சிவனடியார்களுக்கு உங்கள் கையால் இதை தானமாக கொடுத்தால் வியாபாரத்தில் நஷ்டமே வராது.

sivan4
- Advertisement -

வியாபாரத்தில் வெற்றி பெற, நிறைய லாபத்தை சம்பாதிக்க, தொழிலதிபராக மாற, செய்ய வேண்டிய ஆன்மீக ரீதியான எளிய பரிகாரம். எல்லோருக்குமே தொழிலில் கொடி கட்டி பறக்க வேண்டும் தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்வது. ஒரு சிலரால் மட்டுமே தொழிலில் வெற்றி காண முடிகிறது.

வியாபாரத்தில் கொடி கட்டி பறக்க முடிகிறது. தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசையில் புதுசாக தொழில் தொடங்கி, ஒரு சில நாட்களிலேயே அதை இழுத்து மூடியவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். கவலைப்படாதீங்க. நீங்களும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

- Advertisement -

கொஞ்சம் முயற்சியும், கொஞ்சம் அதிர்ஷ்டமும், கொஞ்சம் அந்த ஆண்டவனின் ஆசிர்வாதமும் தேவை. இதற்கெல்லாம் நாம் ஏதாவது ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் தானே. சொந்தத் தொழிலில் வெற்றி காண செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக.

வியாபாரத்தில் வெற்றி பெற பரிகாரம்

திங்கட்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று, சிவபெருமானுக்கு வில்வ இலையை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பெயர் நட்சத்திரம் கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய மறக்காதீங்க. தொழில் ரீதியாக நோட்டிஸ், லிஸ்டிங் கார்டு, அல்லது பத்திரம் அக்ரிமெண்ட் பேப்பர் ஏதாவது இருக்கும் அல்லவா அதை அந்த சிவனின் பாதங்களில் வைத்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து எடுத்து தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளை பார்க்கவும்.

- Advertisement -

அதேபோல வாரம் தோறும் திங்கட்கிழமை நீங்கள் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் உங்கள் கைகளால் சப்பாத்தியை சிவனடியார்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். சிவன் கோவில்களில் சிவனடியார்கள் நிச்சயம் வருவார்கள். சிவனை தரிசனம் செய்ய நிச்சயம் ஒரு நாளைக்கு பத்து சிவன் அடியார்களாவது வருவார்கள். அவர்களுக்கு இந்த சப்பாத்தியை நீங்கள் தானம் கொடுக்க வேண்டும்.

முடிந்தால் உங்களுக்கு அனுமதி கிடைத்தால் இரண்டு சப்பாத்தியை சிவனுக்கு நிவேதனமும் வைக்கலாம். குருக்களிடம் கேட்டு இந்த ஒரு விஷயத்திற்கு அனுமதி வாங்கி சிவபெருமானுக்கு உங்கள் கையால் சப்பாத்தியை நிவேதனம் செய்து பாருங்கள். வியாபாரத்தில் இருக்கும் நஷ்டம் எல்லாம் லாபமாக மாறும். சிவனடியார்களுக்கு உங்களால் இந்த சப்பாத்தியை தானம் கொடுக்க முடியாத பட்சத்தில், சிவன் கோவிலுக்கு வெளியே யாசகம் கேட்கக்கூடிய அடியார்களும் இருப்பார்கள்.

- Advertisement -

அல்லது யாசகம் கேட்கக்கூடிய முதியவர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு உங்கள் கையால் இந்த சப்பாத்தியை தானமாக கொடுக்கும் போது நிச்சயம் லாபம் கிடைக்கும். எத்தனை திங்கட்கிழமை இப்படி செய்வது. அது உங்களுடைய மனதை பொருத்தது.

இதையும் படிக்கலாமே: இந்த முருகன் கோவிலுக்கு போனால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

3 வாரம், 5 வாரம் அல்லது வாழ்நாள் முழுவதும் இந்த தானத்தை செய்து வர நீங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே தான் செல்வீர்கள். அதில் எந்த ஒரு சந்தேகமும் மாற்று கருத்தும் கிடையாது என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -