இந்த வார ராசிபலன் – 20/9/2021 முதல் 26/9/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் அற்புதமான வாரமாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வகையில் அமைப்புகள் இருப்பதால் எதிலும் ஜெயம் உங்களுக்கு தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் சீரான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் கவனம் அதிகரித்து காணப்படும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அம்பிகையை துதியுங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் முடியாது என்று நினைத்த காரியம் கூட முடிவுக்கு வரும். தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்ததை நினைத்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். அரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். விநாயகரை வழிபடுங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இவ்வாரம் ஏற்ற இறக்கமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். பங்குதாரர்களுடன் இணக்கம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனாவசிய பேச்சு வார்த்தைகளை குறைத்து வேலையில் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் பெறுவீர்கள். துர்க்கை அம்மன் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் அற்புதமான வாரமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். கிடைக்க வேண்டிய இடங்களில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும். கந்தனை துதியுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் புத்துணர்வுடன் செயல்படும் அற்புத வாரமாக இருக்கும். மனதில் இருக்கும் குழப்பங்களுக்கான விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். முன் பகை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருக்கும் போட்டியாளர்களை திறம்பட சமாளித்து சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்பட்டு அவர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். வெளியிடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிவ வழிபாடு மேற்கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் அற்புதமான பலன்கள் உண்டாகும் நல்ல வாரமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாக முடிவுகளை எடுப்பதில் சாதுரியமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தின் மீதான உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். சுபகாரியத் தடைகள் விலகி நன்மைகள் நடைபெறும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் நினைக்க முடியாத அளவிற்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக அமைய இருக்கிறது. இதுவரை வசூலாகாத பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து அதிர்ஷ்டம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய பணி சுமை குறையும். கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் அடையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். விடா முயற்சி தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் நினைத்ததை சாதித்துக் காட்டும் யோகம் உண்டு. எதையும் விடாப்பிடியாக முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரணையான பேச்சாற்றல் நன்மைகளை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு பெறும் வாரமாக அமைய இருக்கிறது. உங்கள் மீதான கண்ணோட்டம் மற்றவர்களுக்கு மாற்றி அமைத்து காட்டக் கூடிய வல்லமை உண்டாகும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக இருக்கும். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். கூடுமானவரை பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுடைய எதிர்பார்ப்புக்கு உரிய வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். முருக வழிபாடு நன்மைகளை கொடுக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் நீங்கள் நினைத்ததை விட சிறந்த பலன்களை பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீரும். இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொலை தூர இடங்களிலிருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்களை வெற்றி கொள்ளும் யோகம் உண்டு. பெண்களுக்கு கவலைகள் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் பெறுவீர்கள். காரிய சித்தி உண்டாக விக்னேஸ்வரரை வழிபடுங்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் நீங்கள் நினைக்கும் சில விஷயங்கள் தடை, தாமதங்களை சந்திக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேளைகளில் கூடுதல் அக்கறை செலுத்தினால் நன்மைகள் நடக்கும். பெண்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வர நினைத்தது கைகூடும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இவ்வாரம் நீங்கள் நினைத்ததை அடைய போராடும் வாரமாக அமைய இருக்கிறது. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்கள் உடைய அடையாளத்தை கண்டுணரும் வாய்ப்புகளை பெறுவீர்கள். பெண்கள் அதிகாரத்துவத்தை பெறுவீர்கள். எதிலும் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். வெற்றி பெற விடா முயற்சி தேவை. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

- Advertisement -