கணவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மனைவி செய்ய வேண்டிய பரிகாரம்

thulasi
- Advertisement -

உங்களுடைய கணவரின் வாழ்க்கையில் ஏதாவது தீர்க்க முடியாத பிரச்சனை இருக்குதா. வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, பொருளாதாரத்தில் பிரச்சனை, கடன் தொல்லை, அவரால் நிம்மதியாகவே வாழ முடியவில்லை எனும் பட்சத்தில், அவருக்காக நீங்க இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

உங்களுடைய கணவருக்கு இருக்கும் அந்த ஒரு பெரிய கஷ்டம் குறைந்தது 11 நாட்களுக்குள் சரியாகிவிடும். அப்படி சரியாகவில்லை என்றால், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஏதாவது ஒரு விடிவு காலத்தையாவது கடவுள் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான். கணவரின் நலனுக்காக மனைவி செய்ய வேண்டிய அந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு என்ன. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

துளசி வழிபாடு

உங்களுடைய வீட்டில் இதற்கு முதலில் துளசி செடி இருக்க வேண்டும். காலையிலேயே மனைவி எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, அந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். காப்பர் பாத்திரத்தில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டில் பூஜையறையில், பஞ்சபாத்திரம் பெரும்பாலும் செம்பால் செய்யப்பட்டதாக தான் இருக்கும். அதை வைத்தே இந்த பரிகாரத்தை செய்யலாம்.

நம் வீட்டில் இருக்கும் அந்த பஞ்சபாத்திரம் சின்னதாக இருந்தால் கூட பரவாயில்லை. அதில் தண்ணீரை எடுத்து எடுத்து இந்த துளசி செடிக்கு ஊத்துங்க. அப்படி துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றும்போது கணவருடைய தீராத பிரச்சனை இருக்கும் அல்லவா. அதில் இருந்து ஒரு பிரச்சனையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு, அவருக்கு அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று இந்த தண்ணீரை ஊற்றி அந்த துளசி செடிக்கு முன்பாக மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

11 நாள் மனைவி, கணவரின் பிரச்சினை தீருவதற்கு இந்த வழிபாட்டை செய்து மகாலட்சுமியை பிரார்த்தனை செய்தாலே போதும். உங்கள் கணவருக்கு இருக்கும் பிரச்சனை தீரும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, பொருளாதாரமல்லாது வேறு ஏதாவது பிரச்சனையில் கணவர் சிக்கி இருந்தாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பாருங்கள்.

இதே போல கணவருக்கு பொருளாதாரத்தில் மட்டும் சிக்கல் இருக்கிறது. லட்ச லட்சமாக கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். அந்த அளவுக்கு சிக்கலில் சிக்கிருந்தால், மனைவியாகிய நீங்கள் வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கணும்.

- Advertisement -

விரதம் என்றால் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு லட்சுமி நரசிம்மரை மனதார நினைத்து, முடிந்தால் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி உங்கள் கணவருக்கு இருக்கக்கூடிய அந்த பண பிரச்சனை சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை கொடுக்கும் செடிகள்

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே லட்சுமி நரசிம்மரை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பெரிய அளவில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் 48 நாள் தொடர்ந்து இந்த வழிபாட்டை மனைவி செய்தால் நிச்சயம் கணவருக்கு இருக்கும் பிரச்சனை சரியாகும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலோடு, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -