இந்த முருகன் கோவிலுக்கு போனால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

murugan3
- Advertisement -

குழந்தை பாக்கியத்தை பெறுவதற்கு வேண்டிக்கொண்டு செல்லக்கூடிய கோவில்கள் நம்முடைய தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறது. அந்த வரிசையில் ஒரு அரிய கோவிலை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயமாக நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

டிரீட்மென்ட் எடுத்தும் இன்னும் குழந்தை தங்கவில்லை என்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். ட்ரீட்மெண்டிலும் சக்சஸ் ஆகலாம். குழந்தை பாக்கியம் தரக்கூடிய அந்த கோவில் எந்த இடத்தில் இருக்கிறது. அந்த கோவிலை பற்றிய அரிய தகவல்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் உங்களுக்காக இதோ.

- Advertisement -

குழந்தை வரம் தரும் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவில்

நாம் எல்லோருக்குமே பழனியில் இருக்கும் நவபாஷாண சிலையை பற்றி தான் தெரியும். ஆனால் பழனியை அடுத்து கொடைக்கானல் செல்லக்கூடிய வழியில் இந்த குழந்தை வேலப்பர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் சிலை தச பாஷான சிலை என்று சொல்லப்பட்டிருக்கிறது. நவபாஷாண சிலை என்றால் ஒன்பது பாசனத்தை கொண்டு செய்யக்கூடிய சிலை.

தச பாஷான சிலை என்றால் பத்து வகையான பாஷானங்களை கொண்டு செய்யப்பட்டுள்ள சிலை. இதுவும் போகரால் வடிவமைக்கப்பட்ட சிலை என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த கோவில் கொடைக்கானலில் இருந்து சரியாக 20 கிலோ மீட்டர் தொலைவில் பூம்பாறை எனும் கிராமத்தில் இருக்கின்றது. யார் நினைத்தாலும் இந்த கோவிலுக்கு செல்ல முடியாது.

- Advertisement -

அந்த குழந்தை வேலப்பர் நினைத்தால் தான் இந்த கோவிலை பற்றிய தகவல் உங்களுக்கு தெரியும். இந்த கோவிலுக்கு உங்களால் செல்லவும் முடியும். உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ யாருக்கேனும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தால் இந்த கோவிலுக்கு கட்டாயம் ஒருமுறை சென்று வாருங்கள்.

அங்கு சென்று குழந்தை வேலப்பரை தரிசனம் செய்துவிட்டு மனதார வேண்டுதல் வைத்துவிட்டு வரவும். நிச்சயமாக உங்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது மட்டுமில்லாமல் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள், கடன் பிரச்சனை உள்ளவர்கள், பண பிரச்சனை உள்ளவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

சில பேருக்கு நிலம் விற்காமல் இருக்கும். நிலம் வாங்க முடியாமல் இருக்கும். சொத்து பத்தில் பிரச்சனைகள் இருக்கும். வீடு கட்டி பாதியிலேயே நிற்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கும் இந்த முருகப்பெருமானை சென்று வழிபாடு செய்து விட்டு வரலாம். பழனி முருகர் மிகமிக பிரகபல்யமானவர். உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் அவரை பற்றி தெரியும்.

அந்த பழனி முருகனை வழிபாடு செய்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இந்த குழந்தை வேலப்பரை வழிபாடு செய்தாலும் கிடைக்கும். பழனி முருகரை நம்மால் கூட்ட நெரிசலில் ஐந்து நிமிடம் நின்று வழிபாடு செய்ய முடியாது. வேண்டுதலை வைக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பண வரவு அதிகரிக்க பீரோவுக்கு அடியில் இந்த இரண்டு பொருள்களை யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள்.

ஆனால் இந்த முருகர் கோவிலுக்கு சென்றால் நீங்கள் பொறுமையாக முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபாடு செய்து உங்களுடைய வேண்டுதலை வைத்து வரலாம். வாய்ப்பு கிடைத்தால் அற்புதம் வாய்ந்த இந்த திருத்தலத்திற்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -