பெண்கள் இதை நெற்றியில் இட்டுக்கொண்டு என்ன வேண்டிக் கொண்டாலும் அது உடனே நடக்கும். மகாலட்சுமி சொரூபமாக பெண்ணை மாற்றக்கூடிய சக்தி இந்த 1 இலைக்கு உண்டு.

kungumam-kumkum
- Advertisement -

இந்த பூமியில் படைக்கப்பட்ட பெண்கள் எல்லோருமே மகாலட்சுமியின் ஸ்வரூபம் கொண்டவர்கள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக வளமாக பல தலைமுறைகள் தழைக்க வேண்டும் என்றால் அது அந்த குடும்பத்தின் பெண்ணின் கையில் தான் உள்ளது. பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதற்காக கர்வம் கொண்டு தலை கனத்தோடு பெண்கள் நடக்கவே கூடாது. சரி, தங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க பெண்கள் நினைக்கக் கூடிய நல்ல காரியங்கள் எல்லாம் உடனடியாக நடக்க, ஆன்மீக ரீதியாக எதை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய ஒரு சிறிய பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய பாரம்பரிய வழக்கப்படி திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் சரி, தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும். அதுதான் நம்முடைய பண்பாடு. இதை நிறைய பேர் இன்று மறந்து வருகின்றோம். கூடுமானவரை இரண்டு புருவத்திற்கு நடுவே கட்டாயமாக குங்குமம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

காரணம் பெண்களுடைய உடம்பில் ஊடுருவக்கூடிய கெட்ட சக்தியானது அந்த இரண்டு புருவத்தின் மத்தியில் தான் செல்லும் என்பது நம்முடைய முன்னோர்களின் கணிப்பு. அந்த இடத்திற்கு ஒரு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

இந்த குங்குமத்தை வைத்து தான் இன்று பரிகாரத்தை பார்க்க போகிறோம். இரண்டு துளசி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய உள்ளங்கையில் வைத்து லேசாக கசக்க அதிலிருந்து சாறு வெளியேறும். அந்த சாறுடன் கொஞ்சமாக குங்குமத்தை கலந்து அந்த குங்குமத்தை பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளவேண்டும். திருமணமான பெண்கள் இதை நெற்றியில் இரண்டு புருவத்தின் மத்தியில், வகுட்டிலும் வைத்துக்கொள்ளலாம். திருமணம் ஆகாத பெண்கள் இதை நெற்றியில் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி இந்த துளசி சாறு கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு உங்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்று நினைத்து குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஏதாவது ஆசை கனவு இருக்கும் அல்லவா. வீடுகட்ட, நிலம் வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று எந்த ஆசையை வேண்டுமென்றாலும் மனதில் வைத்துக்கொண்டு இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வர, நீங்கள் நினைத்தது கூடிய சீக்கிரத்தில் அப்படியே பலிக்கும். சில பெண்கள்லால் குங்குமம் இட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும் அல்லவா. அவர்கள் வெறும் துளசி சாறை மட்டும் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இட்டுக்கொண்டு வேண்டினாலும் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்து இப்படி திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளக் கூடாது. பொதுவாக பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்ளும் போது அடுத்தவர்கள் கேட்டு போகவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இருந்த போதிலும் இந்த பரிகாரத்தை தவறான எந்த காரியத்துக்கும் நம்மால் பயன்படுத்த முடியாது. அது பளிக்கவும் செய்யாது. நல்ல எண்ணத்தோடு நாம் செய்யக்கூடிய எந்த பரிகாரமாக இருந்தாலும் அது நமக்கு பல மடங்கு பலனை கொண்டு வந்து சேர்க்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -