமானவரை யாரிடமும் முன்கோபத்தை காட்ட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. குறைவாக பேசினால் பிரச்சனை கிடையாது. இந்த வாரம் 29, 30 டிசம்பர் 1 ம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. அதிக கவனம் தேவை. தினம் தோறும் மனதிற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலைச்சலான வாரமாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். பொறுமை அவசியம் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கக்கூடிய முடிவு பின் விளைவுகளை அதிகமாக கொடுத்து விடும். சங்கடங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. எல்லோருக்கும் மரியாதை கொடுத்து பேசுங்கள். வார்த்தையை கொட்டி விட்டால் திரும்பவும் அல்ல முடியாது. வேலை செய்யும் இடத்தில் நண்பர்களும் பகையாக மாறக்கூடும். பகைவர்களும் நண்பர்களாக மாறக்கூடும். தொழிலில் எதிர்பாராத நல்லது நடக்கும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எந்த வேலையை தொட்டாலும் வெற்றி தான். பயப்படாமல் புதிய முயற்சிகளை எடுக்கலாம். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலைக்கு செல்லலாம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மனைவி சொல்வதை தட்டாமல் கேட்டால் பிரச்சனை இருக்காது. வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்ட முதலை விட 10 மடங்கு லாபத்தை எடுப்பீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு கொஞ்சம் பயப்படுவார்கள். அந்த அளவுக்கு சிறப்பான வாரம் இது. மூன்றாவது மனிதர்களைப் பற்றி அனாவசியமாக பேசாதீங்க. உங்க வேலையை நீங்க பார்த்தா இன்னும் வாழ்க்கையில் பல முன்னேற்றம் இருக்கும். தினமும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கிறது. பெரிய பெரிய சிக்கல்கள், பெரிய பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். சொல்லப்போனால் உங்களுடைய திறமை அதிகமாக போகிறது என்றுதான் அர்த்தம். புத்தி கூர்மை அடுத்தவர்களை வியப்படைய வைக்கும். திடீர் திடீரென்று புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். நம்ப முடியாத அதிசயங்கள் கூட வாழ்க்கையில் நடக்கும். சொல்வதற்கு இல்லை. நீங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல பெரிய வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கின்றது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மட்டும் அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் வரலாம். அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் நிதானதோடு இருக்க வேண்டும். முன்கோபம் கூடாது. எல்லா நேரத்திலும் வெற்றி நம்மிடம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது அல்லவா. ஆகவே தோல்வி அடையக்கூடிய சமயத்தில் தான் நாம் கொஞ்சம் மனதை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகக் கூடாது. எல்லாம் நாளை சரியாகிவிடும் என்ற மந்திரத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாள் கடன் வசூல் ஆகும். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதி இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. இறைவழிபாட்டில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஹனுமன் வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுபவரீதியாக நிறைய பாடங்களை கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். நிறைய தவறு செய்வீங்க. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அனுபவ பாடத்தை கற்றுக் கொண்டு, அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு நீங்கள் தெளிவடைந்து விடுவீர்கள். கெடுதல் நடந்தாலும் இறுதியில் அது உங்களுக்கு நன்மையை தான் கொடுக்கும். பிறகு அந்த தவறை நீங்கள் செய்யவே மாட்டீங்க. அந்த அளவுக்கு வாழ்க்கை உங்களுக்கு பாடத்தை கற்றுத் தரும். பயந்துடாதீங்க நல்லது தான் நடக்கப் போகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவார்கள் அல்லவா. அப்படி நீங்கள் அளவுக்கு மீறி நம்பிய நட்பு, அளவுக்கு மீறி நம்பிய உறவு, என்று எல்லோர் மனதிலும் எந்த அளவுக்கு தீமை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய காலம் இது. வாழ்க்கையை புரிந்து கொள்ள போகிறீர்கள். மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள் நல்லது நடக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிவாகை சுடக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதற்கும் கவலைப்படவே மாட்டீங்க. நீங்க பாட்டுக்கு உங்க வேலைய பாப்பீங்க. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை மட்டும் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளப் போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத நன்மை நடக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான சாப்பாட்டை நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நிறைய நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மன கவலை இருக்கும். நினைத்ததை செய்ய முடியாது. நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன ஊடல் ஏற்படும். புதியதாக திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில பேருக்கு புதியதாக சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகள் கூட உள்ளது. கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் சொல்வதை செவி கொடுத்து கேளுங்கள். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடனை திருப்பிக் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தோடு வாங்க கூடிய கடன் பெரிய சுமையை கொடுத்து விடும். ஜாக்கிரதை. சம்பாதிப்பதை கூட முழுசாக செலவு செய்யக் கூடாது சேமிப்பில் கொஞ்சம் வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் நடந்ததையே நினைத்து வருத்தப்படக்கூடாது. இனி நடக்கக்கூடிய நல்லதை பாருங்கள். நடந்த கஷ்டத்திற்கு எல்லாம் நான் செய்த தவறுதான் காரணம் என்று புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை செய்த தவறை திருத்திக் கொள்ளுங்கள். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். இனி ஒவ்வொரு வெற்றியாக உங்களைத் தேடி வரும். ஏளனமாக பேசியவர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

- Advertisement -