உங்களை சுற்றி நடக்கும் இந்த சின்ன சின்ன விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் இருந்தாலே போதும். கிரங்களினால் வரப் போகும் பெரிய பெரிய பிரச்சனைகளை சுலபமாக சமாளித்து விடலாம். வரப் போகும் அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்.

kethu insect man
- Advertisement -

மனிதனின் மனம் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை சில நேரங்களில் சந்தோஷமாகவும், சில நேரங்களில் துக்கமாகவும், சில நேரங்களில் கவலையுடனும் இருக்கும். இதற்கு நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு காரணமாக இருப்பினும் சில நேரங்களில் காரணமே இல்லாமல் நாம் ஏதோ சோர்வுற்று இருப்பது போலவும், எதிலும் நாட்டம் இல்லாமலும் இருக்கும். இதற்கெல்லாம் நம்முடைய கிரக நிலைகளின் மாற்றமும் ஒரு காரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது. கிரக நிலைகளின் மாற்றத்தினால் ஏற்படும் இந்த மன மாற்றம் நமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்பட்டயிருக்கிறது. அதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் கிரகங்களின் அமைப்பின்படி தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. கிரகங்கள் நமக்கு சாதகமாக இருக்கும் பொழுது எல்லாம் நன்மையாக நடக்கும். அதே கிரகங்கள் நமக்கு பாதகமாக இருக்கும் சூழ்நிலையில், நல்லதே நினைத்து செய்தாலும் நமக்கு அது கெடுதலில் தான் முடியும். இது போன்ற கிரக நிலை நமக்கு சரியில்லை என்பதை உணர்த்த நம் வீட்டில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை நாம் சற்று கூர்ந்து கவனித்தாலே போதும் என்று சாஸ்திரம் முதல் நம் முன்னோர்கள் வரை சொல்லியிருக்கிறார்கள்.

- Advertisement -

நம் வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை வீட்டில் ஒட்டடை சேரக் கூடாது வீட்டில் பூச்சி, பொட்டுகள் அண்ட கூடாது. அதிலும் கரப்பான் பூச்சி, பூரான் போன்றவை வீட்டில் வரக் கூடாது. வீட்டை எப்போதும் தீட்டு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் அடிக்கடி ஒட்டடை சேர்ந்தால், கரப்பான் பூச்சோ அல்லது பூரான் போன்றவை வந்தால் நமக்கு பிரச்சனை வருவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகளாக அவர்கள் உணர்த்தினார்கள்.

ஒரு மனிதனின் வாழ்வில் கேது கிரகமானது சரியில்லாத போது தொடர்ந்து பிரச்சினைகள் எழும். இதற்கான முன் அறிகுறிகள் தான் இப்படி எல்லாம் நடப்பது. வீட்டை சுத்தம் செய்து இரண்டு நாள் தான் ஆகி இருக்கும் அதற்குள் மறுபடியும் ஒட்டடையை அடைந்திருக்கும். அதே போல் வீட்டை எப்போதும் சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் அடிக்கடி கரப்பான் பூச்சி, பூரான் போன்றவவை வந்து அடையும்.

- Advertisement -

கேது கிரகத்திற்கு தலை இல்லை இதனால் கேது கிரகத்தின் பாதிப்பு இருக்கும் போது மூளை கெட்ட தனமாக செயல்களை நாம் செய்வோம் என்று சாஸ்திரம் சொல்கிறது. சிலந்தி பூச்சியானது தான் பின்னும் வலையில் தானே சிக்கி இறந்து விடும். இது போல் நம் மனம் எந்த முடிவையும் தெளிவில்லாமல் எடுத்து சின்ன பிரச்சனைகளை கூட சரியாக கையாளாமல் பெரிய சிக்கல்களில் மாட்டிக் கொள்வோம். இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டில் ஒட்டடை சேர்ந்தால் கஷ்டம் வரும் என்று சொல்லி வைத்தார்கள்.

இதற்கு பசுங்கோமியம் அல்லது மஞ்சள் இரண்டில் ஒன்றை வைத்து வீட்டை சுற்றி அடிக்கடி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். இவற்றை நாம் பாத்திரம் தேய்க்கும் இடம் நம் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கும் இடம் இருந்தால் அங்கு தெளித்தால் பூச்சி பூரான் போன்றவை வராது. அதோடு ஒட்டடை சேர்ந்தால் அதை உடனே சுத்த படுத்தி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர முருகர் பரிகாரம்

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பெரிய பிரச்சனைகளை இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை மூலம் நமக்கு தெய்வங்கள் உணர்த்தும். இதை நாம் புரிந்து கொண்டு அதை உடனே சரி செய்து விட்டால் அதனால் வரக்கூடிய பெரிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுப்பட முடியும். வீட்டில் ஒட்டடை, பூச்சி பொட்டு அடையக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொன்ன ஒரு வார்த்தைக்கு பின்னால் இத்தனை பெரிய அர்த்தங்கள் உண்டு. இது போன்ற விஷயங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது என்று கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -