இரவில் தூக்கம் வராதவர்கள் இந்த ஒரு அபூர்வ மந்திரத்தை சொல்லிப் பார்த்தால், படுத்தவுடன் தூக்கம் வந்துவிடுமா? நித்திரை தரும் அபூர்வ மந்திரம்!

sleep-mantra-singnature
- Advertisement -

படுத்தவுடன் எல்லோருக்கும் தூக்கம் வந்து விடுவது கிடையாது. எவர் ஒருவருக்கு படுத்ததும், தூக்கம் வருகிறதோ அவர்களுக்குத் தான் உண்மையான நிம்மதி இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. நிம்மதியை இழந்தவர்களுக்கு மட்டுமே இரவில் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வருவது கிடையாது. தூக்கம் கெட்டுப் போனால் உடலும் கெட்டுப் போகிறது. மனம் மட்டும் அல்லாமல் உடலும் சேர்ந்து சோர்ந்து போகிறது. இதிலிருந்து எளிமையாக விடுபடுவதற்கு இந்த அபூர்வ சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து தூங்கி பாருங்கள், உடனே தூக்கம் வரும். அப்படியான மந்திரம் என்ன? என்பதை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தூக்கம் வருவதற்கு கூட மந்திரம் சொல்ல வேண்டுமா? கடவுளை துணைக்கு அழைக்க வேண்டுமா? என்று யோசிக்க வேண்டாம். ஒருவருக்கு தூக்கம் கொடுப்பவரும், கெடுப்பவரும் கடவுள் ஒருவரே ஆவார். நித்திரை என்பதும் ஒரு வரம் தான். இந்த வரத்தை எல்லோருக்கும் இறைவன் முழுமையாக கொடுப்பது இல்லை. ஆழ்ந்த நித்திரை கொள்பவர்களுக்கு மறுநாள் முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. ஆனால் எவ்வளவு பேர் ஆழ்ந்து உறங்குகின்றீர்கள்?

- Advertisement -

நம்மில் உண்மையைக் கூறப் போனால் எவருமே ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்திருக்க மாட்டோம். உடல் உழைப்பால் உடல் சோர்வுற்று இரவில் உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டு, பின்னர் படுக்கையில் போய் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வர வேண்டும். எதைப் பற்றிய சிந்தனையும் நம்முடைய மூளைக்கு கொண்டு செல்லக்கூடாது. இப்படி ஒரு தூக்கம் எவருக்கு வருகிறது? அவர் கொடுத்து வைத்தவர், வரம் பெற்றவர் என்பது தானே அர்த்தம்?

இத்தகு நித்திரை என்னும் வரத்தை அடைவதற்கு நீங்கள் இரவில் தூங்கும் பொழுது இந்த ஒரு மந்திரத்தை உச்சரியுங்கள். இது மகாத்மியத்தில் நான்காவது ஸ்லோகமாக இடம் பெற்றுள்ள அபூர்வ மந்திரமாகும். இந்த மந்திரம் தூக்கம் கெட்டுப் போனவர்கள் சொல்ல வேண்டிய மந்திரமாக இருக்கிறது. இந்த மந்திரத்தை கூறியதும், உங்களுக்கு இஷ்டமான ஏதாவது ஒரு கடவுளை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். வேறு எதையும் நீங்கள் நினைக்கக் கூடாது.

- Advertisement -

நித்திரம் தரும் அற்புத மந்திரம்:
யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதில் கொண்டு வந்து பின்னர் இந்த மந்திரத்தை உச்சரித்து கண்களை மூடி தியானம் செய்வது போல சிறுது நேரம் இருக்க வேண்டும். இப்படி செய்தாலே உடனே தூக்கம் வந்துவிடுவதாக நம்பப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தின் பொருளும் இதுவே ஆகும்.

எல்லா உயிர்களுக்கும் தூக்கம் தேவை. இந்த நித்திரையாக இருக்கக்கூடிய நித்திரை கடவுள் நம்மை மூடும் பொழுது, நம் உடலில் இருக்கும் அயர்ச்சி நீங்கி, புது புத்துணர்வு உள்ளுக்குள் ஏற்படுகிறது. இதனால் புதிய ஒரு விடியலை காண முடிகிறது. ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல், நம்முடைய ஆயுளை நாமே குறைத்துக் கொள்ளாமல், நேரத்திற்கு உணவு அருந்திவிட்டு, நேரம் போல் தூங்க சென்று விட வேண்டும். மனதில் இருக்கும் கவலைகளை உங்களுக்கு பிடித்த கடவுளின் பாதத்தில் சமர்ப்பித்து விட்டு, இந்த மந்திரத்தை உச்சரித்து தூங்கி விடுங்கள். நிச்சயம் உங்களுக்கு தூக்கம் வரும். அந்த நித்திரா தேவியே உங்களை ஆக்கிரமித்து உறங்க வைத்து விடவாள் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -