இன்று இரவு இந்த முறைப்படி திருஷ்டி கழித்து பாருங்கள்! உங்கள் வீட்டை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண் திருஷ்டியை ஒரே நாளில் நெருப்பில் போட்டு பொசுக்கி விடலாம்.

neruppu
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கு வரும் கஷ்டங்களுக்கு காரணமாக இருப்பது இந்த கண் திருஷ்டியும் தான். ஓஹோவென இருந்த குடும்பங்கள் ஒன்றுமே இல்லாமல் போவதற்கு கூட இந்த கண் திருஷ்டி காரணமாக அமைந்துவிடும். இதனாலேயே நம்முடைய முன்னோர்கள் கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது என்று சொல்லுவார்கள். மாதத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள், அமாவாசை தினங்களில் அல்லது ஞாயிற்றுக்கிழமை தினங்களில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், உங்கள் வீட்டு வழக்கப்படி ஏதாவது ஒரு முறையில் திருஷ்டியை கழித்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நல்லதும் கூட.

dry-chilli-milagai

சரி, இன்றைய தினம் வைகாசி மாதம் வரக்கூடிய கடைசி சனிக்கிழமை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தான் திருஷ்டி கழிப்பதற்கு உகந்த தினம் என்று சொல்லுவார்கள். ஆனால் தாந்திரீக ரீதியாக இன்று இரவு 8 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழிப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

- Advertisement -

உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படும் கண்திருஷ்டி, உங்களுடைய முன்னேற்றத்தை தடை படுத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கும் எதிரிகளின் எதிர்மறையான எண்ணங்கள், அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்களுடைய வயிற்றெரிச்சல் என்று இப்படி உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் அத்தனையும் அழிந்து போவதற்கு இப்படி செய்தாலே போதும்.

neruppu

வீட்டில் இருக்கும் பெண்கள் இதை செய்ய வேண்டும். குடும்பத்தலைவி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழித்து விடலாம். உங்களுடைய இடது கையில் மூன்று வரமிளகாய், 1 ஸ்பூன் உப்பு, ஒரு கட்டி கற்பூரம், 1 சிட்டிகை மஞ்சள்தூள், இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்துவிட்டு, திருஷ்டி கழிக்க வேண்டும்.

- Advertisement -

திருஷ்டிக் கழிப்பவர், மேற்கு பார்த்தவாறு நின்று கொண்டிருப்பீர்கள். திருஷ்டியை எப்படி கழிப்பது? உங்களது கையை இடது பக்கம் மூன்று முறை முதலில் சுற்ற வேண்டும். அதன் பின்பு வலது பக்கம் மூன்று முறை சுற்ற வேண்டும். அதன் பின்பு ஏற்ற இறக்கமாக மூன்று முறை, ஏற்றி இறக்கி விட்டு உங்கள் கையில் இருக்கும் பொருட்களை அப்படியே கொண்டுபோய் வீட்டு வாசலுக்கு வெளியில் வைத்துவிட்டு, அந்த கற்பூரத்தை பற்ற வைத்து விடவேண்டும்.

uppu

வரமிளகாய் உப்பு மஞ்சள் தூள் எல்லாம் அந்த கற்பூரத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். கூடவே உங்கள் வீட்டில் இருந்த கண் திருஷ்டியும் எரிந்து பஸ்பமாகிவிடும். இது ஒரு சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம். முயற்சி செய்து பாருங்கள் உங்களுடைய வீட்டில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -