உங்களை உதாசீன படுத்தியவர்களும் உங்களை தேடி வந்து பாராட்டும் வகையில் உங்கள் வாழ்க்கை வெற்றி பெற இந்த சிறப்பு வாய்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்

sukku
- Advertisement -

ஒரு சில வீடுகளில் குழந்தைகள் படிக்கின்ற வயதிலேயே அவர்களது பெற்றோர் நீ உதவாமல் போய்விடுவாய், உதவாக்கரையாக மாறி விடுவாய் என்று திட்டுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிப்பது என்பது மிகவும் தவறான செயலாகும். நாம் என்ன சொல்கிறோமோ, நமது வாயிலிருந்து என்ன வார்த்தை வருகிறதோ அதற்கு அதிக பலம் இருக்கிறது. நமது வார்த்தையே நமது பிள்ளைகளுக்கு சாபமாக மாறி விடும். எனவே பிள்ளைகளை திட்டும் பொழுது சற்று கவனமாக வார்த்தைகளை உபயோகப் படுத்துங்கள். அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு வார்த்தையையும் சொல்லி அவர்களை திட்டி விடாதீர்கள். இப்படி வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கும் சிலருக்கு தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முருகப்பெருமானின் அருள் பெறுவதற்கு இந்த சிறப்பு பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். வாருங்கள் அது என்ன பரிகாரம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Parents

இன்றைய காலகட்டத்தில் பலவித சூழ்நிலையில் பலதரப்பட்ட மனிதர்களை பார்த்து வருகிறோம். அப்படி ஒரு சிலர் மற்றவரை உதாசீனப்படுத்துவதும், மட்டம் தட்டுவதும் இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது. என்னதான் ஒருவர் திறமையாக இருந்தாலும் அவரை விட மற்றவர் பேசுவதில் திறமையாக இருந்தால் இவரை உதாசீனப்படுத்தி, மட்டம்தட்டி அவரை கீழே தள்ளி தான் மேலே சென்று விடுவார். இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

- Advertisement -

எனவே எங்கு சென்றாலும் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாக தேவைப்படுகிறது. எவர் ஒருவர் நம்மை உதாசீனப்படுத்தினாலும், நமது திறமையைக் கண்டு அவரே நம்மை தேடி வந்து பாராட்ட வேண்டும். எந்த ஒரு தவறும் செய்யாமல் மற்றவர் கூறும் பொய் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தைரியமாக அந்த இடத்தில் எதிர்த்து நமது பக்க நியாயத்தை பேச வேண்டும். இப்படி போட்டிகள் இருக்கின்ற உலகத்தில் திறமையும், தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாவிட்டால் எந்த ஒரு காரியத்திலும் நம்மால் வெற்றிபெற முடியாது.

bold

இப்படி வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் நமக்குக் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் வெற்றியை கொடுக்கக்கூடிய முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும். அதற்கு நமக்கு தேவைப்படும் ஒரு அற்புதமான பொருள் என்னவென்றால் சுக்கு. முதலில் பூஜை அறையில் கடவுளின் முன் அமர்ந்து கொண்டு ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் சிறிதளவுள்ள ஒரு சுக்கினை வலது கையில் வைத்து இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். பின்னர் கண்களைமூடி முருகப் பெருமானை நினைத்து எனது வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க வேண்டும், எனது வேலையில் எனக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும், எனது வியாபாரம் சிறந்து விளங்க வேண்டும், நான் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடிய வேண்டும், இதற்கு எனது தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக வேண்டும் என்று சொல்லி

sukku

ஓம் முருகா ஓம் முருகா என 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து உங்கள் பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த சுக்கினை சிறிய பேப்பரில் மடித்து கொண்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் உபயோகிக்கும் பர்சில் வைத்து இதனை தங்களுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றியடையும்.

- Advertisement -