பௌர்ணமி அன்று வாராஹி அம்மனுக்கு முன் இந்த இலையில் உங்கள் பிரச்சைகளை எழுதி வைத்தால் மட்டும் போதும். உங்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட நொடியில் தீர்ந்து விடும்.

varahi theepam manjal
- Advertisement -

இன்றைய கலியுகத்தில் அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் என்றால் அது வாராஹி அம்மன் என்று ஆணித்தரமாக சொல்லலாம். வேண்டுபவருக்கு வேண்டும் வரத்தை உடனே அளித்து வாழ வைக்கும் குழந்தை மனம் கொண்ட தெய்வமாக வாராஹி அம்மன் விளங்குகிறார். மனம் உருகி யார் எதை கேட்டாலும் உடனே வழங்கி விடும் ஆற்றல் இந்த தாயாருக்கு உண்டு. அப்பேற்பட்ட வாராஹி தாயாரை பௌர்ணமி நாளில் நம் பிரச்சனைகள் தீர எப்படி வணங்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆன்மீகம் பதிவு தான் இது.

வாராஹி கழுத்து வரை மனித உருவிலும் முகம் பன்றியின் உருவிலும் இருக்கும் இவரின் உருவத்தை பார்த்து இவரின் மனதை எடை போட்டு விடக் கூடாது. உருவம் பார்க்க பயங்கரமாக இருந்தாலும் குழந்தை மனம் படைத்த தாய் என்றால் அது வாராஹி தான்.  யார் அவர் முன் நின்று கண்ணீர் மல்க மனம் உருகி வேண்டுகிறார்களோ உடனே மனம் இறங்கி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் குணம் கொண்டவர்.

- Advertisement -

கேட்டதை கொடுக்கும் வாராஹி அம்மன் வழிபாடு:
இந்த வாராஹி அம்மன் வழிபாட்டிற்கு அம்மனின் திருவுருவப்படம் விக்ரகம் இரண்டில் எது இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களிடம் இரண்டும் இல்லை என்றால் ஒரு அகல் விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அந்த அகல் விளக்கை வாராஹி அம்மனாக பாவித்து கொள்ளுங்கள்.

வராராஹி அம்மன் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு அவருக்கு ஏதேனும் ஒரு கிழங்குகை நெய்வேத்தியமாக படைத்து விடுங்கள். அதே போல் சிகப்பு நிறத்தில் உள்ள பூக்களை மாலையாக தொடுத்து அம்மனுக்கு சாற்ற வேண்டும். இவையெல்லாம் செய்த பிறகு விரலி மஞ்சளை ஒற்றைப்படையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதாவது 9, 11 இப்படி ஆக விரலி மஞ்சளை எடுத்து மஞ்சள் கயிறு அதாவது தாலி சரடு என்று சொல்லுவோம் அல்லவா அதில் மாலையாக தொடுத்து வாராஹி அம்மன் படத்திற்கு போட வேண்டும். நீங்கள் விளக்கை மட்டும் வைத்து வழிபடுவதாக இருந்தால் விளக்கின் முன்பு வைத்து விடுங்கள்.

இப்போது வாராஹி அம்மன் படத்திற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொண்டு மா இலை, வாழை இலை (வாழை இலையை சின்னதாக நறுக்கி கொள்ளுங்கள் ) அல்லது வெற்றிலை மூன்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து அதில் உங்களின் பிரச்சனைகள் அல்லது உங்களின் தேவைகளை எழுதுங்கள். இப்படி எழுதிய இலையை விளக்கின் முன்பு வைத்து விட்டு ஓம் வாராஹி தாயே போற்றி என்ற நாமத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். இதற்கு மேலும் உச்சரித்தால் மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் நாம் செய்யும் இந்த சிறு மாற்றம். நம் சந்ததிக்கே அன்னதோஷம் என்பதே வராமல் தடுத்து விடும். அன்ன தோஷத்தை நீக்க இதை விட எளிய வழி இருக்கவே முடியாது.

பௌர்ணமி நாளில் வாராஹி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்தால் உங்கள் மனதில் நினைத்த காரியங்ககள் உடனே நிறைவேறும். உங்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்த்துக் கொள்ள இந்த வாராஹி அம்மன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பௌர்ணமி அன்று இந்த பூஜையை செய்வதற்கு முன்பாகவே உங்கள் வேண்டுதல் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் உடையவர் இந்த வாராஹி அம்மன்.

- Advertisement -