வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்! எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.

thulasi-amman
- Advertisement -

கணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம் நிச்சயம் வெற்றிதான். வீட்டில் இருக்கும் மனைவியே மகாலட்சுமியின் அம்சம். தினந்தோறும் அலுவலகத்திற்கு செல்லும் கணவராக இருந்தாலும் கூட, அவரின் அலுவலக பணிகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், சுமூகமாக செல்வதற்கு, மனைவி வழி அனுப்பி வைப்பது சிறப்பு. மனைவியின் முகத்தை பார்த்து விட்டு சென்றால், கட்டாயம் அதிர்ஷ்டம் தான்.

kan-thirusti

ஒரு குடும்பமானது மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில், அக்கம்பக்கம் இருப்பவர்களின் கண்திருஷ்டி, கட்டாயம் படாமல் இருக்காது. வசதி வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சில பேரது வீட்டில், நிம்மதிக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட வீடுகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே எல்லோருக்கும் ஒரு மன உறுத்தல் ஏற்படும். ‘ஐயோ! இவர்கள் வீட்டில் மட்டும் எவ்வளவு சந்தோஷம் நிலைத்திருக்கின்றது. வருமானம் குறைவு தான், எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள்?’ என்று பெருமூச்சு விட்டால் அவ்வளவுதான்.

- Advertisement -

இன்னும் சில பேர், சந்தோஷமாக இருக்கும் குடும்பம் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக, சில பிரச்சினைகளை தூண்டிவிடும் அளவிற்குக்கூட போவார்கள். உங்கள் கணவர் வீட்டை விட்டு கிளம்பும் போது அல்லது நீங்கள் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லும் போதோ, அபசகுனமாக குப்பைகளை கொண்டு வந்து ரோட்டில் வீசுவது, அசுத்தமான தண்ணீரை ஊற்றுவது, அல்லது இவர்கள் செல்லும் காரியம் வெற்றியாக முடியக் கூடாது என்று சாபம் விடுவது, போன்ற பிரச்சினைகளில் ஈடுபடும் பல பேர் உள்ளார்கள். இதில் நம் உறவுகளும் அடங்கும். அக்கம்பக்கத்தினரும் அடங்குவார்கள்.

dust-bin

பொத்தாம் பொதுவாக எல்லாரையும் கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் என்று குறை கூறி விட முடியாது. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளாத நல்ல எண்ணம் கொண்டவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலபேர் வெளிப்படையாக தங்களது எதிர்ப்புகளை காட்டுவார்கள். சிலபேர் நமக்கு பின்னால் நமக்கே தெரியாமல் குழி தோண்டி வைத்துவிடுவார்கள். என்ன செய்வது? இப்படிப்பட்டவர்களின் கெட்ட எண்ணத்திற்கு பலியான குடும்பம் எத்தனையோ உள்ளது. அந்த வரிசையில் நாமும் சிக்கிக் கொள்ளக் கூடாது அல்லவா? எப்போதும் நாம் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதுதான் நல்லது.

- Advertisement -

துளசி செடியை பற்றி நமக்கு தெரியாத மகத்துவமே கிடையாது. ஆனால், அந்த துளசி செடிக்கு இப்படி ஒரு அபூர்வ சக்தி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்தி, துளசிச் செடியை 15 வினாடிகள் பார்க்க வேண்டும். அதாவது துளசிச் செடியை அந்த பசுமை நிறத்தை, அழகான தோற்றத்தை உங்கள் மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டு, கண்களை மூடி ஒரு நிமிடம் துளசி தேவியை வேண்டி கொண்டு, வீட்டில் இருந்து செல்லும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படும் எப்படிப்பட்ட சகுன தோஷமாக இருந்தாலும் சரி, யாருடைய பெரும் மூச்சாக இருந்தாலும் சரி, கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி, அந்த தோஷம் உங்களையும் உங்களது வீட்டையும் தாகவே தாக்காது என்று சொல்லப்பட்டுள்ளது.

thulasi

இது ஒரு சுலபமான முறை தான். ஆனால், உங்களுடைய வீட்டில் துளசிச் செடி, ஒரு சிறிய தொட்டியிலாவது வைத்து, நீங்கள் பராமரிக்க வேண்டியது அவசியம். உங்களால் முடியும் பட்சத்தில் இதை பின்பற்றிப் பாருங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் வெகுவாக குறைவதை உங்களால் உணர முடியும். உங்களுடைய வீட்டில் இருக்கும் ஆணுடைய வெற்றியாக இருந்தாலும், பெண்ணுடைய வெற்றியாக இருந்தாலும் எந்த விதத்திலும் தடைபடாது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமை காலை, வாசலில் இந்த கோலம் போட்டால், மகாலட்சுமி சந்தோஷமாக வீட்டிற்குள் வருவாள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thulasi chedi. Kariyam vetri pera Tamil. Thulasi mahimai Tamil. Tamil Thulasi plant Tamil. Tulsi plant benefits in Tamil.

- Advertisement -