செல்வ வளத்தை கொடுக்கும் செடிகள்

mahalashmi5
- Advertisement -

பண ஈர்ப்பை அதிகரிக்க செய்யக்கூடிய இரண்டு செடிகளை பற்றித்தான் நாம் பார்க்க போகின்றோம். இந்த இரண்டு செடிகளுமே நமக்குத் ரொம்பவும் தெரிந்த செடிகள் தான். ஆனால் இந்த செடியை வைப்பதில் உள்ள சூட்சமத்தை தெரிந்து கொண்டால் சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம். செல்வ வளத்தை கொடுக்கப் போகும் அந்த இரண்டு செடிகள் என்னென்ன. அந்த இரண்டு செடிகளை நம்முடைய வீட்டில் எப்படி நட்டு வைத்து வளர்க்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

செல்வ வளம் தரும் செடிகள்

முதலில் அந்த இரண்டு செடிகள் என்ன என்பதை பார்த்து விடுவோம். மணி பிளான்ட். பேரிலேயே இது காசை வைத்திருக்கிறது. நாம் எல்லோருக்கும் தெரியும் மணி பிளான்ட் வைத்தால் பணம் சேரும் என்பது. ஆனால் இப்போது எல்லோர் வீட்டிலும் மணி பிளான்ட் இருக்குது. ஆனால் கையில் money இல்லை.

- Advertisement -

இந்த செடியை வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் வையுங்கள். தொட்டியில் வைத்தாலும் சரி, அல்லது ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைத்தாலும் சரி, வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் உங்கள் வீட்டிற்குள் இந்த செடியை கொண்டு வர வேண்டும். சுக்கிர ஹோரையிலேயே இந்த செடியை வீட்டில் நட்டு விட வேண்டும்.

இந்த செடியை பாட்டிலில் தண்ணீரில் வைப்பதாக இருந்தால், அந்த தண்ணீரில் ஒரு சொட்டு காய்ச்சாத பசும் பாலை விட்டு, இதோடு ஆறு 1 ரூபாய் நாணயங்களை சேர்த்து, வையுங்கள். மண்ணில் வைப்பதாக இருந்தால் அந்த மண்ணில் ஆறு, 1 ரூபாய் நாணயத்தை புதைத்து விடுங்கள்.

- Advertisement -

தினமும் மணி பிளான்ட் செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது இந்த மணி பிளான்ட் வளருவது போல என்னுடைய கையிலும் காசு பணம் மேலும் மேலும் சேர வேண்டும், வீட்டு செல்வ வளமும் வளர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டே தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் பேசுவது செடிக்கு கேட்கும். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலும் நிறைவேறும்.

அடுத்து நாம் பார்க்கக் கூடிய செடி நெல்லி செடி. உங்களுடைய வீட்டில் பூமியில் இந்த செடியை வைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் பூமியிலேயே இந்த செடியை வைக்கலாம். அதுவும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு நெல்லி செடியை நட்டு வைத்து மகாலட்சுமியை நினைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரில் 2 துளசி இலைகளை போட்டு நெல்லி செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள். மகாலட்சுமியை நினைத்து இந்த செடியை வளர்த்து வாருங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை இப்படி நட்டு வைத்த அந்த நெல்லி செடியானது இரண்டு அடிக்கு உங்களுடைய வீட்டில் செழிப்பாக வளர்ந்து விட்டால் போதும். அதற்குப் பிறகு உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது. அதிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் ரொம்ப ரொம்ப பெரிய ஆளா மாறிடுவீங்க. உங்களுடைய செல்வ வளம் உயர்ந்து கொண்டே செல்லும். வீட்டில் பூமியில் இந்த செடியை வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் சிறிய தொட்டியில் இந்த செடியை வைத்து வளர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்க வீட்டில் ஏற்கனவே இந்த இரண்டு செடிகளும் இருந்தால் வெள்ளிக்கிழமை அன்று மேல் சொன்ன முறைப்படி தண்ணீரை அதற்கு ஊற்றுங்கள். உங்களுக்கும் செல்வ வளம் அதிகரிக்கும். செடிகளுக்கு உயிர் இருக்குதுங்க. நீங்க சொல்வதை அது நிச்சயம் கேட்கும்.

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் நீங்க பௌர்ணமி தின சிவ வழிபாடு

பாசிட்டிவ் எனர்ஜியோடு, பணம் அதிகமாக வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள். ஒரு நிமிடம் நேரத்தை ஒதுக்கி அந்த செடிகளிடம் பேசுங்கள். நிச்சயம் உங்கள் செல்வ வளர வளம் வளர இந்த செடிகள் உதவி பண்ணும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -