தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் வெறும் 6 நாட்களில் நீங்க, முருகப்பெருமானை வீட்டிலேயே இப்படி வழிபட்டால் போதும்.

murugan
- Advertisement -

நாம் செய்யும் தொழில் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாமும் சிறப்பாக இருப்போம். நம் குடும்பமும் சிறப்பாக இருக்கும். இப்படிப்பட்ட தொழிலில் சில நேரங்கள் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். சில நேரங்களில் தடைகள் ஏற்படும். அவ்வாறு தடைகள் ஏற்படும் போது, அதனால் நாம் மட்டும் பாதிப்படையாமல், நம் குடும்பமும் சேர்ந்து பாதிப்படுகிறது. அப்படிப்பட்ட தடைகளில் இருந்து நாம் வெளிவரவும், தொழிலை சிறப்பாக செய்யவும் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறையை இந்த பதிவில் நாம் காண்போம்.

தொழில் தடைகள் நீங்கி சிறப்பாக நடைபெற நாம் வணங்க வேண்டிய தெய்வம் முருகப்பெருமான். தொழிலில் சிறக்க இந்த முருகப்பெருமானை எப்படி வணங்க வேண்டும்? என்பதை தான் நாம் பார்க்கப் போகிறோம். முருகனுக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு. அந்த ஆறுமுகப்பெருமானை இந்த பதிவில் சொல்வது போல் வழிபட்டு வந்தால், நம்முடைய தொழிலில் ஏற்பட்டிருக்கும் தடைகள் அனைத்தும் விலகிவிடும். தொழில் வெற்றிகரமாக நடைபெறும்.

- Advertisement -

ஆறுமுக பெருமான் என்பதால் அவருக்கு நாம் ஆறு நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையை நாம் வீட்டிலேயே செய்யலாம். எந்த ஒரு பூஜையை செய்வதாக இருந்தாலும், முதலில் நாம் விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கிய பிறகு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதலில் விநாயகப் பெருமானுக்கு ஒரு அருகம்புல்லை வைத்து, நான் செய்யும் இந்த பூஜை எந்தவித தடைகளும் இல்லாமல் நடக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பிறகு, நாம் செய்ய வேண்டிய பூஜையை செய்யலாம்.

முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு ஆறு எண்ணிக்கையில் வைக்க வேண்டும். பிறகு ஆறு வகையான பழங்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். நம் விருப்பத்திற்கும், பொருளாதார வசதிக்கும் ஏற்றவாறு ஏதாவது ஆறு பழ வகைகளை வைக்கலாம். அடுத்ததாக நாம் முருகனின் ஆறுமுகத்திற்கும் தனித்தனியாக ஆறு வகை மலர்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அர்ச்சனை செய்வதற்கு மந்திரங்கள் தேவையில்லை. எளிமையாக “ஓம் முருகா போற்றி” என்று சொன்னாலே போதும். ஒவ்வொரு முகத்திற்கும் இவ்வாறு பதினோரு முறை நாம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் அர்ச்சிக்க போகும் அந்த மலர்கள் தான். ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொன்றிருக்கிறது.

முதல் முகத்திற்கு நாம் மல்லிகை பூவை உபயோகப்படுத்த வேண்டும். மல்லிகை பூவை எடுத்து “ஓம் முருகா போற்றி” என்று பதினோரு முறை முருகனின் படத்திற்கு முன்பு அர்ச்சனை செய்ய வேண்டும். இரண்டாவதாக நாம் அர்ச்சிக்க எடுத்துக் கொள்ளும் பொருள் துளசி இலை. பொதுவாக துளசி இலை பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அந்த துளசி இலையை வைத்து நாம் முருகனையும் வழிபடலாம். இரண்டாவது முகத்திற்கு துளசி இலையை பயன்படுத்தி “ஓம் முருகா போற்றி” என்று 11 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். மூன்றாவதாக செவ்வரளி மலர். நான்காவதாக செம்பருத்திப்பூ. ஐந்தாவது முகத்திற்கு வில்வ இலை. ஆறாவது முகத்திற்கு நாம் தனியாக எந்த பூவையோ, இலையையோ எடுக்க வேண்டியது இல்லை.

இதையும் படிக்கலாமே: பௌர்ணமி அன்று வாராஹி அம்மனுக்கு முன் இந்த இலையில் உங்கள் பிரச்சைகளை எழுதி வைத்தால் மட்டும் போதும். உங்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட நொடியில் தீர்ந்து விடும்.

மேற்கூறிய அந்த ஐந்து வகையான பொருட்களை ஒன்றாக சேர்த்து அதாவது மல்லிகை, துளசி, செவ்வரளி, செம்பருத்தி மற்றும் வில்வம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 11 முறை “ஓம் முருகா போற்றி” என்று அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்த பிறகு, ஆறு கற்பூரங்களை ஏற்றி கற்பூர தீபாரதனை காட்ட வேண்டும் அல்லது ஆறு தீபங்கள் ஏற்றியும் நாம் தீபாராதனை காட்டலாம். இவ்வாறு நாம் தொடர்ந்து ஆறு நாட்கள் செய்து வந்தோம் என்றால் நம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தையும் அந்த ஆறுமுகம் நீக்கி வெற்றியை அருள்வார்.

- Advertisement -