இரவு நேரத்தில் இந்த விஷயத்தை மட்டும் செய்யாமல் தூங்கி விடாதீர்கள்! பல பிரச்சனைகள் வரும்.

wash-sleep
- Advertisement -

தூங்க செல்வதற்கு முன்னர் பலரும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. தூங்கியவுடன் எத்தனை பேருக்கு தூக்கம் வருகிறது? கடுமையான உடல் உழைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தூங்கியவுடன் தூங்கி விடுவார்கள். ஆனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் தூக்கம் இன்மையால் படாதபாடு படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த விஷயத்தை செய்யாமல் தூங்கினால் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளது. என்ன விஷயத்தை செய்யாமல் தூங்கக் கூடாது? தூங்கினால் என்ன நடக்கும்? என்கிற சுவாரசிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சரியான தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மற்றும் துர் சொப்பனங்களால் அவதிப்படுபவர்கள் இரவு நேரத்தில் இந்த விஷயத்தை செய்து விட்டு தூங்கினால் நிச்சயம் இதிலிருந்து விடுபட முடியும். துர் சொப்பனங்கள் ஏற்படுவதற்கு காரணம், நீங்கள் இதை செய்யாமல் தூங்குவது தான்! நாம் வீட்டில் விளக்கேற்றி தெய்வ அம்சத்துடன் வைத்திருந்தால் நம் வீட்டிற்குள் இருக்கும் பொழுது எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படுவது இல்லை ஆனால் வீட்டை விட்டு வெளியில் சென்றதும் நம் உடன் துஷ்ட சக்திகளும் பயணிப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

- Advertisement -

இந்த துஷ்ட சக்திகள் நம் மனம், மூளை ஆகிய இரண்டையுமே கட்டுப்படுத்தி விடுகிறது. இதனால் நாம் செய்ய இருக்கும் செயலில் இருந்து நாம் திசைமாறி சென்று விடுகிறோம். துஷ்ட சக்திகள் என்பது வேறு எதுவுமல்ல எதிர்மறையான சிந்தனைகளும், ஆற்றல்களும் தான். இந்த எதிர்மறையான விஷயங்கள் நமக்கு தீமைகளை செய்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. இதிலிருந்து விடுபடுவதற்கு நாம் தூங்குவதற்கு முன்னர் கட்டாயம் இதனை செய்து விட்டு தூங்குவது நல்லது.

இன்று ஒருவரிடம் நீங்கள் சண்டை போடக் கூடாது என்று நினைத்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் உங்களை மீறியும் ஏதாவது ஒரு சட்டையை போட்டு விடுவீர்கள். இப்படி நீங்கள் நினைத்த ஒரு விஷயத்தை செய்ய விடாமல் அதற்கு நேர்மாறாக செய்யத் தூண்டுவது தான் எதிர்மறை ஆற்றல்களின் வேலையாகும். வீட்டை விட்டு வெளியில் சென்று வந்த உடன் கை, கால்களை நன்கு அலம்ப வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கால் கழுவும் பொழுது நம்முடைய பின்னங்கால்களையும் சேர்த்து கழுவ வேண்டும் என்று கூறுவார்கள்.

- Advertisement -

துஷ்ட சக்திகள் பின்னங்கால் வழியே உடலுக்குள் செல்வதாக ஐதீகம் உண்டு. அதனால் தான் கால்களை எல்லா இடங்களிலும் படுமாறு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவ வேண்டும் என்று கூறுவார்கள். சனி பகவான் நம்மை ஆட் கொள்ளும் வழிகளில் ஒன்றாக இருப்பதும் இந்த பின்னங்கால் தான். கால் கட்டை விரல் நகங்களில் மை வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். கட்டை விரலில் இருக்கும் நகங்களின் வழியிலும் துஷ்ட சக்திகள் நம்மை ஆட்கொள்ளும். எனவே வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக கை, கால் மற்றும் முகம் ஆகிய மூன்றையும் நன்கு சுத்தம் செய்து கழுவி விட வேண்டும்.

அதற்குப் பின்னர் தான் நீங்கள் வீட்டிற்குள் நுழைய வேண்டும். இப்போதெல்லாம் வீட்டிற்குள் தான் பாத்ரூம் கட்டி வைத்திருக்கிறார்கள் எனவே கை, கால், முகம் அலம்பி விட்டு பின்னர் எந்த ஒரு பொருட்களையும் நீங்கள் தொடலாம். அதுவரை எதையும் தொடாமல் இருப்பது நல்லது. இரவு தூங்குவதற்கு முன்னர் கட்டாயம் கை, கால், முகம் அலம்பி இருக்க வேண்டும். நீங்கள் வெளியில் சென்று வந்து கை, கால், முகம் அலம்பாமல் அப்படியே தூங்கச் சென்றால் துஷ்ட சக்திகளின் தொல்லைகள் அதிகரிக்கும். மேலும் எதிர்மறை ஆற்றல் பெருகும். ஒரு சிலருக்கு இரவில் தானாகவே உயிர் சக்தி வெளியேறுவதும் இந்த காரணங்களால் தான், எனவே இரவு தூங்குவதற்கு முன்பு இந்த விஷயத்தை செய்து விட்டு தூங்குங்கள்.

- Advertisement -