செய்யும் தொழில் அபரிவிதமாக வளர்ச்சி பெற்று கோடீஸ்வர யோகம் பெறுவதற்கு எருக்கம் பூ வைத்து பரிகாரம் செய்து பாருங்கள்.

erukku poo
- Advertisement -

தன் கையே தனக்கு உதவி என்று கூறும் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் தான் ஒருவர் பிறரிடம் கையேந்தி சம்பளம் வாங்கும் அளவிற்கு வேலை செய்யாமல் தானே சொந்தமாக ஒரு தொழிலை அல்லது வியாபாரத்தை ஆரம்பித்து தனக்கு கீழ் சிலருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய முயற்சிகளையும் எடுப்பார்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து அவர்களுடைய தொழில் லாபகரமாக நடைபெறுவதற்கு எந்த பூவை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் உகந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய செயல்களில் நாம் வெற்றியடைவதற்கு உதவக்கூடிய தெய்வமாக விளங்குபவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு உகந்த மலராக கருதப்படுவது தான் எருக்கம் பூ. அதிலும் குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருப்பது மிகவும் விசேஷகரமாக இருக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டு முறையை நாம் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளலாம். அல்லது விநாயகருக்கு உகந்த நாளான சதுர்த்தி நாளில் மேற்கொள்ளலாம். ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை தவிர்த்து விட்டு நல்ல நேரம் பார்த்து இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். முதலில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவருக்கு ஒரு அருகம்புல்லை சாற்ற வேண்டும். அடுத்ததாக ஒன்றிரண்டு எருக்கம் மலர்களை சாற்ற வேண்டும்.

அடுத்து நமக்கு தேவைப்படுவது ஒரு கண்ணாடி டம்ளர். அந்த டம்ளர் நிறைய நீரை ஊற்றி அதில் சிறிது மஞ்சள் மற்றும் குங்குமத்தை சேர்க்க வேண்டும். அடுத்ததாக வெற்றிகளை வாரி வழங்கக் கூடிய வேராக கருதப்படும் வெட்டிவேர் இரண்டை அதில் சேர்க்க வேண்டும். பிறகு நாம் பறித்து வைத்திருக்கும் எருக்கம் பூவை அதில் போட்டு வைத்துவிட்டு மனதார விநாயகரிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும்.

- Advertisement -

அன்று முழுவதும் இந்த தண்ணீர் அப்படியே விநாயகரின் அருகிலேயே இருக்க வேண்டும். மறுநாள் இந்த டம்ளரில் இருக்கும் அனைத்து பொருட்களையும் கால்படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் நாம் செய்தால் நம்முடைய வியாபாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி, வியாபாரம் வெற்றி அடையும். புதிதாக தொழிலை தொடங்க ஆரம்பிப்பவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் அவர்களுடைய தொழில் வெற்றிகரமாக நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இருக்கக்கூடிய சகல தடைகளும் நீங்குவதற்கு ஆகாயத்தாமரை ஒன்று போதும்.

தொழில் வெற்றிகரமாக அமைவதற்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கக்கூடிய தடைகளையும் இந்த வழிபாட்டு முறை நீக்கிவிடும். மேலும் கோடீஸ்வர யோகம் தரக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த பரிகாரமாகவும் இது திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -