வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து தொழிலதிபர் ஆகும் யோகத்தைப் பெற நாணயத்தை இதில் வைத்து பூஜை செய்து ஒளித்து வைத்து விடுங்கள். இதன் பிறகு வீடு வாசல் சொத்து என ஓஹோவென வாழ்வது உறுதி.

business man one rubee coin
- Advertisement -

சிறு தொழிலோ அல்லது பெரிய வியாபார நிறுவனமோ எதை தொடங்குவதாக இருந்தாலும் அதை நல்ல முறையில் நடத்தி லாபம் சம்பாதித்து பேரும் புகழுடன் வாழ வேண்டும் தான் தொடங்குவோம். இப்படி தொடங்கும் தொழிலானது எல்லோருக்கும் வெற்றியை தருவதில்லை. ஒரே தொழிலை பலர் செய்தாலும் ஒரு சிலர் அதில் வெற்றியை நோக்கி போய்க் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் தொடங்கிய இடத்திதிலேயே காணாமல் போய் விடுவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நம்முடைய எதிர்மறை ஆற்றல், பணத்தை ஈர்க்கும் சக்தி குறைவு போன்றவை இதில் முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

எந்த ஒரு தொழிலையும் தொடங்கும் முன்பு பலமுறை கலந்தாகோசித்து நம்முடைய நேரம் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு விடா முயற்சியுடன் கடுமையான உழைப்பையும் சேர்த்து கொடுக்கும் பொழுது அதில் நிச்சயம் முன்னுக்கு வரலாம். அத்துடன் நமக்கு தெய்வத்தின் அனுகிரகமும் அதில் லாபம் வர நம்மிடம் பண ஈர்ப்பு சக்தியும் இருக்க வேண்டும். அதற்கான ஒரு பரிகாரத்தை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய எந்த நாளை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் தவறில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாள் அன்று பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஏழு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். சில்வர் தட்டு வைக்க வேண்டாம். அதன் மேல் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். அன்று நாள் முழுவதும் இருக்கட்டும்.

மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு இந்த காயினை எடுத்து உங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாத இடங்களில், அதாவது நீங்களே கூட மறுபடியும் எடுக்க முடியாத இடத்தில் வைத்து விடுங்கள். இதே காயினை நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்திலும் வைத்து விடலாம். இந்த காயின் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு அதிகரித்து பணத்தை ஈர்த்து தக்க வைத்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்துடன் ஒரு சின்ன சிகப்பு நிற துணியில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து மூட்டையாக கட்டி நீங்கள் தொழில் செய்யும் இடத்தின் வாசலில் மேலே கட்டி விடுங்கள். இதை மாதத்திற்கு ஒரு முறை மாற்றினால் கூட போதும். வீட்டில் இந்த பரிகாரத்தை செய்து அந்த நாணயம் இருக்கும் பொழுது எப்படி பண வரவு ஏற்படுகிறதோ, அதே போல இந்த பரிகார மூட்டை இருக்கும் இடத்தில் தீய சக்திகள் நம்முடைய கெட்ட நேரங்கள் எதுவும் நெருங்காமல் பணவரவை உங்களுக்கு அதிகரித்து தர உதவி செய்யும்.

இவையெல்லாம் செய்வதோடு வெள்ளிக்கிழமை காலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றிய பிறகு அஷ்டலட்சுமி சோஸ்திரத்தை படிப்பது அமோகமான பலனை கொடுக்கும். இதை படிக்க நேரமில்லை எனும் போது அதை பாடலாக கூட ஒளிக்க விட்டு கேட்கலாம்.  இந்த அஷ்டலட்சுமி ஸ்தோத்திரமானது நம் வீடு வியாபாரம், செய்யும் இடத்தில் ஒலிப்பது அத்தனை பெரிய விசேஷத்தை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் தடை நீங்கி லாபம் அதிகரிக்குமாம்! அள்ள அள்ள குறையாத வருமானத்திற்கு லக்ஷ்மி தேவியை இப்படித்தான் வழிபட வேண்டும் தெரியுமா?

தொழில் செய்யும் இடத்தில் நாம் சிறந்து விளங்க முதலில் வீட்டிலிருந்து அதற்கான ஆற்றலை நாம் பெற வேண்டும். அப்படியான ஒரு பரிகார முறையை பற்றி தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். வீடு தொழில் என அனைத்து இடங்களிலும் சிறந்து விளங்கி ஓஹோ என்று வாழ இந்த பரிகார முறையை செய்து பலன் பெறுங்கள். நம்பிக்கை உடையவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்யலாம்.

- Advertisement -