துளசிச் செடியை இப்படி வழிபாடு செய்தால் நீண்ட நாட்களாக அடைக்க முடியாத கடனை அடைப்பதற்கு சீக்கிரத்தில் ஒரு வழி கிடைக்கும். வராத பணம் கூட உங்கள் வீடு தேடி வரும்.

thulasi-cash
- Advertisement -

துளசி செடியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். துளசிச்செடி யார் வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக லட்சுமிகடாட்சத்திற்கு குறைவு இருக்காது. அந்த துளசி செடியை முறையாக யார் வீட்டில் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்கள் வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. வீட்டின் வறுமையைப் போக்கக் கூடிய துளசி செடி வழிபாட்டை முறையாக எப்படி செய்து வந்தால் நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்தில் இருந்து விடுபடலாம் என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, துளசி மாடத்திற்கு தினமும் மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, துளசி மாடத்திற்கு பக்கத்தில் ஒரு மண் அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். துளசி மாடத்திற்கு முன்பாக ஒரு அரிசி மாக்கோலம் இட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு துளசிச் செடிக்கு நிவேதனமாக 2 ஸ்பூன் பால் வைத்தால் கூட அதுவே போதுமானது. ஒரு சிறிய வெள்ளை பட்டுத்துணியில் சிறிதளவு வெந்தயத்தை வைத்து முடிச்சாக கட்டி துளசி செடிக்கு அருகில் வைத்து விடுங்கள். அதன்பின்பு துளசி தேவியிடம் மகாலட்சுமி தாயாரிடம் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை சொல்லி, அதாவது கடன் பிரச்சினையாக இருக்கலாம், கடன் தொகை வசூல் ஆகாமல் இருக்கலாம், வீட்டில் பண கஷ்டம் இருக்கலாம். வீட்டில் இருப்பவர்களுக்கு வருமானத்தில் தடை இருக்கலாம். அந்த பிரச்சினைக்கு எல்லாம் சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கவேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிரார்த்தனையை முடித்துவிட்டு துளசிச் செடிக்கு அடியில் வைத்திருக்கும் அந்த வெந்தயத்தை முடிச்சோடு எடுத்துக்கொண்டு போய் உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விட வேண்டும். தினமும் இதே முடிச்சு இருக்கட்டும். முடிச்சையும் வெந்தயத்தையும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினமும் காலையில் எழுந்து பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் இருக்கும், இந்த முடிச்சை கொண்டு வந்து துளசி மாடத்திற்கு அடியில் வைத்துவிட்டு, அதாவது துளசி செடிக்கு அடியில் வைத்துவிட்டு உங்களுடைய துளசி பூஜையை தொடங்க வேண்டும். பூஜை முடிந்த பின்பு அந்த முடிச்சை கொண்டு போய் பீரோவில் வைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

தினசரி இந்த வழிபாட்டை செய்து வரும்போது நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு, கடன் சுமைக்கு கூடிய சீக்கிரத்தில் விமோசனம் கிடைத்து விடும். தினமும் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாள் வெள்ளிக்கிழமை செவ்வாய்கிழமைகளில் செய்யலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதிகாலையில் கண் விழிக்க முடியாதவர்கள், காலை 7 மணிக்கு முன்பாக இந்த பூஜையை முடித்து விடுவது சிறப்பு.

உங்களுடைய கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்தவுடன் வெள்ளை பட்டு துணியில் முடிந்து வைத்து இருக்கும் வெந்தயத்தை அவிழ்த்து எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். அல்லது செடி கொடிகளுக்கு கீழே அந்த வெந்தயத்தை அப்படியே தூவி விட்டு விடுங்கள். மனதார துளசி தேவியிடம் இந்த முறைப்படி அதாவது வெந்தயத்தை வைத்து வேண்டுதல் வைக்கும் போது ஒரு சில நாட்களிலேயே நிச்சயமாக பலன் உங்களை வந்து சேரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருதுவது இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -