வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் துடைப்பத்தை இப்படி மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்! அமங்கலம் உண்டாகிவிடும். துடைப்பம் பற்றிய 10 ஆன்மீக குறிப்புகள்!

lakshmi-broom-thudaippam
- Advertisement -

நாம் வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் துடைப்பதில் கூட சாஸ்திர, சம்பிரதாயங்கள் நிறையவே அடங்கியுள்ளன. வீட்டை பெருக்கும் துடைப்பம் தானே என்று சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். துடைப்பதில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. லட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் துடைப்பமும் ஒன்று. இருப்பினும் அந்த துடைப்பத்தை எப்படி எல்லாம் பராமரிப்பது நமக்கு நன்மைகளை செய்யும்? துடைப்பத்தை எப்படி வைத்துக் கொள்ளக் கூடாது? என்கிற முழு ஆன்மீக தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

broom

குறிப்பு 1:
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் வீட்டை பெருக்கும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் எழுந்து இருக்க வேண்டும். அதாவது தூங்கிக் கொண்டே இருக்கும் பொழுது நீங்கள் வீட்டை பெருக்க கூடாது. அதே போல ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்தை பெருக்கக் கூடாது.

- Advertisement -

குறிப்பு 2:
துடைப்பத்தால் வீட்டை கூட்டும் பொழுது பெரிய பொருட்கள் வைத்திருந்தால் அதனை அகற்றி விட்டு அல்லது அதற்கு அடியில் கட்டாயம் துடைப்பத்தை வைத்துப் பெருக்கி விட வேண்டும். நீங்கள் பெருக்கும் பொழுது உள்ளிருந்து வெளிப்புறமாக குப்பைகளை அள்ளுவது போல பெருக்க வேண்டும். வெளியிலிருந்து உள்ளே வருவது போல குப்பையை தள்ளக் கூடாது.

broom-thudaippam1

குறிப்பு 3:
துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டு யாரிடமும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. கீழே போட்டு விட்டு கைகளை அலம்பி விட்டு பின்னர் அவர்களிடம் பேசலாம். அதே போல துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டு சமைப்பது கூடாது. சமையல் பொருட்களை தொடவும் கூடாது. சமையல் பொருட்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளைக் கூட நீங்கள் தொடக்கூடாது. துடைப்பத்தை ஒரு முறை கையில் எடுத்து விட்டால் நீங்கள் அதை வைத்து விட்டு நன்கு கைகளை கழுவிவிட்டு பின்னர் தான் மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 4:
ஒருவர் வெளியில் சென்றவுடன் உடனே துடைப்பத்தை எடுத்து வீட்டை கூட்டக் கூடாது. இது அமங்கலம் தரும் செயலாகும். வாசலை கூட்டி பெருக்குவது, வீட்டை கூட்டி பெருக்குவது, குளிப்பது போன்ற செயல்களை ஒருவர் வீட்டை விட்டு வெளியில் சென்ற உடனேயே செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகு இந்த வேலைகளை எல்லாம் நீங்கள் செய்யலாம்.

broom-thudaippam

குறிப்பு 5:
துடைப்பத்தை எப்பொழுதும் படுக்க வைக்க கூடாது. துடைப்பத்தை மற்றவர்கள் கண் பார்வையில் படும்படி வைக்கவும் கூடாது. துடைப்பத்தை படுக்க வைத்தால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிகமாக கோபம் வருமாம். தேவையற்ற சினத்தை பெண்களுக்கு உருவாக்கக் கூடிய இந்த செயலை யாரும் செய்யக்கூடாது. எனவே எப்பொழுதும் நேராக நிமிர்த்தி வையுங்கள்.

- Advertisement -

குறிப்பு 6:
துடைப்பத்தை எப்பொழுதும் நம் உயரத்தை விட அதிகமான உயரத்தில் ஆணி அடித்து மாட்டக் கூடாது. கதவிற்குப் பின்னால் மறைவாக தான் வைக்க வேண்டும். நீங்கள் ஆணி அடித்து மாட்டி வைப்பதாக இருந்தால் உயரம் குறைவாக ஆணி அடித்துக் கொள்ளுங்கள். துடைப்பம் உயரமான இடத்தில் இருக்கக் கூடாது அவ்வளவு தான்.

broom-thudaippam3
குறிப்பு 7:
துடைப்பத்தை கொண்டு வீட்டை பெருக்கும் பொழுது யார் மீதும் துடைப்பம் பட்டுவிடக்கூடாது, இது அமங்கலம் தரும் செயலாகும். மேலும் துடைப்பத்தை கொண்டு பெருக்கி கொண்டிருக்கும் பொழுது முடிகள் ஏதாவது தெரிந்தால் அதனை கைகளால் எடுத்து வெளியில் போட்டுவிட்டு பின்னர் பெருக்க வேண்டும். முடியுடன் சேர்த்து பெருக்கினால் துடைப்பதில் முடி மாட்டிக் கொள்ளும். அப்படி மாட்டிக் கொண்ட முடிகளை கைகளால் நகற்றி வெளியில் வீசிவிட வேண்டும். பின்னர் கைகளை அலம்பி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அப்படியே துடைப்பத்தில் முடிகளை சுற்றி வைப்பது தரித்திரம் உண்டாகும் செயலாகும்.

குறிப்பு 8:
துடைப்பத்தை எப்பொழுதும் ஒருவர் தாண்டி செல்ல கூடாது. லட்சுமி இருப்பதால் துடைப்பத்தை தாண்டி சென்றால் வந்த லட்சுமி வாசலிலேயே சென்று விடுவதாக ஐதீகம் உண்டு. வீட்டை கூட்டும் பொழுது தான் தொலைபேசியில் சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படியே போட்டு விட்டு அதனை தாண்டி வந்து எடுப்பார்கள் அப்படி செய்யக்கூடாது.

thudaippam1

குறிப்பு 9:
நீங்கள் வீட்டை கூட்டும் பொழுது பூஜை அறையை துடைப்பத்தை கொண்டு கூட்டக் கூடாது. எப்பொழுதும் துணியால் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி பூஜை அறையை பெரிதாக வைத்திருந்தால் நீங்கள் அதற்கென தனியாக ஒரு துடைப்பத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

thudaippam

குறிப்பு 10:
துடைப்பத்தை வைத்து நீங்கள் பெருக்கும் பொழுது உள்ளங்கைகளை கொண்டு முழுமையாக அழுத்தம் கொடுத்து பிடிக்க வேண்டும். அதே போல நின்று கொண்டே பெருக்கக் கூடாது. சற்று குனிந்து நிமிர்ந்து பெருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு இயற்கையாகவே அக்குபிரஷர் கிடைத்து நல்லதொரு ஆரோக்கியம் உண்டாகும்.

- Advertisement -